Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சூடு பிடிக்கும் ஹாட் மெயில்

கிமைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஹாட்மெயில் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தர வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது. ஹாட்மெயில் - ஒரு காலத்தில் இலவச இமெயில் என்றாலே, அது ஹாட்மெயில் என்று இருந்தது.
இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா உருவாக்கி, இணைய உலகில் சக்கை போடு போட்டது. பின் இந்த தளத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் அதனை அப்படியே இயக்கத் தொடங்கியது.

யாஹ¥ மெயில் முந்திக் கொள்ள, ஹாட் மெயில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இடையே வந்த கூகுளின் ஜிமெயில், புயல் வேகத்தில் வசதிகளைத் தரத் தொடங்கியவுடன், அதன் இடத்தை யாரும் நெருங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புதிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை, வேறு சிந்தனையின்றித் தன் பக்கமே இறுத்திக் கொண்டது ஜிமெயில். இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது.

மைக்ரோசாப்ட் இப்போது, தன் முழுக் கவனத்தினை ஹாட் மெயில் பக்கம் திருப்பியுள்ளது. அதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து, புதிய பொலிவான, பயனுள்ள இயக்கத்தினைத் தர முயற்சிக்கிறது. இந்த புதிய தளம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.

இருப்பினும் தற்போது உருவாகி வரும் புதிய வசதிகள் குறித்துக் கிடைத்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றைப் படித்த பின்னர், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய உறவை நிச்சயம் புதுப்பிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

மெயில் கட்டமைப்பு புதியதாகத் தரப்படும் பல வசதிகள், வெப்மெயில் தளங்களில் இதுவரை இல்லாத புத்தம் புதிய வசதிகளாகவே உள்ளன என்பது இவற்றின் சிறப்பாகும். ஜிமெயிலில் கூட இவற்றிற்கான இணை வசதிகள் இல்லை என்று கூடச் சொல்லலாம். ஜிமெயில் அடுத்தடுத்து வரும் இமெயில் மெசேஜ்களை ஒரு உரையாடல் போலத் தொகுதித்துத் தருகிறது.

இது ஜிமெயிலைப் பொறுத்தவரை மாறாததாக உள்ளது. இப்படித்தான் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜிமெயில் எதிர்பார்க்கிறது. ஆனால் ஹாட் மெயில் இதில் நம் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறது. பழையபடி வரிசையாக வைத்துக் கொள்ளலாம். அல்லது ஜிமெயில் போல உரையாடலாகவும் மேற்கொள்ளலாம்.

இரண்டிற்கும் ஆப்ஷன் தரப்படுகிறது. இது நிச்சயம் ஒரு வரவேற்கத்தக்கதாக இருக்கும். மற்ற வசதிகள் அனைத்தும் இரண்டு வகைகளில் உள்ளன. குழப்பமான இன்பாக்ஸைச் சரி செய்பவை. அடுத்து மெசேஜ்களுடன் வரும் போட்டோ, டாகுமெண்ட் மற்றும் பிற இணைப்புகளின் அடிப்படையில், இமெயில்களைக் கையாண்டு காட்டும் வசதிகளாகும்.

பிடிக்காத இமெயில் ரத்து : ஒருவர் அனுப்பிய மெசேஜ்கள் உங்களுக்கு அறவே பிடிக்கவில்லை! என்ன செய்வீர்கள்? வந்து விழுந்த இமெயில் மெசேஜ்களை மொத்தமாக செலக்ட் செய்து அழித்துவிடுவீர்கள். அடுத்து மீண்டும் அவர் அனுப்பினால்? ஹாட் மெயிலில் இனி அந்த இமெயில் முகவரியிலிருந்து மெசேஜ் வந்தால், ஹாட் மெயில் தானாகவே அழித்துவிடும்.

இதன் மூலம் குப்பை மெயில்கள் உங்கள் இன் பாக்ஸை நிரப்புவது தடுக்கப்படும். புதிய வியூ மெனு : புதியதாகத் தரப்படும் இந்த வியூ மெனு மூலம், நீங்கள் படிக்காத மெசேஜ்களைத் தனியே பட்டியலிடுதல், குறிப்பிட்ட முகவரியிலிருந்து கிடைக்கும் மெயில்களை மட்டும் காணுதல், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களிலிருந்து வந்த மெயில்களை மட்டும் பார்த்தல் ஆகிய வகைகளில் பார்க்கலாம்.

மேலும் இடது பக்கம் தரப்படும் “Quick views” மெனுவின் மூலம், நீங்கள் குறித்து வைத்த மெயில்கள், போட்டோக்கள் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், டாகுமெண்ட் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், கூரியர் நிறுவனங்களிலிருந்து வந்துள்ள மெயில்கள் மட்டும் எனத் தனித் தனிப் பட்டியல்களாக மெயில்களைக் காணலாம்.
போட்டோக்கள் அட்டாச் செய்யப்பட்டு அல்லது போட்டோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டு மெயில்கள் வந்தால், அவை தனியே ஒதுக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள், உங்கள் இன்பாக்ஸ் மீது பிரசன்டேஷன் தொகுப்பாகக் காட்டப்படும். ஆனால் இந்த வசதி பிகாஸாவில் உள்ள போட்டோக்களுடன் செயல்படவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

இதேபோல மெயில் செய்திகளில் யு-ட்யூப் போன்ற வீடியோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், இன் பாக்ஸிலிருந்து வெளியேறாமலேயே அந்த வீடியோக்களைக் காணும் வசதி தரப்படுகிறது. போட்டோ ஷேரிங். இந்த ஹாட்மெயில் தளத்திலேயே, போட்டோ ஷேரிங் வசதியும் தரப்படுகிறது.

மைக்ரோசாப்டின் ஸ்கை டிரைவில் போட்டோக்களை சேவ் செய்கையில், அவற்றைக் காண நீங்கள் அனுமதிக்கும் நண்பர்களின் இமெயில் முகவரிகளைத் தந்துவிட்டால் இந்த தளமே அவர்களுக்கு அந்த செய்தியை மிக அழகான மெயில்கள் மூலம் அனுப்பும். இந்த இமெயில்கள் அவர்களுக்குச் சென்றவுடன், அவர்கள் இந்த போட்டோக்களை, ஒரு ஸ்லைட் ஷோ காட்சியாகக் காணலாம்.

அவர்களுக்கு விண்டோஸ் லைவ் முகவரி ஐ. டி. இருப்பின், அவர்கள் இந்த போட்டோக்கள் குறித்த தங்கள் குறிப்பினைப் பதியலாம்.

‘பிங் மூலம் தேடல்’ இமெயில் விண்டோவில் “பிroசீ கிing” என்ற வசதி தரப்படுகிறது. இதன் மூலம் இமேஜஸ், கிளிப் ஆர்ட். வீடியோஸ், மேப்ஸ் மற்றும் இணையத்தளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது. கிடைத்த தகவல்களை அப்படியே ஒரு கிளிக் முலம் உங்கள் மெசேஜ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். வெப் அப்ளிகேஷன் இணைப்பு: ஹாட் மெயில் இமெயில் இன்பாக்ஸ¤டன், வெப் அப்ளிகேஷன்கள் இணைக்கப்படுகின்றன. மெயில் மெசேஜ் ஒன்றுடன் வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பார்மட்டில் ஏதேனும் ஒரு பைல் அட்டாச் செய்யப்பட்டிருந்தால், ஹாட் மெயில் உங்களின் அனுமதி கேட்டு, அதனை மைக்ரோசாப்ட் அண்மையில் தந்து வரும் வெப் அப்ளிகேஷன் மூலம் திறக்கும். இந்த பைல்களை எடிட் செய்திடவும் அனுமதிக்கும்.

நீங்கள் அந்த மெசே ஜுக்கு பதில் அனுப்பினால், ஹாட் மெயில் வெப்பில் உள்ள, நீங்கள் எடிட் செய்த பைலுக்கான லிங்க் கொடுத்து, நீங்கள் மேற்கொண்ட எடிட்களைக் காட்டும். இது ஏறத்தாழ கூகுள் டாக்ஸ் எனப்படும் வெப் அப்ளிகேஷனை ஒத்தது. என்றாலும், கூகுள் தரும் அனைத்து வசதிகளும் இதில் தரப்படவில்லை. குறிப்பாக கூகுள் வழங்கும் பி. டி. எவ். வசதி இல்லை. மொபைல் வழி இமெயில்: மொபைல் போன்களுக்கான, மொபைல் பிரவுசர் பதிப்பு ஒன்றை ஹாட்மெயில் கொண்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் மொபைல் போனில் இருந்து மெயில்களைப் படிக்கலாம்.

இருப்பினும் வேறு மொபைல் பிரவுசர் மூலமும் உங்களுக்கு வந்துள்ள மெயில்களைப் படிக்க ஹாட் மெயில் அனுமதிக்கிறது. ஹாட்மெயில் இது போன்ற பல புது ரி:திகளுடன், தன் அடுத்த இன்னிங்ஸை இமெயில் போட்டியில் விளையாட வருகிறது. இந்த முறை தன் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி நிறைய வசதிகளைத் தரும் என்று எதிர்பார்ப்போம்.

-தினகரன்

ஐசாக் நியூட்டன்

ஐசாக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 - மார்ச் 20, 1727)[1], ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.


1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, நியூட்டனுக்கும் பங்கு உண்டு.

பிற பங்களிப்புகள்

புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார்.

வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரேgeshopan. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்

வரலாறு

நியூட்டன், லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.

படிப்பு

நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். 1661 ல், கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவேயிருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலீலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களைக் கற்கவிரும்பினார். 1665 ல், பைனோமியல் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதத் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார்.

 

ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு

Isaac-newton 1.jpg

நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து அப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து.

1667 ல், தனது கண்டுபிடிப்புக்களை, முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்னும் வெளியீடு மூலமும், பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) மூலமும் வெளிக்கொணர்ந்தார்.

நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார்.

1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார்.

அயோத்தி தீர்ப்புக்கு தடையில்லை



அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயிக்கும் வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த அறுபது ஆண்டுகளாக அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதன் பின்புலத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளை வழங்கவிருந்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அதற்கு முன்னர் வழங்கப்படாவிட்டால், வழக்கை மீண்டும் விசாரிக்கும் நிலை ஏற்படும்.

கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், இருதரப்பாரும் மீண்டும் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, தீர்ப்பை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரரில் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட பிறகு, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமை வழங்கும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் வரவேற்றுள்ளன.
மிகுந்த பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழைமை மாலை 3.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

26/11 - மும்பை தாக்குதல் நினைவுகள்!

ஹேமந்த் கார்கரையைக் கொலை செய்தது யார்?

26.11.2008 இல் நடைபெற்ற மும்பை தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள்தாம் என்பதை நிரூபிக்க எத்தனையோ முனைகளில் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நாளுக்கொரு புதிய முகம், மும்பைத் தாக்குதல்களோடு அறிமுகப் படுத்தப்படுகின்றன.

உண்மையைக் கூறுபவர்களை அமுக்க அல்லது அழிக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் மராட்டிய காவல்துறை உயர் அதிகாரி முஷ்ரிஃப் ஐ.பி.எஸ். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். இவர்தான் முன்னாளில் 3000 கோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடியைக் கண்டுபிடித்தவர். பல அதிகாரிகளைத் தண்டித்தவர்.

பயங்கர பரபரப்புடன் வெளிவந்த அந்த நூல் வேகமாக விற்பனையாகியும் வருகிறது.

இந்தப் புத்தகத்தில் எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், தரப்பட்டுள்ள விளக்கங்கள் மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்திட வேண்டும் என்பதற்காக இந்நூலை எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி சானல்களுக்கும் அனுப்பினார்கள்.

தொலைக்காட்சி சானல்கள் சில இந்த நூலைப் படித்திருக்கின்றன. அவை உடனேயே இந்த நூலை எழுதிய முஷ்ரிஃபி ஐ.பி.எஸ். அவர்களைப் பேட்டி கண்டன.

முஷ்ரிஃப் அவர்களும் காலையிலிருந்து மாலைவரை பேட்டிகளை வழங்கினார்கள். ஒரே நாளில் பத்துத் தொலைக்காட்சி சானல்கள் அவரைப் பேட்டி கண்டன,

பல பிரபல்யமான பத்திரிக்கையாளர்களும் அவரைப் பேட்டி கண்டார்கள். அனைவரும் அடுத்தநாள், அல்லது அதற்கடுத்த நாள் பேட்டி வெளிவந்திடும் என வாக்களித்தார்கள். பல நாட்கள் கழித்தும் பேட்டி வெளிவந்திடவில்லை.

இதில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தவர்கள் ஒரு சக்தி (அவர்கள் வெளிப்படையாகவே பிராமண சக்தி எனக் குறிப்பிடுகின்றார்) பலமாகப் பின்னணியில் வேலை செய்திருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

மொத்தத்தில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடைந்திடாமல் தடுத்து விட்டன ஊடகங்கள்.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடைந்திட ஆவன செய்து வருகின்றோம் (இன்ஷா அல்லாஹ்).

இப்போது மிகவும் சுருக்கமான சில தகவல்கலை இங்கே இடம்பெறச் செய்கின்றோம்.

முஷ்ரிஃப் கூறுகின்றார்:

1. பாகிஸ்தானிலிருந்து வந்ததாகக் கூறப்படுவது பத்து பேர் அல்ல; எட்டுபேர் தான்.

(பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா? அல்லது குஜராத்திலிருந்து வந்தார்களா என்பது அப்போதே விவாதமான ஒன்று. "அம்ரேஷ் மிஸ்ரா" என்பவரின் கூற்றுப்படி இவர்கள் யூதர்களின் மும்பைத் தலைமையகமாகிய நரிமன் ஹவுஸ்-இன் தொண்டர்கள் ஆவர்).

2. வந்த எட்டுபேரில், ஆறுபேர் (பாய் பண்டார்கார் மாச்சி, மார்கேலோபி - Bhai Bhandarkar Machi, Mar Coloby) (near Bakhwar Park) என்ற பஹ்வார் பூங்காவிற்குப் பக்கத்தில் இறங்கி விட்டார்கள். இரண்டு பேர் இப்போது சர்ச்சையாக்கப்படும் ஹோட்டல் ஒபேராய்க்குப் பக்கத்தில் - இந்தியா கேட்டுக்குப் பக்கத்தில் - வந்து இறங்கினார்கள்.

3. பஹ்வார் பூங்காவில் இறங்கிய ஆறு பேரும் ஹோட்டல் தாஜ் மஹாலில் லியோ ஃபோல்டு ஹோட்டல், நரிமன் ஹவுஸ் ஆகியவற்றில் கபளீகரங்களைச் செய்தார்கள். ஒபேராய் ஹோட்டலுக்குச் சென்றவர்கள் அங்கேயும் ஹோட்டல் திரிடெண்ட் என்ற ஹோட்டலிலும் கபளீகரங்களைச் செய்தார்கள்.

4. (CST. CAMA Hospital) காமா மருத்துவமனையிலும் ரங்கா பவன் தெருவிலும்(Lane) ஈவிரக்கமற்ற கொலைகளைச் செய்தவர்கள் பாகிஸ்தானிலிருந்து (படகில் வந்த) தீவிரவாதிகளல்லர். அவர்கள் உள்நாட்டு இந்துத்துவ தீவிரவாதிகள்.

5. காமா(CAMA) மருத்துவமனையிலும் ரங்காபவன் தெருவிலும் நடந்த கொலைகளைத் திட்டமிட்டவர்கள் நுணுக்கமாகச் செயல்படுத்தியவர்கள் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்த பிராமிணர்களும் இந்தியாவின் உளவுத்துறையில்(I.B. Intelligence Bureau) உள்ள அவர்களின் ஆட்களும்தான். இதன் ஒரே நோக்கம், ஹேமந்த் கார்கரே அவர்களைக் கொலை செய்வதுதான். காரணம் ஹேமந்த் கார்கரே, இவர்கள் செய்த பல குண்டுவெடிப்புகளைக் கண்டுபிடித்தார். இந்து தீவிரவாதத்தின் முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

மும்பையின் மொத்தத் தாக்குதலையும் இவர்கள் திட்டமிட்டதிலிருந்து செயல்படுத்தியதுவரை நடந்தவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

ஹேமந்த கார்கரே இந்துத்துவ தீவிரவாதத்தின் நாடியைப் பிடித்து விட்டார். இந்துத்துவ (பிராமிண) தீவிரவாதத்தின் முக்கியப் புள்ளிகளைக் கைது செய்வதற்குச் சில மணித்துளிகளே மீதமிருந்தது. அதில் நாட்டின் மிக முக்கியமான பிராமிணத் தலைவர்கள் கைது செய்யப்படவிருந்தார்கள். இவர்கள் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் இன்னும் இதுபோன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள். இவர்களையெல்லாம் சதா சர்வகாலமும் காப்பாற்றிக் கொண்டிருப்பது நமது உளவுத்துறை(I.B).

இந்த உளவுத்துறை இவர்களைக் காப்பாற்றிடப் பல்வேறு உத்திகளை ஆலோசித்து வந்தது.

இந்நிலையில்தான் இவர்களுக்கு அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவின் வெளிநாட்டு உளவு ஸ்தாபனமான 'ரா'(Raw) என்ற அமைப்பிலிருந்தும் மும்பையை நோக்கி பாகிஸ்தானிலிருந்து சில தீவிரவாதிகள் வருவதாகத் தகவல்கள் வந்தன. இதனை இவர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிடப் பயன்படுத்தினார்கள்.

தகவல் கிடைத்தவுடன் உளவுத்துறையிலுள்ள இவர்கள் மும்பை காவல்துறையையும் மேற்கு கடற்கரை கப்பல் படையையும் 'உஷார்' படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் மராட்டிய மாநிலத்திலுள்ள தங்கள் எஜமானர்களையே உஷார்படுத்தினார்கள். மும்பையைத் தீவிரவாதிகள் தாக்கிடும்போதே, கார்கரேயைக் கொலை செய்யும் நோக்கத்தையும் நிறைவேற்றிடத் தயாராக இருக்கும்படிக் கூறினார்கள்.

மராட்டிய மாநிலத்திலுள்ள பிராமணர்கள் ஆறு முதல் எட்டு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த இளைஞர்கள் இந்துத்துவவாதிகளின் நாக்பூர், பூனா ஆகிய இடங்களிலுள்ள இராணுவக் கல்லூரியில் தீவிரவாதப் பயிற்சி பெற்றவர்கள்.

இந்த இளைஞர்கள், இரண்டிரண்டு பேர்களான குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் என்னென்ன, செய்திட வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தந்தார்கள். இவர்களுக்கு விளக்கிச் சொன்னக் குழுவில் இவர்களின் பிராமணர்கள், ஓய்வுபெற்ற (I.B) இந்திய உளவுத்துறை அதிகாரிகள், இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றார்கள்.

செயல்படும் தளங்களை ஓர் வரைப்படத்தைக் கொண்டே விளக்கிச் சொன்னார்கள். (வைகறை வெளிச்சம் இதழில் வரைப்படம் தரப்பட்டுள்ளது).

இவர்களுக்கு விளக்கப்பட்ட திட்டங்களின்படி இவர்கள் மும்பைத் தாக்குதலுக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே (இவர்கள்) தயாராக இருந்திட வேண்டும்.

படகில் வந்தவர்கள் மும்பைத் தாக்குதல்கள் தொடங்கியவுடன், இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றிட வேண்டும். தாக்குதல்களை நடத்திட தயாராக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு (இந்துத்துவ தீவிரவாதிகளுக்குக்) காமா மருத்துவமனை எஸ்.பி. அலுவலகம் என இலக்குகள் அமைத்துத் தரப்பட்டிருந்தன.

அவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட செல்ஃபோன்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். இந்த செல்ஃபோன்கள் தங்களுக்கு வரும் உத்தரவுகளைக் கேட்டிடத்தானே தவிர பேசிட அல்ல. இந்த செல்ஃபோன்களைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்கு உள்ளாலே கூடப் பேசிடக் கூடாது.

இந்த செல்ஃபோன்களின் சிம்கார்டு(Sim card)கள் (மராட்டிய மாநிலம்) சந்தரா 'Santra' வில், வாங்கப்பட்டவை.

இந்த இந்துத்துவ தீவிரவாதிகள் முதலில் மும்பை ரெயில் நிலையத்தையும் பின்னர் காமா மருத்துவமனையையும் தாக்கிட வேண்டும். இந்த இரண்டு தாக்குதல்களையும் அவர்கள் பத்து அல்லது பதினைந்து நிமிட இடைவெளிக்குள் நடத்திட வேண்டும்.

ரெயில் நிலையத்தைத் தாக்கிடும் குழு, தாக்குதல் முடிந்தவுடன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டடம் வழி ரங்பவன் வீதிக்கு வந்து அங்கு நடக்கும் தாக்குதலில் உதவி செய்திட வேண்டும். ரங்காபவன் வீதியில் தாக்குதல் நடத்திட ஏற்கெனவே அனுப்பப்பட்டவர்கள், தங்கள் இலக்குகளை (கொலை) செய்திட இயலவில்லை என்றால் இவர்கள் (ரெயில் நிலையத்தைத் தாக்கி விட்டுச் செல்பவர்கள்) அதனைப் பக்குவமாகச் செய்து முடித்திட வேண்டும்.

எஸ்.பி. அலுவலகம், ரங்பவன் வீதி ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்ட (இந்துத்துவ) தீவிரவாதிகள், தாங்கள் கொலை செய்திட வேண்டிய அதிகாரிகள் (ஹேமந்த் கார்கரே உட்பட அதிகாரிகள்) வந்தவுடன் தாக்குதலைத் தொடங்கிட வேண்டும். கார்கரே தங்களுக்குப் பக்கத்தில் மிகவும் நெருங்கி வந்தபின்தான் இவர்கள் அவரைக் கொலை செய்திட வேண்டும்.

தாக்குதல், அதாவது ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்திடும் பணி வெற்றிகரமாக முடிந்தவுடன் அவர்கள் சமிஞ்சைகளை அனுப்பிட வேண்டும். உடனேயே எவ்வளவு விரைவாக முடியுமோ அத்துணை விரைவாக அவர்கள் தங்களுடைய தளங்களுக்குத் திரும்பிட வேண்டும்.

உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பணி:

(I.B) உளவுத்துறை தங்களது கையிலிருக்கும் தீவிரவாதிகளில் இரண்டு பேரை கொலைகள் நடந்த இடத்திற்குக் கொண்டு சென்றிட வேண்டும். அவர்களில் ஒருவரை எதிர்த் தாக்குதலில் கொலை செய்திட வேண்டும். மற்றொருவரை உயிருடன் பிடித்ததாகக் கூறுவதற்கும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவர்களின் திட்டங்களெல்லாம் நிறைவேறின. ஆனால், கடைசியில் சில குழப்பங்கள். இஃதொன்றும் பெரிய விவகாரமல்ல. காரணம் உலகில் தீட்டப்படும் போர் திட்டங்களெல்லாம் செயல்களத்தில் சில எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்தித்திடுவதுண்டு. அதுபோலவே இங்கேயும் அது நடந்தது. செயல் களத்தில் ஆயுதத்தோடு நின்ற இந்துத்துவ தீவிரவாதிகள் பல தவறுகளைச் செய்தார்கள்.

மும்பை ரெயில் நிலையத்தைத் தாக்கிட வந்த இந்துத்துவ தீவிரவாதிகள் தங்கள் மன அரிப்பை முஸ்லிம் வெறுப்பைக் கட்டுப்படுத்திட இயலாதவர்களாக இருந்தார்கள். இதனால் அவர்கள் அங்கு தாடி வைத்திருந்தவர்களையும் புர்கா அணிந்திருந்த பெண்களையும் அவர்களின் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளையும் கொலை செய்து விட்டார்கள்.

ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் திட்டமிட்டபடி டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகப் பாதையைக் கடந்து காமா மருத்துவமனைக்குச் சென்றிட இயலவில்லை. அங்கே நின்ற காவல்துறையினரே காரணம். இதனால் அவர்கள் மஸ்ஜித்பந்தர் வழியாக வெளியே சென்றிட வேண்டியவர்களானார்கள்.

எதிர்பாராத விதமாக (I.B) உளவுத்துறை கடத்திச் சென்ற இரண்டுபேரையும் Girgam Chawpatty கர்காம் சவ்பாத்தியில் எதிர்பட்டக் காவல்துறையினர் கொலை செய்து விட்டார்கள். இதனால் (I.B) என்ற உளவுத்துறை தங்களிடமிருந்த மூன்றாவது ஒருவரைக் கொண்டு வந்து உயிருடன் பிடித்ததாகக் காட்டிட வேண்டியதாயிற்று.

இப்படிப் பல தவறுகள் நடந்திருந்தாலும் சதிகாரர்கள் திட்டமிட்டபடி ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்து விட்டார்கள்.

இத்தனையையும் சொல்லி விட்டு, முஷ்ரிஃப் அவர்கள் நமது உளவுத்துறை வெளிநாட்டுத் தீவிரவாதிகளக் காப்பாற்றிக் கிடைத்த தகவல்களை உரியவர்களுக்குச் சொல்லாததின் மூலம் அதனைத் தங்களது எஜமானர்களைக் காப்பாற்றும் முகத்துடன் கார்கரேயைக் கொலை செய்யப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்பைப் பாழ்படுத்தி விட்டார்கள் எனக் கூறுகின்றார்கள்.

இந்த நூலை ஆய்வு செய்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செய்யித் ஷஹால்தீன் அவர்களும் இதையே கூறுகின்றார்கள்.

- Source : MI November 2009.

முஷ்ரிஃப் அவர்களின் ஜிஹாத்:

அநியாயத்தையும் அநீதியையும் அவற்றைச் செய்பவன் முன்னே பொட்டில் அறைந்தாற்போல் சொல்லி விடுவதே மிகப் பெரிய ஜிஹாத் எனக் கூறியுள்ளார்கள் இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள்.

அதை முஷ்ரிஃப் அவர்கள் ஆணித்தரமாகச் செய்திருக்கின்றார்கள்.

முஷ்ரிஃப் அவர்கள் (I.B) Intelligence Bureau என்ற உளவுத்துறையை பகிரங்கமாகவே குற்றம் சாட்டி இருக்கின்றார்கள்.

சாதாரண கடைநிலை காவல்துறையையே "விலகி நில்" என்று சொல்லிட முடியாத ஒரு நாட்டில் இப்படியொரு குற்றச்சாட்டை அவர் அச்சடித்து வெளியிட்டிருப்பது அவரது அஞ்சா நெஞ்சை மட்டுமல்ல, அவர் திரட்டி உள்ள தகவல்கள் அனைத்தும் அழுத்தமான உண்மைகள்; ஆதாரப்பூர்வமானவை என்ற அவரது நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகின்றன.

நூலை மொத்தமாக ஆய்வு செய்பவர்கள், மொத்த மும்பைத் தாக்குதலும் ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்தவர்களின் ஏற்பாடாக ஏன் இருக்கக் கூடாது என்றே எண்ணுவார்கள்.

பல கோணங்களிலிருந்தும் நமது உளவுத்துறையின் மீது குற்றச்சாட்டுகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பிலும் நாட்டு மக்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர்கள் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திட இயலாது. உளவுத்துறையில் புகுந்திருக்கும் கறுப்பாடுகளைக் களை எடுக்க வேண்டும்.

இந்த நூலின் பின்னணியில் இன்னொரு உண்மையும் வெளிச்சத்திற்கு வருகின்றது. அது,

2008 செப்டம்பர் திங்களில் மராட்டிய மாநிலம் மாலிகோனில் குண்டு வைத்த இந்துத் தீவிரவாதிகளுக்கெதிராக 2009- ஜனவரியில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி புரோகித், சன்னியாசி பிரக்யா சிங் ஆகியோருக்கும் நாட்டில் நடந்த இதர குண்டுவெடிப்புகளுக்கும் சம்மந்தமில்லை என்றொரு வரி இணைக்கப்பட்டிருந்தது. (விபரம் வைகறை வெளிச்சம் ஜனவரி - பெப்ருவரி 2009)

இந்த வரி அவர்களை "மோக்கா" என்ற மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புச் சட்டத்திலிருந்து காப்பாற்றியது. காரணம், "மோக்கா"வில் குற்றவாளிகளை வைத்திட வேண்டும் என்றால் அவர்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்களில் வழக்கு இருந்திட வேண்டும். இங்கே அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டக் குற்றப்பத்திரிக்கையே. "அவர்களுக்கும் வேறு குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பில்லை" எனக் கூறியது.

ஹேமந்த் கார்கரேக்கு வழங்கப்பட்ட கவசம்:

(2008) 26/11 என்று அழைக்கப்படும் மும்பைத் தாக்குதல்களின் போதுதான் இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்த ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்டார்.

அவரைக் கொலை செய்வதற்கு அவரை அழைத்துச் சென்றபோது, அவருக்கொரு புல்லட் புரூஃப் கவசத்தைத் தந்தார்கள். இந்தக் கவசம் போலியானது என இவர்களின் ஊடகங்களே 26.11.2009ல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சிகளின்போது தெளிவுபடுத்தின.

