Subscribe Us

வெள்ளை மாளிகையில் இஃப்தார் விருந்து அளித்தார் பராக் ஒபாமா



ரமலான் நோன்பை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஃப்தார் விருந்து அளித்தார். இதில் அமெரிக்க வாழ் முஸ்லிம்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.உலகில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும், அமெரிக்காவுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்த ஒபாமா, விருந்திற்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் பற்றி தமக்கு ஏதும் தெரியாது என்றாலும், அவை சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நகைக்சுவை பொங்கப் பேசினார்.ஒபாமாவுக்கு முன் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷும், வெள்ளை மாளிகை இஃப்தார் விருந்து அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment