Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

தைராய்டு (தொண்டைக்கழலை) பற்றித் தெரிந்துகொள்வோம்

தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.

நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள்.



இந்த ஹார்மோன்களின் பணி என்ன?



இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை உருவாக்குவதாகட்டும், வளர்சிதை மாற்றமாக இருக்கட்டும், இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த இரு ஹார்மோன்களும் சரியான அளவில் சுரப்பது மிக மிக மிக அவசியம். இது அதிகமானாலும், குறைவானாலும் உடல் பலவிதக் கோளாறுகளுக்கு ஆளாகிவிடுகிறது.



தைராய்டு உடலின் பல பணிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், இந்தத் தைராய்டு சுரப்பியைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? நம் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி. இது தைராய்டு சுரப்பியைத் தூண்டும் Thyroid Stimulating Hormone (TSH) என்ற திரவத்தைச் சுரக்கிறது. இத்திரவம் தைராய்டு சுரப்பிக்கு மட்டுமேயானது. இது தைராய்டு திரவம் உருவாவதிலும் சுரப்பதிலும் நேரடிப் பங்கு வகிக்கிறது. தைராய்டு ஹார்மோனின் அளவு எவ்வளவு, இன்னும் எவ்வளவு தேவை என்பன போன்றவற்றையெல்லாம் இந்தத் திரவம் கண்காணிக்கிறது.



தைராய்டு சரியான அளவில் இருப்பதற்கு அயோடின் மிகவும் அவசியம். ஏனெனில், தைராய்டு ஹார்மோன்கள் அயோடினை அடிப்படையாகக் கொண்டவை. உடலில் அயோடின் குறையுமானால், தைராய்டு சுரப்பி ஏறுக்குமாறாகப் பணிசெய்யத் தொடங்கிவிடும். எனவே உணவில் அயோடின் தேவையான அளவு இருக்கவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் உள்ள நீர் மற்றும் நிலத்தின் தன்மையைப் பொறுத்தது. ஒருவேளை அப்பகுதியில் அயோடினின் அளவு குறையுமானால் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.



தைராய்டுக் கோளாறுகளின் வகைகள்:



தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமையால் ஏற்படும் கோளாறுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.




ஒன்று : முன் கழுத்துக்கழலை எனப்படும் காய்டர்(Goiter). கழுத்துப்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி பெரிதாகி (வீங்கி) பைகள் போல் தொங்கும். தைராய்டு சுரப்பி இரண்டு முதல் பத்து மடங்கு வரை பெரிதாகக் கூடும். கழுத்துப்பகுதியில் சிறிய அளவு வீக்கம் ஏற்பட்டால் கூட, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரிவரக் கவனிக்காவிடில், இது புற்றுநோய்க்கும் வழி கோலிவிடக்கூடும்.



இரண்டு: தைராய்டு சுரப்பி சரிவர இயங்காமை. இது மேலும் இரண்டு வகையாகப் பிரிக்கப் படலாம். மிகவும் குறைந்த தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hypothyroidism) அல்லது மிகவும் அதிகமான தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு (Hyperthyroidism)

இரண்டுமே உடலின் வளர்சிதை மாற்றத்தில் பல விதமான குளறுபடிகளை ஏற்படுத்தக் கூடியவை.இவ்வகைக்கோளாறுகளை மிக எளிமையான இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து விடமுடியும். சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் பழைய இயல்பான நிலைமைக்கு வெகு விரைவில் கொண்டுவரவும் முடியும்.



தைராய்டுக்குறைவு நோய் (Hypothyroidism)



தைராய்டுக் கோளாறுகளில் அதிக அளவு மக்கள் பாதிக்கப்படுவது இந்த Hypothyroidism என்ற கோளாறால்தான். அதிகச் சுரப்பால் பாதிக்கப் படுபவர்களை விட குறைவான சுரப்பால் பாதிக்கப் படுபவர்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாவார்கள். தைராய்டு சுரப்பி T3 மற்றும் T4 எனும் இரண்டு வகை திரவங்களைச் சுரக்கிறது என்று முன்பே கண்டோம். தைராய்டு சுரப்பி இத்திரவங்களைத் தேவைக்கு மிகக் குறைவாகச் சுரக்கும்பொழுது பல விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை மருத்துவர்களையே குழப்பிவிடக்கூடியவை. தைராய்டுக்கான பரிசோதனை செய்யாதவரை, இவை வேறு பல நோய்களுக்கான அறிகுறிகளாகக் கருதப் பட்டு மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றினால் தைராய்டுக்குறைவினால் ஏற்பட்டுள்ளதா என ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிடுவது நன்மை பயக்கும்.



அடிக்கடி மயக்கம் அல்லது தளர்ச்சி உண்டாகுதல், கைகால்களில் தசைப்பிடிப்பு, விரல்கள் நடுங்குதல், நடக்கும்பொழுதும் நிற்கும்பொழுதும் தடுமாறுதல், தசைகள் வீக்கமடைதல், திடீரென அதிக அளவு எடை கூடுதல், தோல் வறண்டு விடுதல் அல்லது மஞ்சள் நிறமாகுதல், அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லை, முகம் உப்புதல், மனச்சோர்வு, தொண்டை அடைப்பு,இதயத்துடிப்பு இயல்பை விடக் குறைதல், முடி கொத்துக்கொத்தாக உதிர்தல், தொண்டை வீக்கம், மலட்டுத்தன்மை அல்லது கருச்சிதைவுகள், ஒழுங்கற்ற மாதவிடாய் முதலியன தைராய்டு குறைவினால் தோன்றும் சில உடல் உபாதைகள்.



தைராய்டு அதிகம் சுரத்தல் (Hyperthyroidism)



தைராய்டு சுரப்பி அதிக அளவு தூண்டப்படும்பொழுது தேவைக்கு மிக அதிகமான ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன. இது Hyperthyroidism என்று அழைக்கப் படுகிறது. இதற்கான அறிகுறிகள் உடல் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி, சிறிதளவு கூட வெப்பத்தைத் தாங்க இயலாமை, உடல் எரிச்சல், எப்பொழுது பார்த்தாலும் பசித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றுதல், தூக்கமின்மை, மூச்சு விட இயலாமை, எடை கன்னாபின்னாவென்று குறைதல், பலவீனம், ஈரமான சருமம், அதிக அளவு இதயத்துடிப்பு ஆகியவை.



தைராய்டுக்கோளாறுகள் பொதுவாக யாருக்கெல்லாம் வரக்கூடும்?



யார் வேண்டுமானாலும் தைராய்டுக்கோளாறினால் பாதிக்கப் படக்கூடும் என்றாலும் கீழ்க்கண்ட பிரிவினர் அதிக எச்சரிக்கையாக இருப்பதும் முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.



1. நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள்

2. சமீபத்தில் பிரசவித்தவர்கள்

3. அதிகமான கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள்

4. கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கும் இரண்டு கிலோவுக்கும் அதிகமான எடை இழப்பு ஏற்பட்டவர்கள்.

5. அடிக்கடி உடல் தளர்ச்சி ஏற்படுபவர்கள்

6. குழந்தையின்மை மற்றும் மாதவிடாய்க்கோளாறுகளுக்கு ஆளாகியுள்ள பெண்கள்

7. ஏற்கனவே தைராய்டுக்கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்கள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்



இத்தைராய்டுக்கோளாறுகள் ஏன் உருவாகின்றன? இவற்றை எதிர் கொள்வது எப்படி? இவற்றுக்கான மருத்துவ சிகிச்சைகள் என்னென்ன என்ற விவரங்களுடன் அடுத்த பகுதியில்........



- ஈழநேசன்

என்ன செய்யும் இந்த FUNCTION KEYS?


கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.


இந்த பன்ங்ஷன் விசைகள் பயன்படுத்தப்படும் இயங்கு தளத்திலும் எப்லிகேசன் மென்பொருளிலுமே சார்ந்திருக்கின்றன. அதாவது இவை எல்லா எப்லிகேசன்களிலும் எல்லா இயங்கு தளங்களிலும் ஒரே மாதிரியாகத் தொழிற்படுவதில்லை. அதேவேளை சில விசைகள் சில எப்லிகேசன்களில் தனியாக தொழிற்படுவதோடு வேறு சில விசைகள் ALT மற்றும் CTRL விசைகளோடு சேர்த்தே இயக்கப்படும். உதாரணமாக விண்டோஸ் இயங்கு தளத்தில் ALT + F4 விசைகளை அழுத்துவதன் மூலம் இயக்கத்திலிருக்கும் ஒரு எப்லிகேசனை நிறுத்திவிட முடியும்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் மேலே குறிப்பிட்டது போல் எல்லா எப்லிகேசன்களும் பங்ஷன் விசைகளை ஆதரிப்பதில்லை. அதேவேளை சில விசைகள் எந்த செயற்பாடுகளும் வழங்கப்படாமலும் உள்ளன.

பங்க்ஷன் விசைகளில் சில பொதுவான தொழில்கள் கீழே விவரிக்கப்படுகின்றன.

F1
இந்த விசை அனேகமாக எந்த எப்லிகேசனிலும் அதற்குரிய உதவிக் குறிப்புகளடங்கிய பைலை வரவழைக்கும். அதேவேளை எந்த எப்லிகேசனும் திறக்கப்படாத நிலையில் இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸ¤க்குரிய ஹெல்ப் பைல் திறந்து கொள்ளும். எம். எஸ். வர்ட்டில் இந்த விசையை அழுத்த டாஸ்க் பேன் (Task Pane) திறந்து கொள்ளும் அதிலிருந்து உதவிகள் பெறலாம்.


F2
விண்டோஸில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு பைலின் அல்லது போல்டரின் பெயரை மாற்ற (rename) இந்த விசை பயன்படும். எம். எஸ். வர்டில் Alt + Ctrl + F2 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தும் போது open டயலொக் பொக்ஸ் திறக்கும்.


F3
இதனை அழுத்தும் போது கணினியில் பைல் போல்டர்களைத் தேடித்தரும் Search விண்டோ திறந்து கொள்ளும். எம். எஸ். வர்டில் Shift + F3 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் வாக்கியமொன்றின் ஆரம்பத்தில் ஆங்கில பெரிய எழுத்தில் (upper case) உள்ளதை சிறிய எழுத்தாகவும் (lower case) சிறிய எழுத்திலுள்ளதை பெரிய எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம்.


F4
விண்டோஸில் எந்த தொழில்பாடையும் செய்வதில்லை. எம். எஸ். வர்டில் இறுதியாகச் செய்த வேலையை மறுபடி செய்யும் Alt + F4 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் தற்போது இயக்கத்திலிருக்கும் எப்லிகேசனை நிறுத்தி விடலாம். எப்லிகேசன் எதுவும் திறந்திறாத நிலையில் Alt + F4 விசைகளை அழுத்தி விண்டோஸ் இயக்கத்தையும் நிறுத்த முடியும்.


F5
விண்டோஸில் இந்த விசையை அழுத்தி ஒரு விண்டோவின் உள்ளடக்கத்தை Refresh செய்து புதுப்பிக்கலாம். அனேகமான வெப் பிரவுஸர்களில் ஒரு இணைய பக்கத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசையே பயன்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தை மறுபடி ஆரம்பத்திலிருந்து தோன்றச் செய்யலாம். எம். எஸ். வர்டில் இந்த விசை அழுத்தி Find & Replace டயலொக் பொக்ஸை வரவழைக்கலாம். எம். எஸ். பவர் பொயிண்டில் இந்த விசையை அழுத்தி ஸ்லைட் ஷோவை இயக்க முடியும்.


F6
இண்டர் நெட் எக்ஸ்ப்லோரர் மற்றும் மொஸில்லா பயபொக்ஸ் பிரவுசர்களில் கர்சரை எட்ரஸ் பாரை நோக்கி நகர்த்தலாம் Ctrl + Shift + F6 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் திறந்து வைத்துள்ள எம். எஸ். வார்ட் ஆவணங்களில் மாறிக்கொள்ள


F7
எம். எஸ். வர்ட் மற்றும் பவர்பொயின்ட் மென் பொருள்களில் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டறிந்து சரி செய்யக் கூடிய டயலொக் பொக்ஸ் தோன்றும்.


F8
இந்த இசையை விண்டோஸ் இயங்க ஆரம்பிக்கும் முன்னர் அழுத்துவதன் மூலம் விண்டோஸ் ஸ்டாட்-அப் மெனுவை வரவழைக்கலாம். விண்டோஸ் ஆரம்பிப்பதில் சிக்கல் தோன்றும் போது அதனை சேப் மோடில் (Safe Mode) இயக்க இந்த விசையே பயன்படுத்தப்படுகிறது-


F9
இந்த விசையை அழுத்தும் போது விண்டோஸில் எந்த இயக்கமும் நடைபெறாது.


F10
விண்டோஸில் திறந்திருக்கும் எந்த எப்லிகேசனிலும் மெனுபாரை இயக்க நிலைக்கு மாற்றி (activate) அதன் மூலம் கீபோர்டைக் கொண்டே மேலும் தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்தோடு Shift + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துவதன் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது தோன்றும் கண்டெக்ஸ்ட் மெனுவை வரவழைக்கலாம்.


F11
அனேகமான இணையை உலாவிகளில் (வெப் பிரவுஸர்) முழுத் திரையைத் தோன்றச் செய்யும்.


F12
எம். எஸ். வர்டில் ஷிavலீ as விண்டோவை வர வழைக்கும். அத்தோடு Shift + F12 விசைகளை அழுத்தும் போது வர்டில் ஆவணமொன்று சேமிக்கப்படும். Ctrl + Shift + F12 விசைகளை அழுத்தி Print டயலொக் பொக்ஸை வரவழைக்கும்.

விண்டோஸில் எல்லா பங்க்ஷன் விசைகளும் பயன்படுவதில்லை என்பதை இப்போது நீங்கள் புரிந்திருக்கலாம். (உதாரணம் F9) எனவே இதனை சாதகமாகப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் ஒரு எப்லிகேசனுக்கு அந்த விசையை ஒதுக்கிவிட முடியும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த பங்ஷன் விசையை அழுத்தி ஒரு எப்லிகேசனைத் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்.

டெஸ்க் டொப்பில் அல்லது ஸ்டார்ட் மெனுவில் இருக்கும் நீங்கள் விரும்பிய எப்லிகேசனுக்குரிய ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்று டயலொக் பொக்ஸில் Shortcut டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Shortcut Key எனுமிடத்தில் நீங்கள் விரும்பிய பங்க்ஷன் கீயை அழுத்தி ஒகே செய்து விடுங்கள்.

The Forgotten Keyboard Function Keys And Their Uses

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?



சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.


சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.

இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.



ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.



ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.



ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.



வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.



வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.



பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.



சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.



அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.



மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.

- தேன்தமிழ்

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா?

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்
முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, “கரு”வில் குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது, அறிவியல் உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.
முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும், (யூதர்கள், கிருஸ்தவர்கள்) “இயற்கையே கடவுள்” என நம்பிக்கை கொண்டுள்ள நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
“பாத்திரங்கள் எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோ, அது போல் மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது” என்று மதவாதிகள் நம்பி வருகிறார்கள்.
இயற்கையை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் “அமீபா” என்ற ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ச்சி அடைந்து இயற்கையாக பல மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு உயிரினங்களாக தோன்றி, அது குரங்கு நிலைக்கு வந்து, அதன் பிறகு நிகழ்ந்த மாற்றத்தில் குரங்கிலிருந்து முதல் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் (செத்து போன) தத்துவத்தை(?) நம்பி வருகிறார்கள்.
இந்த இரண்டு கருத்துமே தவறானது என்ற முடிவுக்கு வந்துள்ளது இன்றைய விஞ்ஞான உலகம். “அமீபா”விலிருந்து இயற்கையாகவே வளர்ச்சி அடைந்து, மனிதனுடைய நிலைக்கு வந்திருப்பது உண்மை என்று நாம் நம்ப வேண்டும் எனில் அந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று, மனிதனிலிருந்து வேறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க வேண்டும். மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற மாற்றம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகூட இல்லை. குரங்கு மனிதனாக மாறியது உண்மை எனில் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை?
படைப்பாளன் இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லை. அவ்வாறு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பது தான் உண்மை. எனவே டார்வினின் “இயற்கையாக எல்லாப் பொருளும் வந்தன” என்ற தத்துவம் (?) குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.
மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது என்று மதவாதிகளால் நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் தகவலையும் அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.
மண்ணின் “மூல”சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்
மண்ணையும், மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக இருக்கிறது, எனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
(மண்ணிற்கும் மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள்: பிராணவாய்வு, கால்சியம், பொட்டாசியம், உப்பு, கார்பன், ஹைட்ரஜன், பாஸ்பரஸ், கந்தகம், சோடியம், நைட்ரஜன், குளோரின், மெக்கினீசியம், இரும்பு, செம்பு போன்றவைகளாகும்.)
ஆனால் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால் இது புது கருத்தல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல் ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.
முதல் மனிதனும், குர்ஆனும்
மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம், களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர். உண்மை அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும், மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.அல் குர்ஆன் 6: 2
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.அல் குர்ஆன் 30: 20
குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது “தீன்” (களிமண்) என்ற வார்த்தையை 6 முறையும், “துராப்” (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும், சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல. சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும், சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.
“தீன்” என்ற வார்த்தையும், “துராப்” என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிப்பது தவறான போக்காகும். காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லை. அவன் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும், அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும். மனிதனை களிமண்ணில்தான் படைத்தான் என்றால் “தீன்” என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் “துராப்” என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும் தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்வரும் 32வது அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான் ஆரம்பித்தான்” என்று இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
(களிமண் கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாது, களிமண் கொண்டு மட்டும் உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டு, உறுதிவாய்ந்ததாக இருப்பதில்லை, பாத்திரங்கள், செங்கள் போன்ற பொருட்கள் செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும், அதனால் தான் களிமண்ணில் பாத்திரம், செங்கள் செய்பவர்கள், வீடு கட்டுவர்கள் மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல் சாதாரண மண் கொண்டு எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாது. காரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)
இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை. இந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்து, அந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி, அந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான “மூல” த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான். இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை. மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள், நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது. மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ
(அவன்) எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். 32: 7
இந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.
களி மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்து, எந்தந்த நிலையை அடைந்து, அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.
إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ
நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன்: 37:11
இது மனித படைப்பின் இரண்டாவது நிலை
பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்? களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறது. இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது. (மனிதன் உடலமைப்பில் 75 சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது. (எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ
மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறிய, தட்டினால் ஓசை வரும் களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல் குர்ஆன்: 15: 26
இந்த வசனத்தில் மனித படைப்பின் மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.
“ஹமஉ” என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். “மஸ்னூன்” என்றால் மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும். மண், களிமண், தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.) இருந்த அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறி, துர்வாடை ஏற்படும் நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு நிறமாக மாறி, துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ
சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்) ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். அல் குர்ஆன்: 55:1
இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை
“ஸல்ஸால்” என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும். அதனை தட்டினால் “ஸல், ஸல் என ஓசை தரும் என்பதால் அதற்கு “ஸல்ஸால்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த “ஸல்ஸால்” என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில் களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம் செய்கிறது.
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ
நிச்சயமாக (முதல்) மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 23:12
இது மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும். முதல் மனிதன் களிமண்ணுடைய மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1429 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில் அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறது. அது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. “குன்” என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் “ஆகுக!” எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும். அல் குர்ஆன்: 36: 82
எனினும் உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வானத்தையும் பூமியையும் ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லை. முதல் மனிதனை படைப்பதற்கு எந்த பொருளின் துணையும், எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க முடியும் என்றாலும் மண், களிமண், தண்ணீர் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உருவாக்கி, அந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப் படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.

இணையம்: தெரிந்ததும் தெரியாததும்

உலகின் மிகப் பெரிய கணினி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.
ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.
பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.
பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP / IP (Transmission Control Protpcol / Internet Protocol)எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிலிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.
இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்பட்டது.
தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்தவொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடல் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.
இணையம் சார்ந்த சில கலைச் சொற்களையும் அவற்றிற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
Asymmetric Digital Subscriber Line (ADSL) : : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.
Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஒன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்றதே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை Blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன.
Download : இணைய சேவைகளில் ஒன்றான உலகளாவிய வலைத் தளமான www ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம் : இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்.
Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும்.
Domain Name : இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணைய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக்கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.
Dial-up : இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைக்கப்படும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.
E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com என்னும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குaட்டால் பிரிக்கப்படும்.
Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.
FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக்கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.
File attachment : மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.
Firewall : இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுருவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.
Hyperling : இணைய தளமொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும் இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.
HTTP (Hypertext Transfer Protocol) உலகளாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி ஷி(சிகி!ழிu.
சிஹிணிழி HTML (Hypertext Mark\up Language வலைத்தளங்களை உருவாக்கப் பயனப்டும் ஒரு கணினி மொழி.
Home Page : ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது.
Hacker : ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கைதேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்) எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.
Instant Message (IM) : இணையத்தைப் பயன்படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்த்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாணரம் : யாஹ¥ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்
Internet Service Provider (ISP) : இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே யிஷிஜி எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.
IP (Internet Protocol) address : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரணம் : 169, 254, 222.1) ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்கும்.
யிஷிளினி ISDN (Integrated Services Digital Network) டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.
Intranet ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணையத்தோடு தொடர்புபட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்கள் யாரும் இந்த வலையமைப்பை அணுக முடியாது.
Modem : என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இது டிஜிட்டல் வடிவிலுள்ள டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வடிவிலும் மாற்றுகிறது-
Offline :கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது.
Online : இணையத்தில் எமது கணினி இணைந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.
Password :ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்டவர்கள் மாத்திரம் அணுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.
Portal : மின்னஞ்சல், தேடற்பொறி, போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணையதளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹ¥
Server ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்துகொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.
Search Engine வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகளாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், ஷாஹ¥, பிங்
Sub Domain : டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.
Spam எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயே எமது மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.
Top-level domains : டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது.
உதாரணம் .com, .gov, .edu. Uniform Resource Locator (URL) : (ஸிஞிழி) : உலகளாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது. உதாணரம் Upload இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது.
World Wide Web ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகளாவிய வலைத்தளம்) எனப்படுகிறது- இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.
Website : HTML சிஹிணிழி எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இணையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும்.
இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும். இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம்.



via Thinakaran news paper

பிரிட்டிஷ் ஹோட்டலில் மத நிந்தனை: இருவருக்கு சிறை

லண்டன், டிச. 08 (ஏ.எப்.பி.)
பிரிட்டிஷ் நட்சத்திர விடுதியில் ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்ணை இம்சைக்குள்ளாக்கிய இருவர் சிறையிலடைக்கப்பட்டனர்.
சிறையிலடைக்கப்பட்ட இரு வரும் ஹோட்டல் உரிமையாளர்களாவர்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர்கள் முஸ்லிம் பெண்ணிடம் சென்று மதநிந்தனை செய்தனர். உனது ஆடை (ஹிஜாப்) அடக்கு முறையின் வெளிப்பாடு.
முஹம்மது நபி யுத்தப்பிரியர் என அவர்கள் கூறினர். இது குறித்து முஸ்லிம் பெண்மணி கூறியதாவது,
எனக்கு அறுபதுவயது. என்னைப் பார்த்து நீ ஒரு பயங்கரவாதியா ஒரு கொலைகாரியா எனக் கேட்டவுடன் கடும் அதிர்ச்சியடைந்தேன் என்றார். இப் பெண் கடந்த மார்ச்சில் இஸ்லாத்தை தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

A couple have gone on trial in Britain on Tuesday accused of verbally abusing a Muslim woman for wearing the hijab while staying at their hotel.
Ericka Tazi says she was subjected to an hour-long tirade by Benjamin and Sharon Vogelenzang, who are Christians, after emerging from her room on the morning of March 20 wearing the Islamic head covering and gown.
Tazi, who converted to Islam 18 months ago, was allegedly asked by Benjamin Vogelenzang if she was a terrorist. His wife said her dress "represented oppression and bondage", Liverpool Magistrates Court was told,
"It was my outfit that had triggered him," Tazi told the court, saying the hotelier had resembled "a whirling dervish".
"He asked me if I was a murderer, if I was a terrorist. I'm a 60-year-old disabled woman, I couldn't understand where it was coming from, it was shocking to me."
Benjamin Vogelenzang, 53, also called the prophet Mohammed a "warlord" and compared him to Adolf Hitler, prosecutor Anya Horwood told the court.
Tazi denied she had had robust arguments about religion with other guests during her stay at the hotel under questioning by defence lawyer Hugh Tomlinson.
The Vogelenzangs, who run a hotel in Aintree, Liverpool, deny a charge of using religiously aggravated threatening, abusive or insulting language.
Their trial is expected to conclude on Wednesday.

Unmoveable Files என்றால் என்ன?

இயங்கு தளத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன் மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page File) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை இடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பிரதான நினைவகமான Ram இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாதபோது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும். இதனையே பேஜ் பைல்/ ஸ்வொப் பைல் (Swap File) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது.
அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.
ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணனியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம். அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter என்னும் யூட்டிலிட்டி விண்டோஸ¤டன் இணைந்து வருகிறது.
டிப்ரேக்மண்ட் செய்யும் போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ணம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
டிப்ரேக்மண்ட் செய்யும் போது டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படு கிறது. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகு இந்த அன் மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாக இருக்கும்.
பேஜ் பைல் அல்லது ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்கு விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel/ Systerm/ Advanced tab/ Performance Setting/ Advanced tab/ Change தெரிவு செய்யுங்கள். அங்கு (Virtual Memory) என்பதன் கீழ் No paging file தெரிவுசெய்து ஷிலீt என்பதைக் கிளிக் செய்யுங்கள் பின்னர் கணனியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.
டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum Size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட்டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது கணனியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹாட் டிஸ்கிலுள்ள மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும். ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும் போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த ணிபிஹி பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.
ரெஜிஸ்டரியில் சிறிய மாற்றத்தைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start - Run - Regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரை (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE/SYSTEM/ Current Control Set/ Control/ File system வரை பயணித்து NtfsMft Zone Reservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலதுபுறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்Zடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்Zடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.
thinakaran

டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு


அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும்.இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன.ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது.இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறியhttp://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் 2017ம் ஆண்டு வெளியேறி விடும்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2017ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 2001ம் ஆண்டு நியூயோர்க் இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின் ஆப்கானிஸ்தானில் பதுங்கியுள்ள அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது படைகளை அனுப்பி வைத்தது. இது தவிர நேட்டோ நாட்டு படைகளும் ஆப் கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்களது படை வீரர்களை படிப்படியாக திரும்ப பெற்று வருகின்றன. 2011ம் ஆண்டுக்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள கனடா முடிவு செய்துள்ளது. இதனால் ஆப் கானிஸ்தான் காந்தகார் பகுதியில் பாது காப்பில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஒபாமா நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக் கான அமெரிக்க படைத் தளபதி ஸ்டான்லி மெக் கிறிஸ்டல் நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே 35 முதல் 40 ஆயிரம் வரையிலான இராணுவ வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது.
இது குறித்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் கூறியதாவது :-
நமது படைகள் ஏன் அங்கு இன்னும் இருக்கின்றன என்று கேட்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. அதற்காகவே தமது படைகள் அங்கு உள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் உள்ளன. இன்னும் 7 அல்லது 8 ஆண்டுகள் வரை இந்த படை இருக்கும். 2017ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முற்றிலுமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும்.
வோஷிங்டன், நவ. 27

இத்தாலிய பெண்களை முஸ்லிமாக மாற்றிய லிபியா அதிபர் கடாபி


ரோம் நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட லிபியா அதிபர் கடாபி, 200 இத்தாலிய பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற செய்தார்.ரோம் நகரில் கடந்த வாரம் உணவு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லிபியா அதிபர் கடாபி வந்திருந்தார். லிபியா நிறுவனம் சார்பில் 200 அழகிய இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தனர். லிபியா தூதரகம், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடாபியை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் 200 பெண்களும் வந்திருந்தனர். கடாபி உறுதி மொழி படிக்க அந்த பெண்களும் அந்த உறுதி மொழியை சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குரான் புத்தகம் அளிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் கடாபி இந்த கூட்டத்தில் பேசினார். இதுபற்றிய விரிவான கையேடு ஒன்று 200 பெண்களுக்கும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பெண்கள் குறிப் பிடுகையில், " இந்தகூட்டத்தில் கலந்து கொண்டால் சில ஆயிரம் ரூபாய் பணமும், லிபியா நாட்டு பரிசு பொருட்களும் கிடைக்கும், என கூறினார்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை' என்றனர்.கடாபி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டனவாம். அதாவது, "ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை. அவர் இருந்த இடத்தில் யாரோ ஒரு நபர் இதேபோல இருந்துள்ளார்'என, இந்த கூட்டத்தில் பேசிய சிலர் தெரிவித் தார்கள், என மதமாறிய பெண்கள் தெரிவித்தனர்.

ஆப்கான் அமெரிக்காவுக்கு ~பொறி' ஆகிவிட்டது

வளர்ந்த கடா மார்பில் பாய்கின்றது.

ஆப்கானிஸ்தானில் வைத்த காலை எடுக்க முடியாமல் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் திண்டாடுகின்றன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகக் கூடுதலான படையினரைக் கொண்டுள்ள நாடு பிரித்தானியா. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்ட 9000 பிரித்தானியப் படையினரில் 234 பேர் இதுவரையில் சண்டையில் இறந்துள்ளனர்.
இது பிரித்தானியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள படைவீரருக்கு அவசியமாகத் தேவைப்படும் ஹெலிகொப்ரர்கள், கவச வாகனங்கள் போன்றவற்றைப் போதுமான எண்ணிக்கையில் அனுப்பாததாலேயே படைவீரர்கள் இறக்க நேர்ந்தது என்ற குற்றச்சாட்டு பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலிருந்து படை வீரரைத் திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு வலுத்து வருகின்றது.
பிரித்தானியாவில் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள படைவீரர் விவகாரம் தேர்தலில் தொழிற் கட்சிக்குப் பாதகமாக அமையலாம் எனக் கருதிய பிரதமர் கோர்டன் பிறவுண் ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச மகாநாடொன்றை லண்டனில் நடத்துவதற்கு முன்வந்திருக்கின்றார்.
அடுத்த வருட முற்பகுதியில் இந்த மகாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் படைவீரருக்குப் போதியளவு பயிற்சி அளித்துவிட்டு நேட்டோ படைகள் வெளியேறுவதற்கான கால அட்டவணையைத் தீர்மானிப்பது இம் மகாநாட்டின் பிரதான நோக்கம்.
பிரித்தானியா மாத்திரமன்றி, மற்றைய நேட்டோ நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதையே விரும்புகின்றன.
சர்வதேச மகாநாடொன்றைக் கூட்டி ஆப்கான் நிலைமை பற்றி விவாதிக்க வேண்டும் என்ற ஆலோசனையைப் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண், ஜேர்மன் அதிபர் அஞ்செலா மேர்கெல், பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி ஆகியோர் செப்ரெம்பர் மாதத்தில் கூட்டாக முன்வைத்தனர். இந்த ஆலோசனையின் தொடர்ச்சியாகவே லண்டனில் மகாநாடு நடத்துவதற்கு கோர்டன் பிறவுண் ஏற்பாடு செய்கின்றார்.
இந்த நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புகின்ற போதிலும் தனியாக வெளியேறுவதற்குச் சாதகமாகச் சமகால சர்வதேச ஒழுங்கு இல்லை. எனவேதான் மகாநாடு கூட்டித் தீர்மானிக்க முனைகின்றன.
இதே நேரம், இரண்டு வருட காலத்துக்குள் கூடுதலான படையினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. அந்தளவுக்குத் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்திருக்கின்றது. 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் 26607 அமெரிக்கப் படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர்.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 48250 ஆக உயர்ந்தது. 2009 ஜனவரியில் 3000 படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். பெப்ரவரியில் மேலும் 17000 பேர் அனுப்பப்பட்டனர். மேலும் துருப்புகளை அனுப்புவதற்கு ஒபாமா முடிவு செய்திருக்கின்றார்.
நேச நாடுகள் தங்கள் படையினரைத் திருப்பி அழைப்பது பற்றி ஆலோசிக்கும் போது அமெரிக்கா மேலும் மேலும் துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புகின்றது.