இந்த உண்மை அவர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்தான் தெரியவந்துள்ளது.

இந்த உண்மை, முஷ்ரிஃப் அவர்களின் நூலின் மதிப்பையும் உண்மைத் தன்மையையும் அழுத்தமாக்கி இருக்கின்றது.

ஹேமந்த் கார்கரேயின் மனைவி கவிதா கார்கரேயின் பெரும்போர்:

ஹேமந்த் கார்கரேயின் மனைவி கவிதா கார்கரே ஒரு வீரமங்கை. அவர் ஒரு கல்லூரி பேராசிரியர்.

இவர் தன் கணவனின் கொலைக்கு நீதிகேட்டுப் போராடி வருகின்றார்.

26.11.2009 இல் தொலைக்காட்சிக்குப் பேட்டி தந்த அவர், தனக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனது போர் தொடரும் என உறுதியாகக் கூறினார்.

முன்னர் தன் கணவர் ஹேமந்த் கார்கரேக்கு விருதுகள் வழங்கிடும் விழாக்களுக்குச் சென்ற அவர், உங்கள் கணவரைக் கொலை செய்தது யார் எனக் கேட்டதற்கு, "நாடாளுமன்றத்தைத் தாக்கியது யார் என்பதையே நாம் இன்னும் தெரிந்திடவில்லையே" எனக் கூறியதை நாம் வைகறை வெளிச்சத்தில் வெளியிட்டிருந்தோம்.

ஊடகங்கள் - பத்திரிக்கைகளின் இருட்டடிப்பு

"ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்தது யார்?" என்ற நூல் குறித்து எழுதிய முஷ்ரிஃப்-ஐ பேட்டி எடுத்தவர்கள் பயங்கர வினாக்களை எழுப்பி இருப்பார்கள்.

இந்த வினாக்கள் அந்த நூல் ஆதாரமற்றது என்பதை நிரூபிக்கும் கோணத்திலேயே அமைந்திருக்கும். அத்தோடு நம் நாட்டின் முக்கிய உளவுத்துறைகளாகிய ஐ.பி என்ற உள்நாட்டு உளவுத்துறை , ரா (Reasearch and Analysis Wing) ஆகியவற்றின் மீதும் பழிகளைச் சுமத்தியுள்ளார்.

இவற்றையெல்லாம் பற்றி கர்ண கொடூரமான கேள்விகளைக் கேட்டிருப்பார்கள், பத்திரிக்கையாளர்கள்.

இந்தக் கேள்விப் பதிலில் முஷ்ரிஃப் ஐ.பி.எஸ். தோற்றுப் போயிருந்தால், திணறியிருந்தால் அவருடைய பேட்டி அவசியம் வெளிவந்திருக்கும். முடிந்தால் அவரை அரசிடம் சிக்க வைத்திருப்பார்கள்.

நூலாசிரியர் முஷ்ரிஃப் அவர்களின் பேச்சு அழுத்தமானதாகவும் ஆதாரங்கள் நிறைந்ததாகவும் இருந்ததால்தான் பத்திரிகைகள் அவர் பேட்டியை வெளியிடவில்லை.

அவருடைய பேட்டி வெளியே வந்திருந்தால் நாட்டின் மிகப் பெரிய விவாதமாக அதுவே ஆகியிருக்கும். நூலும் பரபரப்பாக விற்பனையாகி இருக்கும்.

இப்படி ஊடகங்கள் முழு இருட்டடிப்பைச் செய்திருப்பதால் இந்த நூலைப் பரவலாக்கிடும் பொறுப்பை வைகறை வெளிச்சம் தமிழகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆகவே நூல் வேண்டுவோர் ரூபாய் 300-ஐ அனுப்பி தாருல் இஸ்லாம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். முகவரி:
Darul Islam Foundation Trust
235 Peters Road, Royapettah
Chennai 600014

தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் (வீடியோ இணைப்பு)

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் (வீடியோ இணைப்பு)

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

வருகிறது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9 இன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.
அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால் தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசொப்ட் எதிர்பார்க்கிறது.
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மைக்ரோசொப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.
இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
 சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக "Your most Popular Sites என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணையத்தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.
அதேபோல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.
இவை மற்றவர்களுக்கு மைக்ரோசொப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காக் காத்திருப்போம்.
மீண்டும் ஆக்கிரமிக்கும் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்'
பிரபல கணனி இயங்குதளமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்' உலகளாவிய ரீதியில் அதிகமாக உபயோகிக்கப்படும் கணனி இயங்குதளமாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி மற்றைய முன்னணி இயங்குதளங்களான 'மொஸிலா பயர் பொக்ஸ்' மற்றும் 'கூகுள் குரோம்' ஆகியவற்றை 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்' பின்தள்ளியுள்ளது.
மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் இயங்குதளமாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8' தொகுப்பு விளங்குகின்றது.
புதிய இணைய அறிக்கைகளின் படி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்' இன் இயங்குதள சந்தைப்பங்கு ஜூலை மாதமளவில் 0.42% வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி இயங்குதள சந்தையில் அதன் மொத்த பங்கு 60.74% வீதமாகவுள்ளது.
அதற்கு அடுத்த இடங்களிலுள்ள 'பயர்பொக்ஸ்' மற்றும் 'கூகுள் குரோம்' இயங்குதளங்களின் சந்தைப்பங்குகள் முறையே 0.9% மற்றும் 0.08% வீதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்நிலையில் அப்பிளின் 'சபாரி' இயங்குதளத்தின் சந்தைப்பங்கு 0.24% வீதத்தினால் அதிகரித்துள்ளது.
அனைவரும் எதிர்பார்க்காதவகையில் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' இயங்குதளத்தின் உலகளாவிய பாவனை 0.98% வீதத்தினால் அதிகரித்துள்ளதோடு இதன் மொத்த உலகளாவிய பாவனை வீதம் 30% உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் நினைப்பதை முடிக்கும் கணனி
இணையத்தில் தேட வேண்டுமா, உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்aர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணனிகள்.
கணனி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மெளஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம்.
கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும்; எங்கள் கணனி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணனியை யன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரை படக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த பொறியியலாளர்கள்.
ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின்படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது.
கூகிள்ளின் ஆதிக்கம்
எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இணையத்தில் தனது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வரும் கூகிள், தற்போது தனது பார்வையை ஒன் லைன் கேம்(Online Games) பக்கம் திருப்பியுள்ளது.
கடந்த மே மாதம் இடம்பெற்ற I/O மகாநாட்டில் வாக்குறுதியளித்ததிற்கு அமைய இந்த ஒக்டோபரில் Iup அறிக்கை தனது Chrome web store இனை உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த சந்தையானது குறிப்பாக ஒன்லைன் கேமினை குறிவைத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒன் லைன் கேமினை (Online Games)  முக்கியப்படுத்துவதற்கான காரணங்களாக கூகிள் நிறுவனம் குறிப்பிடுவதாவது,
01. சிறந்த ஒன் லைன் கேமினை (Online Games)  இணையத்தில் தேடிப் பிடிப்பது கடினமாக உள்ளமை.
02. இந்த Games  களின் பிரபல்யத்தன்மையினை அறிந்து கொள்ள எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருப்பது.
03. இந்த Games  தொடர்பான கருத்துக்களை அறிய ஒரு சிறந்த ஒரு இடம் இல்லாமை.
04. மிaசீலீ வடிவமைப்பாளர்கள், அவர்களின் கேம்களை வைத்து பணம் பண்ணுவதற்கு ஒரு சிறந்த வழி இல்லாமை.
இதுபோன்ற பல காரணங்களை கூறுகின்றது. எது எவ்வாறு இருந்தாலும் ஒன்லைன் கேம் துறையில் இது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.
ஸ்டிக்கர் வடிவில் கீபோர்ட்
உள்ளங்கையில் வைத்து பட்டனை செல்லமாக தட்டினால், கம்ப்யூட்டர் இயங்கத்துவங்கும். நீங்களும் அதை இயக்கலாம். இன்டர்நெட் பார்க்கலாம். இ-மெயிலும் தரலாம். என்னது இப்படி ஒரு அதிசயமா என்று வியக்கிaர்களா?
ஆம், கைடயக்க... இல்லையில்லை, உள்ளங்கை அடக்க, மிகவும் சிறிய அளவில் "ஸ்டிக்கர்" வடிவ கீ போர்டு வந்து விட்டது. இந்தப் புதிய கருவிக்கு, "ஸ்கின்புட்" என்று பெயர். நம் காதால் கேட்க முடியாத மிகக் குறைந்த சத்தங்களைக் கண்டறியும் அடிப்படையில் இக்கருவி இயங்கும். நம் உள்ளங்கையில் இதை வைத்துக் கொண்டு லெப்-டொப், கம்ப்யூட்டர், மொபைல், ஐபொட் ஆகியவற்றை இயக்க முடியும்.
மைக்ரோசிப் வடிவிலான புரஜக்டர்கள் தான் கீபோர்டு வடிவில் இருக்கும். அதில் உள்ள பட்டன் களை நீங்கள் தட்டினால் அதிலிருந்து எழும் சத்தத்தை வைத்து அதற்கான விளைவுகள் திரையில் உருவாகும். முன்னங்கைகளில் எந்த இடத்தில் எந்த சிப் இருக்கிறதோ அந்த, "சிப்பில் உள்ள பட்டனை மிகவும் செல்லமாக நீங்கள் தட்டினால் போதும், என்ன எழுத்து வரவேண்டுமோ அதுவரும் வகையில், கைகளில் பல்வேறு கோணங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சர்களிலிருந்து செய்தி கடத்தப்படும் வகையில் இந்தப் புதிய கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி 20 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது சந்தைக்கு வரக்கூடும்.

