Subscribe Us

வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களும் தமிழ் அரசியல் சமூகமும்


செப்டம்பர் 07, 2009 அன்று ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட சந்திப்பு, கூட்டமைப்பின் அரசாங்கம் தொடர்பான நடத்தையில் முக்கிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக மாற்றமடைந்துள்ள புதிய அரசியல் சூழலிலேயே இது நிகழ்ந்துள்ளது.
ஏனைய விடயங்களைப் பேசியதற்கு மத்தியில் 1990ல் புலிகளால் பலவந்த மாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீள்குடி யேற்றம் பற்றியும் அவர்கள் பேசி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களது விவகா ரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக முன்னெடுத் திருப்பது இதுவே முதன் முறை யாகும்.
வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீளத் திரும்பும் உரிமையை பகிரங்கமாக அங்கீகரிப் பதற்கும் அவர்களது விடயத்தை அனுதாபத்துடன் நோக்குவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் அங்கத்துவக் கட்சிகளுக்கும் 19 நீண்ட வருடங்கள் தேவையாய் இருந்திருக்கிறது.
வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் கவனமெடுத்திருப் பதற்கு, அதன் ஒரே யொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரான ஆர். எம். இமாமின் அழுத்த மும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ரெலோ பாராளுமன்ற உறுப்பின ரான என். சிறிகாந்தா அதற்களித்த ஆதர வுமே முக்கிய காரணம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறிகாந்தா பாராளுமன்ற உறுப்பினராக ஆவதற்கு சந்தர்ப்பமாய் அமைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்; வெளியேற்றப்பட்ட வட க்கு முஸ்லிம்கள் மீது நீண்டகால மாக அனுதாபமுள்ளவராக இருந்து வந்தார். வெளியேற்றப் பட்ட வட புல முஸ்லிம்கள் கடந்த 19 வருடங் களாக துன்பத்திற்கு உள்ளாகி வசித்து வரும் புத்தளம் அகதிமுகாம்களுக்கு இதுவரை விஜயம் செய்தி ருந்த ஒரேயொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப் பினர் ரவிராஜ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தைக் கையிலெடுத்தி ருப்பது வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தில் எந்தவொரு திடீர்த் திருப்பத்தை யும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே வெளி யேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்க ளது கிராமங்களை நோக்கி கொஞ் சம் கொஞ்சமாக செல்லத் தொடங்கி விட்டனர்.
அவர்களுக்கு முன்னே பல சவால்கள் உள்ளன. தேவாலயங் களும் அதிகார வர்க்கத்தினரும் மன்னாரின் சனப் பரம்பலை மாற்றி யமைப்பதற்கு அல்லும் பகலுமாக உழைத்து வருகின்றனர். வெளியேற் றப்பட்ட முஸ்லிம்கள் மீளக் குடி யேறினாலும் இந்த சனப் பரம்பல் பெரியளவு பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக உள்ளனர்.
ஜனாதிபதியுடனான கூட்டமைப் பினரின் சந்திப்பின்போது கலந்து கொண்ட மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூட இனச் சுத்திகரிப்பின் பாதிப்புக்குள் ளானவர்தான். அனைத்து அகதி களையும் மீள்குடியேற்றும் பொறுப்பு அவருக்குத்தான் வழங்கப்பட்டி ருக்கிறது. கூட்டமைப்பு எம்.பி.யான இமாம் கூட இனச் சுத்திகரிப் பின் பாதிப் புக்குள்ளானவர்தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ரின் வடக்கு முஸ்லிம்கள் சார்பான இந்தக் குரலை, அம்மக்கள் பற்றிய அவர்களது அக்கறையாகவும் ஆதர வுக் குரலா கவுமே முஸ்லிம்கள் பார்க்கின்றனர். புலிகள் அழிக்கப் பட்டதன் பின்னர் கடைசியில் ஒருவாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களது மீள்குடி யேற்றத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளது. ஆனால், சில புகலிடத் தமிழர்களும் ஈ.பி.டி.பி., புளொட் தவிர்ந்த தமிழ்த் தலைவர் களும் வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றத் திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக் காமல் உள்ளனர்.
அகதிகள் தொடர்பாக எங்கு, எப்போது பேசினாலும் தமிழ் அகதிகள் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் பற்றிய அனுதாபத்தை யேனும் அவர்கள் வெளிப்படுத்த வில்லை.
இவ்வருடம் ஜூலை மாதம் புகலிடத் தமிழர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து வன்னி அகதி முகாம்களுக்கும் சென் றது. அவர்கள் அங்கும் கிழக்கிலும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை சந்தித்துப் பேசினர். அவர்களால் புத்தளத்திலோ அனுராதபுரத்திலோ உள்ள அகதி முகாம்களுக்குச் செல்ல முடியவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத் தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்தக் குறையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தமிழ் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புகலிடத்தில் வாழும் தமிழர்கள் ஆகியோர் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ் லிம்கள் தொடர்பாக மௌனமான போக்கையே கடை பிடிக்கின்றனர். கடந்த காலங்களில் இந்த இனச் சுத்திரிப்பின் காரண கர்த்தாக்களான புலிகள் செயற் பட்டுக் கொண்டிருந்ததால், இந்த மௌனத்தை அவர்கள் நியாயப் படுத்த அது ஒரு வசதியான காரண மாக இருந்தது.
ஆனால், தமக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, தமது சக சமூகத்தி னருக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் காட்டுவதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாகும். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவது இந்த வகையில் பொருத்தமானது.
meelparvi

0 Comments:

Post a Comment