அமெரிக்காவுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலை அமெரிக்காவினாலேயே உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் சோவியத் சார்பு ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா வளர்த்தெடுத்தவர்களே தலிபான்கள். பாகிஸ்தானில் தளங்களை அமைத்துப் பெருமளவு பணச் செலவுடன் தலிபான்களை அமெரிக்கா வளர்த்தது.
தேவையான ஆயுதங்களும் பாகிஸ்தானுக்கூடாக வழங்கப்பட்டன. தலிபான்களுக்குப் பாகிஸ்தானில் பயிற்சி அளித்ததால் இன்று அவர்கள் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படுவதற்கு வாய்ப்பாகிவிட்டது. அமெரிக்கா வளர்த்த கடா இன்று அதன் மார்பிலேயே பாய்கின்றது.
ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதலான படையினரை அனுப்புவதோடு பாகிஸ்தானுக்கும் சகல விதமான உதவிகளைச் செய்ய வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தலிபான்கள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இயங்குவதால் அவர்கள் அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பதற்குப் பாகிஸ்தான் இராணுவத்தின் உதவி தேவை.
மேலும், பாகிஸ்தானுக்குள் இருக்கும் தலிபான்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
இதனால் பாகிஸ்தானுக்குத் தேவைப்படும் நிதி, ஆயுத, இராஜதந்திர உதவிகளைச் செய்வதை அமெரிக்கா தவிர்க்க முடியாது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அடிக்கடி நிதியுதவி வழங்கி வருகின்றது. 750 கோடி நிதியுதவி வழங்கும் ஆவணத்தில் ஒக்ரோபர் 15ம் திகதி ஒபாமா கையொப்பம் இட்டார். இது அமெரிக்காவின் பிந்திய நிதியுதவி.
இராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சி பலனளிக்காதது போலவே அரசியல் ரீதியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியும் திருப்திகரமான பலனைத் தரவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஹமிட் கர்ஸாய் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல்லாவிலும் பார்க்கக் கூடுதலான வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார். கர்ஸாய் பெற்ற வாக்குகள் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 54 வீதம் என அறிவிக்கப்பட்டது. கர்ஸாயின் வெற்றியை ஏற்க முடியாது என்ற சமிக்ஞையை அமெரிக்கா வெளிப்படுத்தியது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்குமான அமெரிக்கத் தூதுவர் றிச்சாட் ஹோல்புறூக் கர்ஸாயின் ஆதரவாளர்கள் பெருமளவு வாக்குத் திணிப்புச் செய்ததால் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பகிரங்கமாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுபெற்ற தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழு கர்ஸாயின் வாக்கு வீதத்தை 54 வீதத்திலிருந்து 48.6 வீதமாகக் குறைத்தது. தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவொன்று வெற்றிபெற்ற வாக்காளரின் வாக்கு வீதத்தைக் குறைத்துப் பிரகடனப்படுத்திய நிகழ்வு இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் இடம்பெறவில்லை. இந்த ஆணைக் குழு அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டதென்பது தெரிந்த விடயம்.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பதை முழு உலகமும் அறியும். பெருமளவில் வாக்குத் திணிப்பு இடம்பெற்றது.
வாக்காளர்களாக 12 வயது நிரம்பாதவர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர். அப்துல்லாவும் தேர்தல் முறைகேடுகள் பற்றி முறைப்பாடு செய்திருந்தார். எனினும் தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரகடனம் அதிரடியானது.
ஆப்கானிஸ்தானின் தேர்தல் சட்டத்தின்படி, அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 50 வீதத்துக்குக் கூடுதலாக எந்தவொரு வேட்பாளரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று வாக்களிப்பு இடம்பெற வேண்டும். நவம்பர் 7ந் திகதி இரண்டாவது சுற்று வாக்களிப்பு இடம்பெறுமென அறிவிக்கப் பட்டது.
தேர்தல் ஆணையாளர் பக்கச்சார்பானவர் என்பதால் வாக்களிப்புக்கு முன் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்காததால் அப்துல்லா நவம்பர் 1ந் திகதி போட்டியிலிருந்து விலகினார். கர்ஸாய் தெரிவானதாகத் தேர்தல் ஆணைக்குழு பிரகடனப்படுத்தியது.
கர்ஸாய் அமெரிக்காவின் ஆள். அமெரிக்காவினால் ஜனாதிபதிப் பதவியில் இருத்தப்பட்டவர். அவர் தோற்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமல்ல.
அண்மைக் காலத்தில் கர்ஸாய் அமெரிக்கா கீறிய கோட்டுக்கு அப்பால் சென்று செயற்பட முற்பட்டதால், அவரை வழிக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனேயே அவரது தேர்தல் முடிவுகளைப் பற்றி அமெரிக்கா பிரச்சினைகளைக் கிளப்பியது. குறிப்பாக தேர்தல் பிரசார காலத்தில் அமெரிக்காவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் விதத்தில் கர்ஸாய் நடந்துகொண்டார்.
அஹமட் ரiட் டொஸ்ரம் அமெரிக்காவினால் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறித் துருக்கியில் வாழ்ந்தவர். கர்ஸாய் அவரை அழைத்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் குவாஸிம் பாஹிம் போதைவஸ்துக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவினால் உட்படுத்தப்பட்டிருப்பவர்.
இவரைத் தனது உப ஜனாதிபதியாக கர்ஸாய் பிரகடனப்படுத்தினார். இச் செயற்பாடுகளையிட்டுத் தனது அதிருப்தியைக் கர்ஸாய்க்குத் தெரியப்படுத்தும் நோக்கத்துடனேயே தேர்தல் முடிவு பற்றி அமெரிக்கா பிரச்சினை கிளப்பியது.
ஆப்கானிஸ்தானில் இன அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள் என்பதும் கர்ஸாய் பெரும்பான்மையான பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவரென்பதால் இரண்டாவது சுற்று வாக்களிப்பிலும் தாஜிக் இனத்தைச் சேர்ந்த அப்துல்லாவிலும் பார்க்க அவர் கூடுதலான வாக்குகளைப் பெறுவார் என்பதும் அமெரிக்காவுக்குத் தெரியாதவையல்ல.
அமெரிக்காவின் சமிக்ஞை கர்ஸாயிடம் மாற்றம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. கர்ஸாய் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது அவருக்கு இரு புறத்திலும் டொஸ்ரமும் பாஹிம்மும் நின்றார்கள்.
இது அமெரிக்காவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் செயல். ஆனால் உடனடியாக அமெரிக்காவினால் எதுவும் செய்ய முடியாது. அதிரடி நடவடிக்கை பாதகமான விளைவுகளுக்கு வழிகோலலாம்.
ஆப்கானிஸ்தானை அமைதியற்ற பிரதேசமாக அமெரிக்கா ஆக்கியிருக்கும் பின்னணியிலேயே ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது.
ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பின் எட்டாவது ஆண்டு நிறைவுக்கு அடுத்த நாளிலேயே இப்பரிசு பற்றிய அறிவித்தல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
சங்கர சேயோன்