வேலைவாய்ப்பு? CNC technology இந்தத்துறையில் உள்ளவர்கள் எனக்கு உதவலாம்.

இரண்டரை வருடங்களுக்கு மேலாக தாய்லாந்தில் உள்ள ஒரு கொம்பனியில் புரடக்சன் இன்ஜினியராக வேலை செய்த எனக்கு அதிஷ்டவசமாக எற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக எனது வேலையை இழக்கவேண்டியேட்பட்டது.


cnc technology துரை இமது நாட்டில் மிகஅரிதாகவே உள்ளதன் காரணமாக இந்த்த் துறையில் வேலைவாய்பு தேடுவது மிக்க் கடுமையாக உள்ளது. முடியுமான சகோதர்ர்கள் அல்லது இந்த்த் துரையோடு தொடர்புடையவர்களுடைய உதவியை இந்த தகவலினூடாக எதிர்பார்க்கின்ரேன். என்னுடைய CV தேவையேற்படின் உங்களை email இனூடாக தொடர்பு கொள்ள காத்திருக்கின்ரேன்.

நன்றி
asfar_m@msn.com
www.asfabiz.20m.com

சிறுமியை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்த நினைத்தவரை காட்டிக் கொடுத்தது ஸ்கை நியூஸ் ரகசிய கேமரா (வீடியோ நியூஸ் இணைப்பு)



சைமன் பியர்ட், 56 இளைஞர் ஆலோசகராக பணிபுரிவதாக கூறிக்கொண்டு பல இளைஞர்களுடன் பாலியல் ரீதியாக தவறாக பேசுவதையே தொழிலாக வைத்துள்ளார்.


இணையத்தில் இருக்கும் பொது அரட்டை அறைக்குள் சென்று இளம் வயது பெண்களை தேடி அவர்களுடன் பேசுவது பின் அரட்டையை பாலியல் ரீதியில் திசை திருப்புவது உள்ளிட்ட வேலைகளை ஆறு வாரங்களாக முனைப்புடன் செய்து வந்த இவரை ரகசியமாக படம் பிடித்தனர் ஸ்கை செய்தி குழுவினர்.

தான் நிருபர்களால் கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமல் 13 வயது சிறுமி அமியுடன் நட்புடன் முதலில் அரட்டையை துவங்கினார். முதலில் இணைய காமெராவில் தன படத்தை போட்ட சைமன் , பின் சிறுமி அமியையும் இணைய காமெராவில் வருமாறு வலியுறுத்தினார்.

பின்னர் சிறிது சிறிதாக பாலியல் ரீதியாக அரட்டையை திசை திருப்பிய சைமன் ஒரு கட்டத்தில் சிறுமியிடம் தன்னுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக் கொள்ளத் தயாரா என்றும் கேட்டதோடு இதை வெளியில் கூறி தன்னை போலீசில் மாட்டி விடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

பின்னர் இருவரும் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டு சைமன் அவர் வீட்டிலிருந்து கிளம்புவது முதற்கொண்டு குன்னேர்ஸ்புரி ரயில் நிலையத்தில் இருவதும் சந்திப்பது அனைத்தும் படம் பிடிக்கப்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகத்தினால் தான் படம் பிடிக்கப்படுகிறோம் என்பது தெரிந்து ஓடினார் சைமன்.

பின்னர் ஒரு கட்டத்தில் இணையத்தில் இது போன்று சிறுமிகளை தேடித் பிடித்து அவர்களை பாலியல் ரீதியில் தயார் செய்வது தனக்கு கை வந்த கலை என்றும் தான் செய்வது சட்டத்திற்கு புறம்பானது எனத் தெரியும் எனவும் ஸ்கை செய்தி நிறுவனத்திடம் ஒப்புக் கொண்டார்.

தற்போது சிறுவர்களை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

07 Aug 2010
through http://www.manithan.com/

'பிரபஞ்ச' ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்

ஒழுக்கத்தை புறக்கணித்து விட்டு கல்வி பெற முனைந்ததனாலே உலகம் இன்று சமாதனத்தை தொலைத்துள்ளது. ஒழுக்கமும் கல்வியும் எமது இரு கண்களைப்போன்றது என கலாநிதி நபீஸ் நளீமி தெரிவித்தார்.

கஹடோவிட ஓகடபொல பபள்ளிவாசல் சம்மேளனத்தின் அங்குராப்பணக் கூட்டம் நேற்று அல்பத்ரியா ம.வி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முஸ்லிம் உலகு இன்று கல்வியிலே பின்தள்ளப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அமேரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை விட மிகவும் குறைந்ததாகவே முழு முஸ்லிம் உலகிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன.
கல்வி இன்று பொருளதாப் பண்டமாக மாறியுள்ளது. சில முஸ்ஸிம் நாடுகளில் தரமான பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இருந்தும் முஸ்லிம்கள் தமது உயர்படிப்புக்காக ஐரோப்பிய பல்கலைக் கழகங்களையே நாடுகின்றனர். இதன்மூலம் அந்தநாடுகளில் பெரும்தொகையான பணத்தை முதலீடு செய்கின்றனர். அந்தப்பல்கலைக் கழகங்கள் வழங்கும் கல்வியில் ஒழுக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, இப்பல்கலைக் கழகங்களால் உருவாக்கப்படும் புத்திஜீவிகளால் உலக அமைதிக்கு இன்றும் தீர்வுகான முடியாமல் இருப்பது இதற்கான சிறந்த உதாரணமாகும் எனவும் அவர்மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து சம்மேளன உருப்பினர் அல்ஹாஜ் ஜவுஸி அவர்களினால் சம்மேளனத்தின் உருவாக்கம், அதன் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றன என்பவற்றை தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் சிறப்பாக விவரித்தார். பின்னர் இக்கூட்டத்தை சிறப்பிக்க வந்திருந்த நிட்டம்புவ, வீரங்கொல்ல போலிஸ் அதிகாரிகளின் உரை இடப்பெற்றன. இந்த முயற்சியைப் பாரட்டிப்பேசிய அதிகாரி ஓருவர் ஏன் சமூகமளித்த மக்களின் தொகை மிககுறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டத் தவரவில்லை. குறிப்பாக வீரங்கொல்லையில் இருந்து வந்திருந்த பொலிஸ் அதிகாரி அவரது உரையை அவர் மிகவும் இஸ்லாத்துக்கு பரீட்சயமானவரைப் போன்று எமது வரலாரையும் குர்ஆனையும் தொட்டுப் பேசியதை வருகை தந்திருந்த ஊர்மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்ததை அவதானிக்க்கூடியதாக இருந்தது.

அதனைத்தோடர்ந்து எமது ஊரைப்பிரப்பிடமாகவும், ஆரப்பக்கல்வியை எமது பாடசாலையில் பயின்று இப்போது கம்பஹா மாவட்ட தேர்தல் ஆணையாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கின்ற மொஹமட் (நளீமி) அவர்களின் உரை இடப்பெற்றது. அவர் எமது ஊரின் ஆரம்பகால நிலமைகளையும் இப்பொழுது எமது மக்களிடையேயுள்ள மார்க்கரீதியான பிளவுகளையும் சுட்டிக்காட்டிய அதேவேளை மார்க்கரீதியான ஓருசில விடயங்களுக்காக பள்ளிவாசல்களின் பிரிவுகளையும் நியாயப்படித்திய அவ்வேளை இந்தபிரிவுகள் எமது மாணவர்களை ஒழுக்கவீழ்சியில் தடம்புரல வழியமைக்கக் கூடாது. முக்கியமாக இவ்வாறான விடயங்களில் மாத்திரமாவது ஒன்றினைந்து “வேற்றுமையில் ஒற்றுமைகான்போம்” என்றகருத்துப்படபேசினார்.

பள்ளிவாசல் சம்மேளனம் மக்களின் எதிர்பார்பை மனக்கோட்டையாக்கிட கூடாது!
எமது ஊரின் ஒழுக்கமும் கல்விமேம்பாடும் வெரும் பேச்சுப்பொருளாக காணப்படுகின்றன. எமது சமூகத்தின் உறுப்புக்களை ஒன்றுசேர்பது தவளை நிறுக்கும் கதை என்று கூறப்படுகின்றது.
ஆனால், எமது பள்ளிவாசல் சம்மேளனம் அதனைப் பொய்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இருப்பினும் ஒழுக்கம், கல்விமேம்பாடு ஆகிய இரு கருப்பொருள்களை மையாமாகவைத்து உருவாகிய இச்சம்மேளனம் அதனை வெறும் பேச்சிலேயே இன்னும் இழுத்தடித்து வருகின்றது. இத்தனை மாதங்களாகியும் எந்தச் செயற்பாட்டையும் காணவில்லை.
நேற்று அல்பத்ரியாவில் இடம்பெற்ற இச்சம்மேலனத்தின் அங்குரார்பனக் கூட்டத்திலும் பேச்சைத் தவிரவேறு எந்த செயற்பாடுகளும் காணப்படவில்லை. இக்கூட்டத்தில் சம்மேலனத்தின் திட்டங்கள், மற்றும் அதன் செயற்பாடுகள் என்பவற்றை தெழிவுபடுத்தி மக்களிடம் அதற்கான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பார்கள் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், யாப்பு இன்றும் எழுத்தில் இருப்பாதாக கூறப்பட்டது. அப்படியானால் நேற்றைய கூட்டம் எதற்கு என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது?

அனைத்துப் பள்ளிவாசல்களும் ஒன்று சேர்ந்தமையை சகல மக்களும் உள்ளுர வரவேற்கின்றனர். இதில் சந்தேகமில்லை. இந்த வரவேற்பு குறித்தேபசி நேரத்தைக் கழிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. நேற்றைய கூட்டத்தில் ஒரு பொதுமகன் பாடசாலைக்கு அருகாமையில் நடக்கின்ற குற்றச்செயலைக் கூறி கவலைப்பட்டார். இச்சம்மேளனம் எதனையாவது செய்யும் என்ற எதிர்பார்ப்புதான் அந்த பொதுமகனின் கருத்துக்கு அர்த்தமாக கானப்பட்டது. தொடர்ந்தும் இச்சம்மேளனம் பேச்சிலேயே காலத்தை இழுத்தடித்தால் இச்சம்மேளனத்தின் மீது வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்பும் மன்கோட்டையாகிவிடும் என்பது ஊர் மக்களின் கருத்தது.

புறக்கணிக்கப்பட்ட சலாம்!

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் சலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.


ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236

முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
சிலர் சலாம் கூறும் போது புரியும் படியாகவோ அல்லது முழுமையாகவோ கூறுவதில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சகாபாக்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒரு சஹாபி வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் என்றார். நபி (ஸல்) அவர்கள் பத்து என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைலக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் இருபது என்றார்கள். மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் முப்பது என்று கூறினார்கள். சஹாபாக்கள் ஆர்வமிகுதியால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, முதலில் சலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள், இரண்டாவது சலாம் கூறியவருக்கு இருபது நன்மைகள், முன்றாவது சலாம் கூறியவருக்கு முப்பது நன்மைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

‘சலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: -
உங்களிடையே ஸலாத்தைக் கொண்டு பரப்புங்கள். சலாம் சொல்வதால் இரு உள்ளங்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுகிறது.

நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) , ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5175)

வீடுகளில் நுழையும் முன் சலாம் கூறுவதன் அவசியம்: -
நம்முடைய வீட்டிலோ அல்லது பிறருடைய வீட்டிலோ நுழையும்போது நம்மில் எத்தனை பேர் சலாம் சொல்லி நுழையக் கூடியவர்களாக இருக்கிறோம்? பிறருடைய வீட்டில் நுழையும் போது சமையல் வாசனை முக்கைத் துளைத்தவுடன் இன்று என்ன பிரியானி சமையலா? என்று கேட்வாறு உள்ளே நுழைகிறோம். ஆனால் இஸலாம் வலியுறுத்திக் கூறும் சலாம் சொல்வதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.

அத்தியாயம் 24, ஸூரத்துந் நூர் (பேரொளி), வசனம் 27 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறுதல்: -

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறக் கூடாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே காணப்படுகிறது. இது தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலே நுழையுமுன் மனைவிகளுக்கும், சிறியவர்களுக்கும் முந்திக்கொண்டு சலாம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: -

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.

அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.
மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -
இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.

ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

http://www.koothanalluronline.com/ta/?p=552

FTP என்றால் என்ன?

ஒரு வர்ட் பைலை அல்லது ஒரு படத்தை இணையத்தினூடு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது அதனை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பிவிடலாம் என்பது நீங்கள் அறிந்ததே. அதி வேக இணைய இணைப்பு பயன்பாட்டில் உள்ள இக்காலத்தில் பைல் ஒன்றை அனுப்ப பெற உதவும் இம்முறையானது ஒரு சாதாரண கணனிப் பயனரைப் பொறுத்தமட்டில் போதுமானதே.

மாறாக பைல் அளவு அதிகமாகும்போது அல்லது அதிக எண்ணிக்கையிலான பைல்களை அனுப்பும் போது மின்னஞ்சலில் அனுப்புவது சிறந்த தெரிவாக அமைய மாட்டாது. ஏனெனில் மின்னஞ்சல் சேவை தரும் நிறுவனங்கள் ஒரு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பக் கூடிய பைலின் அளவில் ஒரு எல்லையை நிர்ணயித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு உதவுகிறது FTP

File Transfer Protocol என்பதன் சுருக்கமே FTP. இணையத்தில் ஒரு சேர்வர் கணனிக்கும் எமது கணனிக்குமிடையில் பைல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய வசதியை FTP தருகிறது. FTP தளம் (sites) என்பது மென்பொருள்கள், படங்கள், இசை, வீடியோ என பலவகையான பைல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு சேர்வர் கணனியாகும். World Wide Web எனும் உலகளாவிய வெப் தளம் போல், (E-mail) மின்னஞ்சல் போல் இணையம் மூலம் பெறப்படும் மற்றுமொரு சேவையே எப்டிபி.

இணையம் வழியே பைல்களைப் பரிமாறிக் கொள்வதில் தற்காலத்தை விட கடந்த காலங்களில் FTP பயன்பாடு ஒரு பொதுவான விடயமாகவிருந்தது. இரண்டு கணனிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ள மின்னஞ்சலை விட பிஹிஜி யே அதிகம் பயன்படுத்தப்பட்டது. முன்னரைப்போன்று பலராலும் பரவலாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும் FTP என்பது இன்னும் கூடப் பயன்பாட்டிலுள்ளது. பெரிய பைல்களை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளும் வண்ணம் செய்வதற்கு FTP பயன்படுத்தப்படுகிறது. பைல்களை பரிமாறிக் கொள்வதில் தற்போது பயன்படுத்தப்படும் ஏனைய வழிமுறைகளுடன் ஒப்பிடும் போது FTP அதிக வேகம் கொண்டதாகவும் உள்ளது. FTP இணையம் வழியே பைல்களை அனுப்ப பெற உதவும் ஒரு சிறந்த வழிமுறை எனலாம்.

பொதுவாக FTP யானது இணைய தள வடிவமைப்பாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இணைய தளங்களை அவை சேமிக்கப்படும் சேர்வர் கணனிகளுக்கு அல்லது ஹோஸ்ட் (host) கணனிகளுக்கு அப்லோட் (upload) செய்வதற்காக அவர்களால் இது பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு அநேகமான இணைய தள சேர்வர்கள் FTP மூலம் மாத்திரமே இணைய தளங்களை அப்லோட் செய்வதற்கு அனுமதிக்கிறது.

ஒரு FTP சேர்வரை இரண்டு முறைகளில் அணுகலாம். முதல் வழி முறையில் உங்களுக்கு வழங்கப்படும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டு உங்கள் அடையாளத்தை உறுதிசெய்து கொண்டு ஒரு FTP சேர்வரை அணுகுவதாகும். இரண்டாவது வழிமுறையாக பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்கள் ஏதும் இன்றி ஒரு எப்டிபீ சேர்வரை அணுகுவதாகும். இவ்வாறான FTP சேர்வரை (Anonymous FTP) பெயரில்லா எப்டிபீ எனப்படும் இந்த எனோனிமஸ் எப்டிபியை விரும்பிய எவரும் அடைய முடியும்.

ஒரு எப்டிபி சேர்வரை அணுகுவதற்கு இணைய தளங்களைப் பார்வையிட உதவும் இணைய உலாவி அல்லது அதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் கருவி பயன்படுத்தப்படும். இவ்வாறான மென்பொருள் கருவிகளை (FTP Client) எப்டிபி க்ளையண்ட் எனப்படும். பிரவுஸரை விட FTP க்ளையன்ட் பயன் படுத்துவதே சிறந்த வழிமுறையாகும். FileZilla, Cute FTP, Smart FTP என ஏராளமான FTP க்ளையண்டுகள் பாவனையிலுள்ளன. இவை அனைத்தும் வேறு பட்ட இடை முகப்புகளைக் கொண்டிருப்பினும் ஒரு கணனியிலிருந்து மற்றுமொரு கணனிக்கு பைல்களைப் பரிமாறும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றன.

இணைய உலாவி மூலம் FTP சேர்வரை அணுகும்போது முகவரிப் பட்டையில் ftp:// என்பது சேர்த்துக் கொள்ளப்படும். உதாரணமாக, ftp://ftp.schoolnet.lk/ என வழங்கினால் அந்த FTP சேர்வரை அடையாளமில்லாத முறையில் (anonymous) அணுகும். எனினும் அந்த FTP சேர்வர் பயனர் பெயர் மற்றும் கடவு சொல் வினவுமாயின் ftp://username:password@ftp:somedomain.com எனும் ஒழுங்கில் வழங்க வேண்டும். எனினும் இவ்வாறு வழங்கும் போது கடவு சொல் பிரவுஸரினால் கணனியில் சேமிக்கப்படும். அதனால் பாஸ்வர்டை வழங்காது பயனர் பெயரை மட்டும் பின்வருமாறு வழங்கலாம். ftp://username@ftp:somedomain.com இவ்வாறு வழங்கும் போது பாஸ்வர்டை பிரவுஸர் பின்னர் வினவும். எனினும் ப்ரவுஸரில் பாஸ்வர்ட் தங்காது.

வெப் பிரவுஸர் அல்லது எப்டிபீ க்ளையண்ட் பயன்படுத்தி எப்டிபி சேர்வர் ஒன்றை அணுகும்போது சேர்வரிலுள்ள பைல் போல்டர்களை பட்டியலிடக் காணலாம். அதிலிருந்து உங்களுக்குத் தேவையான பைல்களை drag & drop முறையில் உங்கள் கணனிக்கு டவுன்லோட் செய்யவோ அல்லது உங்கள் கணனியிலிருந்து சேவருக்கு அப்லோட் செய்யவோ முடியும்.

64 Bit Processor என்றால் என்ன?

கணினியின் மூளையாகச் செயற்படுவது Central Processing Unit எனும் ப்ரோஸெஸரே இந்த ப்ரோஸெஸ்ஸர் கணினிக்கு உள்ளிடு செய்யும் டேட்டாவை ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தி தகவலாக மாற்றுகிறது. இந்த செயற்பாட்டில் நினைவகமும் ப்ரோஸெஸருக்குத் துணை நிற்கிறது.

ப்ரோஸெஸ்ஸர் (Processor) பற்றி பேசும் போது 32 பிட், 64 பிட் போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். இவை எதனைக் குறித்து நிற்கின்றன?