நிவாரணக் கிராமங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்


எந்த நேரத்திலும் எங்கும் சென்றுவரலாம்
(கே. அசோக்குமார்)
வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப் பட்டு வந்த சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று அறிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று இந்த அறிவித்தலை விடுத்தார். இவ்வறித்தலின்படி நிவாரணக் கிராமத்திலுள்ள அனைவரும், நாட்டிலுள்ள எப்பகுதிக்கும் சென்றுவர முடியும். அதேநேரம், உறவினர்களையும் அவர்கள் பார்க்கவும் முடியும்.
ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதுடன் மீளக் குடியேறும் மக்களுக்கு இதுவரை வழங்கிய 25,000 ரூபா கொடுப்பனவு டிசம் பர் 15 ஆம் திகதி முதல் 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
வவுனியா நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தங்க வைக்கப்பட்டி ருந்த மக்கள் முகாமைவிட்டு வெளியேற முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருந்தன. உறவினர்கள் வந்து பார்ப்பதோ அல்லது முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்வதோ தடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இவை அனைத்தும் நீக்கப்படுவதுடன் அவர்கள் சுதந்திரமாக செல்ல முடியும். இப்பகுதியி லிருந்து மக்கள் சென்றுவர பஸ் போக்கு வரத்து வசதிகளும் செய்யப்பட வுள்ளன.
மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகளின் எண் ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். மேலும் 6 மாதங்களுக்கு உலர் உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘இடம்பெயர்ந்துள்ளவர்களுள் தற்போது சுமார் 50 வீதத்துக்கும் குறைவானவர்களே இன்னமும் நிவாரணக் கிராமங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்.
இடம்பெயர்ந்தவர்கள் என நாட்டில் ஒருவரும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே எமது அரசு செயற்படுகிறது, என அங்கு உரையாற்றிய ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
வடக்கில் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல் களுக்கு அமைய பசில் ராஜபக்ஷ எம்.பி. அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பொன்றை விடுப்பார் என நேற்று முன்தினம் அமைச் சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
வவுனியா சென்ற பசில் ராஜபக்ஷ எம்.பி. வவுனியா நிவாரணக் கிராமங் களிலுள்ள மக்களை சந்தித்து உரையாடிய துடன் அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பையும் விடுத்தார்.
தற்போது வவுனியா நிவாரணக் கிராமங்களில் 1,27,495 பேரளவில் மட்டுமே உள்ளனர். இவர்களும் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக மீளக்குடியமர்த்தப்படுவதுடன் அடுத்த கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுவிடும் என ஆளுநர் ஜீ. சந்திரசிறி தெரிவித்தார்.

கிளோ குடியிருப்பு விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துமாறு கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது

நஸரத் - ஆக்கிரமிக்கப்பட்ட தென் ஜெரூசல நகரில் பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட

பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளோ குடியிருப்பு


நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளோ (Gilo) குடியிருப்பை விரிவாக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேலிய அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. டெல் அவிவாக இருந்தாலும் புனித நகரான ஜெரூசலமாக இருந்தாலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதைப் பொறுத்தவரையில் தான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்று அது குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவின் வேண்டுகோளுக்குப் பதிலளித்துப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரியொருவர், ‘கிளோ குடியிருப்பானது ஐக்கிய ஜெரூசலத்தில் ஓர் இன்றியமையாத பகுதியாகும்’ என்றும், ‘அதன் விரிவாக்கப் பணி ஒரு வழமையான செயற்திட்டமாகவே அமையும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் என யெடிஒத் அஹ்ரனொத் (Yedioth Ahronoth) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் கிளோ குடியிருப்பின் கட்டுமானப் பணிகளுக்கான வரைவுத் திட்டத்தை அங்கீகரிக்கும்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல்
முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறித்து அமெரிக்க நிர்வாகத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல் (George Mitchell) இஸ்ரேலியப் பிரதமரின் ஆலோசகர் யிட்சாக் மொல்ச்சோ(Yitzhak Molcho)வுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்ததாக அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருந்தது.
மேற்படி குடியிருப்பு விரிவாக்கச் செயற்பாடானது பலஸ்தீன் அதிகார சபையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பின்னடையச் செய்யும் அபாயம் உள்ளது என மிச்சேல் தெரிவித்துள்ளார்.
நன்றி: PIC

இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமை என்னை வருத்துகின்றது- ராஜினாமா கடிதத்தில் சரத் பொன்சேகா தெரிவிப்பு