பிட் (bit) என்பது binary Digit என்பதன் சுருக்கம். அடிப்படையில் இந்த பிட் ஆனது கணினி எவ்வாறு டேட்டாவை தேக்கி வைக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு பிட் என்பது 0 அல்லது 1 எனும் பெருமானங்களை எடுக்கலாம். 1 மற்றும் 1 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானத்தை (100100100111) பைனரி கோட் எனப்படுகிறது.

இந்த பிட்ஸ் கொண்டே ப்ரோஸெஸ்ஸரும் கணித்தல் செயற்பாடுகளை செய்கிறது. 32 பிட்டுகளைப் பயன்படுத்தும் ப்ரோஸெஸ்ஸர் 0லிருந்து 4,294,967,295 வரையிலான வெவ்வேறு பிட் சேர்மானங்களை உருவாக்கலாம். அவ்வாறே 64 பிட் பயன்படுத்தும் போது 0 லிருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும். ஆகவே 64 பிட் கணினி மூலம் அதிக எண்ணிக்கையிலான டேட்டாவைக் கையாள முடியும் என்பது வெளிப்படை.
அத்தோடு கணினியில் நீங்கள் என்றுமே கண்டு கொள்ளாத கவலைப் படாத பல ‘விடயங்கள்’ உள்ளன. அவற்றுள் டேட்டா பஸ் எனப்படும் ஒரு விடயமும் உள்ளது. இந்த டேட்டா பஸ்ஸானது எந்த நகரங்களுக்கிடையிலும் ஓடுவதில்லை. எனினும் இது டேட்டாவை கணினியின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அடிப்படையில் இந்த டேட்டா பஸ்ஸானது, நினைவகத்தை கணினியின் முளையாகச் செயற்படும் ப்ரோஸெஸ்ஸர் உட்பட வெவ்வேறு பாகங்களுடன் இணைக்கிறது, பழைய தொழில் நுட்பமான ஒரு 32 பிட் கணினியில் டேட்டா பஸ்ஸின் அளவானது 32 பிட் அளவு கொண்டதாயிருக்கும். ஆனால் இந்த புதிய தொழில் நுட்பமான 64 பிட் கணினியில் இதன் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிக டேட்டாவை ப்ரோஸெஸ் செய்யும் போது கணினி அதிக வேகம் கொண்டதாயிருக்கும். எனினும் இது குறிப்பிட்ட சில அப்லிகேசன்களுக்கே பொருந்தும்.

பெரிய அளவிலான கணிதற் செயற்பாடுகள் நடைபெறக் கூடிய தரவுத் தளங்களை அணுகக் கூடிய, மற்றும் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய, பெரிய வணிக நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்களில் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் மிகுந்த பயனளிக்கும்.

மேற்சொன்ன தேவைகள் இல்லாத ஒபிஸ் எப்லிகேசன் மற்றும் இணைய பயன்பாட்டோடு திருப்தியுறும் சாதாரண கணினிப் பயனர்களுக்கு இந்த 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் பெரியளவிலான பயனைத் தரப் போவதில்லை எனினும் கிரபிக் மற்றும் மல்டி மீடியா பயன்பாட்டில் பயன்தரலாம்.

32 பிட் ப்ரோஸெஸ்ஸரின் கட்டமைப்பை விட பல வகையில் மேம்பட்டதாக 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் உருவாக்கப்படுகின்றன. 32 பிட் ப்ரோஸெஸ்ஸரை விட 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக செயற்திறன் வாய்ந்ததால், வேகமாக டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடும். எனினும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆதரிக்கக் கூடிய மென்பொருள்களை கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இயங்கு தளங்களும் எப்லிகேசன் மென்பொருள்களும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கேற்றவாறு உருவாக்கப்படாத விடத்து சிறிதளவான பயனே கிடைக்கிறது. உதாரணமாக 64 பிட் விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் 32 பிட் மென்பொருள்களை ஆதரிப்பதில்லை.

ஒரு 64 பிட் இயங்குதளமானது (Operating System) என்பது 64 பிட் ப்ரோஸெஸ்ஸருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இயங்கு தளமாகும். விண்டோஸ் எக்ஸ்பீ விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பதிப்புக்கள் 32 பிட் 64 பிட் இயங்கு தளங்களுக்கென வேறு வேறாக உருவாக்கப்படுள்ளன.

64 பிட் மென் பொருட்களை 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்க முடியாது. எனினும் 32 பிட் மென்பொருள்களை 64 பிட் கொண்ட ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்கலாம். திணிளி நிறுவனத்தின் 64 பிட் ப்ரொஸெஸ்ஸர்கள் 32 மற்றும் 64 பிட் இயங்கு தளங்களை ஆதரிக்கின்றன.

அத்தோடு ப்ரிண்டர், ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா என கணினியில் பொருத்தும் அனைத்து வன்பொருள் சாதனங்களுக்கும் 64 பிட் கொண்ட ட்ரைவர் மென்பொருள்களையே நிறுவ வேண்டியிருக்கும். இது 64 பிட் ப்ரோஸெஸ்ஸ பயன்படுத்துவதிலுள்ள பாதக நிலையாகும். எனினும் AMD நிலைமை தற்காலிகமானதே. எதிர்காலத்தில் ட்ரைவர் மென்பொருள்களும் 64 பிட்டிலேயே கிடைக்கக் கூடியதாயிருக்கும்.

அதேவேளை 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக நினைவகத்தையும் ஆதரிக்க கூடியது என்பதால் நினைவகத்தின் அளவையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கணினியின் செயற்திறன் மேலும் அதிகரிக்கும் 64 பிட்டின் உச்ச பயனைப் பெற 4 ஜீபி அளவிலான நினைவகமும் அவசியமாகும்.

உங்கள் கணினி 32 பிட் ப்ரோஸெஸ்ஸரா அல்லது 64 பிட் ப்ரோஸெஸ்ஸரா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
விண்டொஸ் எக்ஸ்பீயில் Start a all Programs -> Accessories -> System tools °¼¡¸ System Information தெரிவு செய்யுங்கள் அப்போது தோன்றும் சிறிய விண்டோவில் Processor எனுமிடத்தில் கீ86 என இருப்பின் அது 32 பிட் ப்ரோஸெஸர் என உறுதி செய்து கொள்ளலாம்.

ia64 or AMD64 என இருப்பின் அது 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆகும். அதேபோல் OS Name எனுமிடத்தில் Microsoft Windows XP Professional x64 Edition என இருப்பின் அது 64 பிட் ப்ரொஸெஸ்ஸரை ஆதரிக்கும் இயங்குதளம் என தெரிந்து கொள்ளுங்கள்.

மென்பொருள் தயாரிப்பு நிறுவங்கள் இன்னும் 32 பிட்டிலிருந்து 64 பிட்டுக்கு முழுமையாக மாறி விடாததால் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற இன்னும் சிறிது காலம் செல்லலாம். எனினும் எதிர்காலத்தில் 32 பிட் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக் கிடையேயான போட்டியில் சந்தேகத்திற்கிடமின்றி 64 பிட் ப்ரோஸெஸ்ஸரே வெற்றி பெறப் போவது உறுதி.
- Varamanchari

உலகக் கோப்பை யாருக்கு?

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளை யார் வெல்வார்கள் என்கிற ஆரூடம் பலரால் வெளியிடப்பட்டு வருகிறது.
ஃபிஃபா தலைவர் செப் பிளெட்டருடன் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா

கால்பந்து விளையாட்டின் மிகச்சிறந்த வீரர் என்று வர்ணிக்கப்படும் பெலே இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியின் போது ஆப்பிரிக்க நாடு ஒன்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தான் நம்புவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரேசில் மற்றும் ஸ்பெயின் மிகச்சிறந்த அணிகளை கொண்டிருந்தாலும் யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் எனக் கூறுவது கடினமாக இருக்கும் எனவும் பெலே கூறியுள்ளார்.
எனினும் தனது நாடான பிரேசில் இறுதிப் போட்டியில் ஒரு ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுவதை பார்த்தால் தனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும் எனவும் பெலே கருத்து வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று அதில் தேர்வான 32 நாட்டு அணிகள், இந்த இறுதிப் போட்டியில் பங்கு பெறுகின்றன.

இந்த 32 நாடுகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் போட்டி இந்திய இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதில் போட்டிகளை நடத்தும் நாடான தென் ஆப்பிரிக்க அணி மெக்ஸிகோ அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ஜோஹனஸ்பர்கில் உள்ள சாக்கர் சிட்டி விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.



ஆவலுடன் பார்க்கப்படும் போட்டி
வடகொரிய அணியின் பயிற்சியாளர்

இந்தப் போட்டியில் பிரேசில் நாட்டு அணி வடகொரிய அணியை எதிர்த்து ஆடும் போது கால்பந்து விளையாட்டில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறிய நிகழ்வும் ஏற்படவுள்ளது.

ஐந்து முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வென்றுள்ள பிரேசில் அணி, 44 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள வடகொரிய அணையை எதிர்த்து ஆடவுள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறும் 32 நாடுகளின் தரப்பட்டியலில், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது வடகொரியா.

பிரேசில் நாடு தடையற்ற சுதந்திரம் கொண்ட, மகிழ்ச்சித் துடிப்புடன் விளங்கும் ஒரு நாடு. ஆனால் வடகொரியாவோ கடுமையான இரும்புத் திரைக்கு பின்னர் செயற்படும் நாடு.

பிபிசி ஆய்வு
இதனிடையே உலகக் கோப்பையை போட்டியை யார் வெல்லக் கூடும் என்பது குறித்து பிபிசி ஒரு ஆய்வை நடத்தியது.
உலகின் பல பகுதிகளில் உள்ள கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டுத்துறை செய்தியாளர்கள், மற்றும் இதர வல்லுநர்களிடம் கருத்து கேட்டு ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வு முடிவுகளின்படி உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்கிற பட்டியலில் முதலிடத்தில் ஸ்பெயினும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன. அர்ஜெண்டினா அணி மூன்றாம் இடத்திலும் இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.
கருத்துக்கணிப்புகள், ஆரூடங்கள் எல்லாம் எந்த அளவுக்கு சரியாக அமைந்தன என்பது ஜூலை மாதம் 11 ஆம் தேதி தெரிந்துவிடும்.

bbc tamil



உண்மையை சொல்வது துரோகமல்ல

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த "உண்மைகளை கூறுவது தனது கடமை" என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்


அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, '' பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.'' என்று கூறியிருந்தார்.



தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.



தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.



இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.
..........BBC tam

பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதாக இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.




இடமிருந்து வலமாக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமரன், தொழிற்கட்சித் தலைவர் கோர்டன் பிரவுன் மற்றும் லிபரல் டெமாக்கிரடிக் கட்சித் தலைவர் நிக் கிளெக்

மொத்தமுள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் 621 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிக இடங்கள் பெற்ற கட்சியாக கன்சர்வேடிவ் கட்சி விளங்குகிறது. அக்கட்சி 295 இடங்களை இதுவரை பெற்றுள்ளது.

ஆட்சியிலுள்ள தொழிற்கட்சி இதுவரை 251 ஆசனங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை தேர்தலில் அக்கட்சி பெற்ற இடங்களோடு ஒப்பிடுகையில் அக்கட்சி 85க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளது.

மூன்றாவது நிலையில் உள்ள லிபரல் டெமாக்கிரடிக் கட்சி 52 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஏனைய பிராந்தியக் கட்சிகளும் சுயேட்சைகளுமாக 27 ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.

1974ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையவிருப்பதாகத் தெரிகிறது.

எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், எக்கட்சிகள் இடையில் கூட்டணி ஆட்சி ஏற்படும், யார் பிரதமராக வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பெருவெடிப்பு சோதனை வெற்றி

இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

சில மில்லி மீட்டர் அளவில் ஒன்று திரண்டிருந்த அணுக்கள் திடீரென பயங்கர வேகத்துடன் வெடித்துச் சிதறியது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இது விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு விரிவடைந்த போது வெப்பம் தனிந்த வாயுக்கள் தான் நட்சத்திரங்களாகவும் கோள்களாவும் உருவாயின என்பது தான் பெருவெடிப்புக் கொள்கை.  இது 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அணு மோதலால் வெடித்துச் சிதறி இம்மாபெரும் பேரண்டம் உருவானது என்றால் செயற்கையாக அணு மோதலை ஏற்படுத்தி வெடிக்கச் செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கினர்.

ஐரோப்பாவின் அணு ஆராய்ச்சி மையம் சுவிட்சர்லாந்தில் உள்ள சேர்ன் அணு ஆராய்ச்சி மையத்தில் இந்தச் சோதனையை நடத்த திட்டமிட்டது.

80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் உழைத்து சென்ற வருடம் இம்முயற்சியில் இறங்கினார்கள்.

சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்தனர்.

சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நேர் மோதவிட்டு, அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர்.

ஆனால் 2008 செப்டம்பர் 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.57 மணிக்கு பிக்-பேங் சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்டதிரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்ததால் ஒன்பது நாட்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் செயல் இழந்தது. சோதனை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் இச்சோதனையை வெற்றிகரமாக நடத்திட பதினேழு மாதங்கள் விஞ்ஞானிகள் உழைத்து சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டனர்.

கணித அடிப்படையிலும் ஊகமாகவும் சொல்லப்பட்டு வந்த பெருவெடிப்புக் கொள்கை இச்சோதனை மூலம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் கீழ்க்காணும் உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

அணுக்கள் மோதும் போது மாபெரும் ஆற்றல் அதில் இருந்து வெளிப்படுகிறது.
அந்த ஆற்றல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
பின்னர் விரிவடையும் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து விரிவடைந்த ஆற்றல் சுருங்கி வெடிப்பதற்கு முன் இருந்த நிலையை அது அடைகின்றது.

இது தான் இந்த சோதனை மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். பிரபஞ்சம் உருவாகக் காரணமான அணு ஆற்றலுடனும் இப்பிரபஞ்சம் உருவாக்குவதற்கான அணு மோதலுடனும் இதை ஒப்பிடவே முடியாது. பூமி உருண்டை என்பதைச் சொல்லிக் காட்டும் போது ஒரு கடுகை எடுத்துக் காட்டி இது போல் பூமி உருண்டையானது என்று சொல்வது போல் தான் இந்தச் சோதனை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடுகுக்கும் பூமிக்கும் அளவில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பது
நமக்குத் தெரிகிறது. இரயில் வண்டியின் செயல்பாட்டை பொம்மை ரயில் மூலம் விளக்குவது போன்றது தான் இந்தச் சோதனை இப்பிரபஞ்சம் உருவாகும் போது வெடித்த அணுவின் ஆற்றல் மற்றும் அதன் வெப்பம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த செயற்கை அணு மோதல் உதாரணம் சொல்லிக் காட்ட முடியாத அளவுக்குச் சிறியதாகும்.

இவர்கள் சோதித்த செயற்கை அணு மோதல் விரிவடைந்ததும் மீண்டும் சுருங்கி பழைய நிலைக்கு திரும்பியதும் சில நாட்களில் முடிந்து விட்டன. ஆனால் 14 பில்லியன் ஆண்டுக்கு முன் நிகழ்ந்த பெரு வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட விரிவடைதல் இன்னும் நிற்கவில்லை. விரிவடைந்து கொண்டே உள்ளது. அதன் பின்னர் தான் விரிவடைதல் நின்று பழைய நிலைக்குத் திரும்பும். இதில் இருந்தே வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.

இது குறித்து இன்றைய 31-3-2010 தினமலரில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள்

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்

சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் அனைத்தும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இது இறை வேதம் தான் எனபதை நிரூபிக்கின்றது.
அனைத்து இணைந்திருந்தனவானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?திருக்குர்ஆன் 21:30

பிரபஞ்சம் விரிவடைகிறது)நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.திருக்குர் ஆன் 51:47

மீண்டும் சுருட்டப்படும்எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.திருக்குர் ஆன் 21:104

www.online pj.com

அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி.

இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்.



Superconducting magnets are cooled down using liquid helium

இதில் உணரப்பட்ட வெப்பநிலை 1.9 கெல்வின் (K)(-271C; -456F) ஆக இருக்கிறது. விண்வெளியில் ஆழமான பகுதியில் வெப்பநிலை கிட்டத்தட்ட 2.7 கெல்வின் ஆக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

The CMS detector will search for the Higgs boson - the so-called "God particle"



உலகிலேயே பிரமாண்டமான பெளதீகவியல் பரிசோதனைக் கூடமாக விளங்கும் இந்த Cern lab இல் அமைக்கப்பட்டுள்ள Large Hadron Collider (LHC) நடத்தப்படவிருக்கும் பரிசோதனையில், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் எதிர் எதிர் திசைகளில் நேர் ஏற்றமுள்ள புரோத்திரன் (Proton)களை மோதவிட்டு அவை மோதிச் சிதறும் வேளையில் பிறக்கும் துகள்கள் பற்றி ஆராய இருக்கின்றனர்.


இந்த புதிய துகள்களினை மற்றும் அவற்றின் தன்மைகளை அடையாளம் கண்டுவிட்டால் பிரபஞ்சத்தில் சடப்பொருட்களை ஆக்கியுள்ள அணுக்கள் கொண்டுள்ள உப அணுத்துணிக்கைகளை ஆக்கியுள்ள பிரதான அடிப்படைக் கூறை அல்லது கூறுகளை இனங்காணலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இவற்றையே அவர்கள் கடவுளின் துகள் அல்லது துகள்கள் என்று கருதுகின்றனர்.


இதற்கிடையே இந்தப் பரிசோதனையால் செயற்கையான கறுப்போட்டை அல்லது கருந்துளை (Black hole) ஒன்று பூமியில் செயற்கையாக உருவாக்கப்படக் கூடிய சூழல் இருப்பதால் அது பூமிக்கு ஆபத்தாக அமையலாம் என்றும் சில விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


எதுஎப்படியோ European Organization for Nuclear Research (CERN) அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த LHC ஆய்வு கூடம் தனது கடவுளின் துளைத் தேடும் பரிசோதனையை செய்ய ஆரம்பித்துக் கொள்ள இருக்கிறது என்பதையே மேற்குறிப்பிட்ட அதி குளிர் சூழல் உருவாக்கம் உணர்த்தி நிற்கிறது. இந்தப் பரிசோதனையின் போது மிகப் பெருமளவிலான சக்தி உருவாக்கப்படுவதோடு.. பெருமளவு வெப்பமும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால்.. ஆழமான விண்வெளியில் உள்ளது போன்ற இந்த அதி குளிர் சூழல் என்பது இப்பரிசோதனைக்கு முக்கியமான ஒன்றாகும்.

மேலதிக தகவல் இங்கு.

'மதமாற்றம் தவறல்ல'-சாராவை விடுவிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புகள் _

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார்.

"சாரா மலனி பெரேரா அவரது சொந்த விருப்பின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவரை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. அவர் எழுதிய நூல்களில் பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இலங்கை அதிகாரிகள் அவரை விடுதலை செய்து பஹ்ரேனுக்கு அனுப்ப வேண்டும். பஹ்ரேனில் அவர் நீண்டகாலம் வசித்தவர். அவருக்கு இது சொந்த நாட்டைப் போன்றது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டதாக பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

'இருளிலிருந்து வெளிச்சத்துக்கு' என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி-பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, பஹ்ரேனின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
வீரகேசரி

http://asfarmnm.blogspot.com/2010/03/blog-post.html