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை வருத்துகின்றது. அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையை வெளிக்காட்டுகின்றது என்று முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாத அதேவேளை பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலைமை எதிர்காலத்தில் மற்றுமொரு போராட்டத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். பாதுகாப்பு செயலர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்த ராஜினாமா கடிதத்தில், தன்னுடைய இந்தத் திடீர் முடிவுக்கான 16 காரணங்களை சரத் பொன்சேகா தெளிவுபடுத்தியிருந்தார்.இவ்வாறு அவரால் குறிப்பிடப்பட்ட அந்த 16 காணரங்களும் பின்வருமாறு :
01. இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வரையில் நான் இராணுவத் தளபதியாக நீடிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆயினும் அது அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டமாக அமையும் என்று கூறி சில சக்திகள் உங்களை திசை திருப்பியதால் எனது கோரிக்கையைத் தட்டிக் கழித்தீர்கள். அத்துடன் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்று விட்ட நிலையில் இராணுவத் தளபதி பதவியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் பின்னணியில் என்ன சதித்திட்டம் இருக்கின்றது என்பது இராணுவத்தினருக்கு நன்றாகத் தெரியும்.
02. யாழ்.கட்டளையிடும் அதிகாரி சேவையை கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்டு வந்த மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை என்னையடுத்து இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை கவனத்திற் கொள்ளாது, 'ஹோல்டிங் போமேஷன்' என்ற வகையிலான கட்டளையிடும் அதிகாரியாக மட்டுமே இறுதிக் கட்டப் போரில் கடமையாற்றியவரும், ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவருமான ஒருவரை எனக்கு பதிலாக நியமித்தீர்கள்.
03. நாட்டின் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளைத் திசை திரும்பும் வகையில், எந்தவொரு அதிகாரமும் இல்லாத, அதேநேரம் தொடர்பாடல் எனும் பொறுப்பை மாத்திரம் கொண்டதும் இராணுவத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி எனும் பதவிக்கு என்னை நியமித்தீர்கள். இராணுவ வெற்றியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே இராணுவத் தளபதி என்ற பதவியை துறக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எனக்கு கட்டாயப்படுத்தினார். அந்த வகையில் இரண்டு மாதங்களுக்குள் நான் இந்த பதவியிலிருந்து விலகுவேன் என்று ஜனாதிபதியாகிய உங்களிடம் வாக்குறுதி அளித்தேன். இருப்பினும் எனக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக என்னால் யுத்த வெற்றிக்கு காரணமாகவிருந்த இராணுவ வீரர்களுக்கான உதவிகளைக் கூட வழங்க முடியாமல் போனது.
04. அதேவேளை எனக்கு வழங்கப்பட்ட இந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி எனும் பதவியானது என்னை தட்டிக்கழிப்பதற்காக வழங்கப்பட்ட பதவியாகும். இந்தப் பதவியில் பல்வேறு அதிகாரங்கள் இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், நான் பதவிக்கு வந்ததன் பின்னர் பாதுகாப்பு செயலாளரினால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்றில், எனது பதவி இராணுவத்துக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டது என்றும் அதனையும் மீறிய அதிகாரம் எனக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் எனக்கு அதிகாரங்களை வழங்க நீங்களும் அரசாங்கமும் விரும்பவில்லை என்பதையும் என் மீது உங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
05. இராணுவ உயர் அதிகாரிகளினுடனான பாதுகாப்பு செயலாளர் முப்படைகளையும் உள்ளடக்கிய அதிகாரம் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு வழங்கப்படுமாயின் அது இக்கட்டான சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்று தெரிவித்தார். இராணுவ அதிகாரிகள் பலர் முன்னிலையில் கூறப்பட்ட இக்கருத்தினால் நான் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளானேன்.
06. இராணுவ வெற்றி கடந்த மே மாதம் 18ஆம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இனித் தேவைப்படாது என்றும் தேவைக்கதிகமான இராணுவ பலமொன்று நாட்டில் இருப்பதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியாகிய உங்களால் தெரிவிக்கப்பட்டது. இராணுவ வெற்றி தொடர்பில் பெருமைப்பட்டுக் கொண்ட நீங்கள், இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்தமை மட்டமான ஒரு விடயமாகும். எப்பொழுதுமே பெறமுடியாதென கருதிய வெற்றியை ஒரு வாரத்திற்குள், உங்களுக்கே சாதகமான இராணுவத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட நிலையிலும் அந்த இராணுவத்தின் மீது சந்தேகம் கொண்டுள்ளீர்கள் என்பதை தனிப்பட்ட ரீதியில் நான் உணர்ந்து கொண்டேன்.நான் இராணுவ தளபதியிலிருந்து விலகிய நிலையிலும் நீங்கள் இந்தக் கருத்தினை மற்றுமொரு தடவை முன்வைத்தீர்கள். இந்தக் கருத்து எனக்கு அருவருப்பை ஏற்படுத்தியதுடன் யுத்தத்தின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களை கேலிக்குள்ளாக்குவதாகவும் அமைந்தது.
07. தற்போதைய இராணுவத் தளபதி பதவியேற்றதன் பின்னர் யுத்தத்திற்காக பாரிய பங்களிப்பை வழங்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியாக செயற்பட்ட எனது மனைவி மற்றும் அவருடனிருந்த கனிஷ்ட பிரிவு அதிகாரிகளைக் கூட இடமாற்றம் செய்தார். இது அதிகாரிகளின் நடுநிலையான தன்மைக்கு சவால் விடுப்பதுடன், என்னுடைய தலைமைத்துவம் தொடர்பில் தவறான தகவல்களை வழங்கி இராணுவ அதிகாரிகளை தைரியமற்ற தன்மைக்கு கொண்டு செல்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.
08.தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இராணுவம், சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து 2009 அக்டோபர் 15ஆம் திகதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டது.இந்நிலைமை என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. பயங்கரவாத இயக்கமொன்றை தோற்கடிக்கக் கூடிய திறமையினையும் தொழில்வல்லமையையும் கொண்ட இலங்கை இராணுவத்தின் கீர்த்தி இதனால் சர்வதேசத்தின் முன்னிலையில் தலைகுனிய நேரிட்டது. வரலாற்று ரீதியிலான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த என்னுடைய தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட சிலரின் நடவடிக்கையே இந்த சந்தேகத்திற்கு வழிவகுத்தது.
09.தனிப்பட்ட சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு கடந்த அக்டோபர் 23ஆம் திகதி முதல் நவம்பர் 5ஆம் திகதி வரையில் நான் வெளிநாடு சென்றிருந்தேன். இந்தக் காலப்பகுதியில் இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயில்களில் கடமையில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்த சிங்க ரெஜிமென்டின் வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு வேறு ரெஜிமென்ட்களைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த 4 வருடங்களாக பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பிற்கென நியமிக்கப்பட்டிருந்த மேற்படி வீரர்கள் ஒரேஇரவில் பாதுகாப்பு செயலரின் எண்ணத்திற்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டமையானது வருந்தத்தக்க விடயமாகும்.
10. பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைக்கமைய கஜபா ரெஜிமண்டின் வீரர்கள் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடத்தில் சேவைக்கு அமர்த்தப்பட்டமையானது இராணுவத்தின் நடுவுநிலைமை சிதைவடைந்ததை எடுத்துக்காட்டியது. அத்துடன் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதும் இதன்மூலம் வெளிப்படையாகியது. இந்த நடவடிக்கைக்கு இராணுவத் தளபதி ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை வெளிப்படையான உண்மையாகும்.
11. எமது நாட்டின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்காக அரசாங்கத்திற்கு நான் வழங்கிய தனிப்பட்ட ரீதியிலான ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ளாது, என்னையொரு தேசத்துரோகியாக காண்பிக்கும் வகையில் அரசின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட பொய்ப்பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளித்தமை என்னை விரக்திக்குள்ளாக்கியுள்ளது.
12. நான் வெளிநாடு சென்றிருந்த போது எனது கடமையை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு பதில் அதிகாரியும் நியமிக்கப்படவில்லை. இதனால் நான் வகிக்கும் பதவி முக்கியத்துவமற்ற ஒன்றாக இருப்பதாக பல தரப்புகளிலும் பேச்சு அடிபட்டது. இதுவே உண்மை நிலையுமாகும்.
13. சாதாரண மட்டத்தில் இருந்து தரமுயர்த்தி, என்னால் பெரும்பாடுபட்டு கட்டிக்காக்கப்பட்ட இராணுவ சேவையிலிருந்து நான் தற்போது புறந்தள்ளப்பட்டமையானது கவலைக்குரிய விடயமாகும்.
14. யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களின் தற்போதைய நிலைமை என்னை மென்மேலும் வருத்துகின்றது. அவர்களை சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியாகவும் வாழ வைப்பதற்காக, விடுதலைப் புலிகளின் கொடூரத்திலிருந்து மீட்கும் முயற்சியில் இராணுவ வீரர்கள் பலரும் உயிர்த் தியாகங்களைச் செய்தனர். இருப்பினும் அவர்களில் பலர் இன்னமும் அசாதாரணமானதொரு நிலைமையில் வாழ்வதானது அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையைக் குறித்துக் காட்டுகிறது. தங்களுடைய பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வரையில் அந்த மக்களின் உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு அம்மக்களுக்கு இடமளிக்க வேண்டும்.
15. என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் உங்களுடைய அரசாங்கத்தினால் இன்னமும் சமாதானம் ஏற்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ளும் வகையிலானதொரு கொள்கை இதுவரையில் ஏற்படுத்தப்படாமையானது, பெற்றுக் கொடுக்கப்பட்ட வெற்றி சீரழிக்கப்பட்டு வருவதற்கு சமமானது. அத்துடன் எதிர்க்காலத்தில் மற்றுமொரு போராட்டம் வெடிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
16. யுத்தத்தின் முடிவில் அனைத்து இன மக்களும் எதிர்ப்பார்த்திருந்த சமாதானத்தின் பிரதிபலன், இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அழிவும் வஞ்சகமும் மென்மேலும் தலையெடுத்துள்ளது. ஊடக அடக்குமுறை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. எமது தாய் நாட்டுக்கு சமாதானத்தையும் சமரசத்தையும் கொண்ட யுகத்தை ஏற்படுத்திக் கொடுக்க எம்மால் முடியுமானால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரின் முயற்சி மற்றும் தியாகங்கள் வீண் போகாது.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=18990

பிரணாப் முகர்ஜி நாளை இலங்கை வருகை : இந்தியச் செய்திகள் தகவல்


மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வருகின்றார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா, ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளிவரும் நிலையில் பிரணாப் இலங்கை வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இதுவரை கொழும்பு செல்லாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்பு செய்வதும் கேள்விகளை எழுப்பியுள்ளது.பிரணாப் முகர்ஜி, நாளை டில்லியிலிருந்து பகல் 11.30 மணியளவில் சென்னை வந்து, பின்னர் 12.30 மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்கிறார். முதல்வருடன் சந்திப்பு சென்னையில் அவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசலாம் என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.இலங்கையில் பெரும் குழப்பம் நிலவுவதாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். மேலும், ராஜபக்ஷவை எதிர்த்து அதிபர் தேர்தலில் பொன்சேகாவை நிறுத்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன.இந்தப் பின்னணியில் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் அமைகிறது. தனது பயணத்தின்போது ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்திப்பார். பொன்சேகாவையும் அவர் சந்திக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.ராஜபக்ஷ - பொன்சேகா இடையே சமரசம் ஏற்படுத்த பிரணாப் செல்வதாகவும் ஒரு கூற்று உள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷவே மீண்டும் வெல்ல வேண்டும் என இந்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கவை காங்கிரஸ் கட்சி டில்லிக்கு அழைத்து ராஜபக்ஷவுக்கு எதிராகத் தீவிரமாக செயல்படவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.சரத் பொன்சேகா அதிபரானால் அது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவர் சீனா மற்றும் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் உள்ளது. இதனால்தான் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர, சமீப காலமாக சீனா, பாகிஸ்தானுடன் படு தோழமையாக உள்ளது இலங்கை. இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து சீன வீரர்களும் தற்போது கச்சத்தீவு பகுதியில் நடமாடி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்தும் பிரணாப் முகர்ஜி இலங்கையுடன் பேசுவார் எனத் தெரிகிறது. தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசக் கூடும் என்று தெரிகிறது." இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
virakesari

தமிழ், முஸ்லிம் மக்களின் உறவும் பண்பாடுகளும்

இலங்கை முஸ்லிம்கள், தென்பகுதி சிங்களவர்களுக்கு மத்தியில் சிறுபான்மையினராக, இன ஐக்கியத்தைப் பேணி வாழ்ந்து வந்தது போலவே, தொன்றுதொட்டே வடக்கு, கிழக்கில் தமிழர்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
ஆனால், சிங்கள சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அளவுக்கு தமிழர்களுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுக்குப் போதியளவு முக்கியத்துவம் அளிக்கப்படாதிருப்பது ஒரு குறையாகும்.
இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும்பாலும் அரபிகளது வழித்தோன்றல்களாக இருந்தும் அரபைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை. சுமார் 70% முஸ்லிம்கள், சமூக தொடர்புகளுக்கான பிரதானமான மொழியாக சிங்களத்தைக் கொள்ளும், வடக்கு கிழக்கு தவிர்ந்த, வெளிமாவட்டங்களில் வாழ்ந்த போதிலும், அந்த சிங்களம் அவர்களில் பெரும்பாலானவர்களது தாய் மொழியாக இல்லை.
அவர்களும் பெரும்பாலும் தமிழையே தாய் மொழியாகக் கொள்கிறார்கள். இதிலிருந்து முஸ்லிம்களுக்கும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு வாழும் தமிழர்களுக்குமிடையேயுள்ள உறவின் பலத்தை ஊகிக்க முடியும். சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தை தமது மொழியாகக் கொள்ளாதிருப்பதால் பல சிரமங்களையும் நெருக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள்.
பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, தொடர்பாடல், அரசியல் போன்ற பல துறைகளில் அவர்கள் பின்தங்கியிருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூட அதனைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். தமிழை தமது தாய்மொழியாகக் கொண்டு அதன் வளர்ச்சிக்குக் கூட முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்துவருவதோடு, இன்பத் தமிழ் என அதனை கூறுகிறார்கள்.
தமிழை அரபு எழுத்துக்களில் ‘அரபுத்தமிழ்’ என்ற பெயரில் எழுதி, தமது சமய போதனைகளை அதனூடாகச் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ‘அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்’ என அதனைப் போற்றினார்கள்.
மொழி ரீதியில் நோக்கும் போது முஸ்லிம்களும் தமிழர்களும் சகவாழ்வைப் பேணிவந்தமையை இது குறித்து நிற்கிறது. இரு இனங்களையும் இணைக்கும் பிரதான பாலமாக தமிழ் மொழி அமைந்தது.
இலங்கை முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள்; மதத்தால் முஸ்லிம்கள்’ என்று சேர் பொன்னம்பலம் இராமநாதன் கூறுமளவுக்கு முஸ்லிம்களும் தமிழர்களும் பல்வேறுபட்ட ஒற்றுமைகளோடு வாழ்ந்து வந்திருகிறார்கள்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தென்பகுதியைப் போலவே மிக நீண்ட காலமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு சிறுபான்மையாக வாழும் அவர்களது கிராமங்கள், தமிழ் கிராமங்களுக்கு அருகருகே அமைந்துள்ளன.
வியாபாரம், கலாசாரம், அரசியல், சமூக உறவுகள் போன்றன இருசாராரையும் ஒருங்கிணைத்து வந்துள்ளன. அண்மைக்கால இனவாத சூழல் உருவாகும் வரை அந்த செளஜன்ய உறவு நீடித்ததாகக் கொள்ள முடியும். வடக்கு, கிழக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் பல்வேறுபட்ட விகிதாசாரங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். உதாரணத்துக்காக சில பிரதேசங்களது புள்ளிவிபரங்களை மாத்திரம் இங்கு நோக்கலாம்.
மன்னார் முஸ்லிம்கள்
மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாந்தோட்டத் துறைமுகத்துடனான அரபிகளது தொடர்பு மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.
12ம் 15ம் நூற்றாண்டு காலத்தில் இப்பிரதேசங்களுடனான (அவர்களது) தொடர்பு பன்மடங்காகியது. சேர் அலேக்ஸாண்டர் ஜோன்ஸ்டனின் கருத்துப்படி இக்காலகட்ட மன்னார் பிரதேசம் முஸ்லிம்களின் வர்த்தக மையம் (Emporium of Trade) ஆகக் காணப்பட்டது. மாந்தோட்டத் துறைமுகம் இவர்களது கப்பல் இறங்கு துறையாகவும் வர்த்தக பண்டகசாலையாகவும் விளங்கியது. முஸ்லிம்களால் இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகமும் ஓங்கி வளர்ந்தது.
மன்னார் பகுதி முஸ்லிம்கள் ஏற்றிறக்குமதியில் மட்டுமன்றி, முத்துக்குளிப்பது, சங்கு எடுப்பது, படகோட்டுவது போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
காலனித்துவ ஆட்சியாளர்கள் இவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தார்கள். இருப்பினும் முத்துக்குளிப்பிலும், சங்கு குளித்தலிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்பட்டமைக்கு அத்தொழிற்துறை சார்ந்த அம்மக்களது தேர்ச்சிதான் காரணமாகும்.
1902ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி, மன்னார் மாவட்டத்தில் இருந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் செறிவைக் கொண்ட 29 குடியிருப்புக்களில், மாந்தை- நானாட்டான் பிரதேசத்தில் மட்டும் 11 குடியிருப்புக்கள் இருந்தன.
ஆனால், இப்பிரதேச முஸ்லிம் கிராமங்கள் கத்தோலிக்க அல்லது இந்து சமய மக்கள் பெரும்பான்மையாக வாழும் சூழலில் அமையப்பெற்றுள்ளன. இன்னொரு விதத்தில் பார்த்தால் முஸ்லிம் கிராமங்கள் ஒன்றோடொன்று புவியியல் ரீதியாகத் தொடர்பற்றிருந்தன.
கட்டுக்கரைக் குளத்திற்குட்பட்ட பிரதேச முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருந்தாலும் நாளாந்த வாழ்க்கையில் அவர்கள் தமிழர்களுடன் அதிக தொடர்புகளை வைத்திருந்தார்கள். வயல் வேலைகளில் இவ்விரு இனத்தவரும் பரஸ்பரம் உதவி செய்தார்கள்.
கொடுக்கல் வாங்களில் மிகவுமே கெளரவமாக நடந்து கொண்டதோடு பிணக்குகளின் போது பிரச்சினை முற்றிவிடாது. அப்பிரச்சினையை சமூக மட்டத்தில் தீர்த்துக் கொள்ளும் நடைமுறை வழிகளைக் கொண்டிருந்தனர்.
ஒருவரது சுகதுக்கங்களில் மற்றவர் மிகச் சரளமாகப் பங்குபற்றினர். மச்சான், அண்ணன், காக்கா, மாமா போன்ற உறவுப் பதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள். ஒரு சமயத்தவரின் விருந்தோம்பல்களில் மற்றவர் எவ்வித சங்கடமுமின்றி பங்கேற்கும் வழமை இப்பிரதேசத்தில் காணப்பட்டது. (4)
யாழ்ப்பாண முஸ்லிம்கள்
முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட காலமாக தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்துவந்தார்கள். எம். எஸ். அப்துல் ரஹீம் என்பவர், இலங்கையில் முஸ்லிம்கள் தென் பகுதிக்கு முன்னர் வட பகுதியில்தான் முதன் முதலில் குடியேறியிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.
‘கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் தமிழர் ஆதிக்கம் இலங்கையின் தென்பகுதி, மேற்குப் பகுதிகளில் குறைவாகவே இருந்திருக்கிறது. வட பகுதியே காலத்துக்குக் காலம் நிகழ்ந்த தென்னிந்தியப் படையெடுப்புக்களாலும் குடியேற்றங்களாலும் தமிழர் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இங்கு முதலில் முஸ்லிம்கள் குடியேறி அங்குள்ள மக்கள் மத்தியில் அடைந்த செல்வாக்கக் காரணமாக ஏற்கனவே குடிகொண்டிருந்த இந்துக்களின் நல்லெண்ணத்துக்கு இலக்கானதன் காரணத்தால் உயர் குடியிற் பிறந்த நல்லொழுக்கமுடைய இந்துப் பெண்மணிகள் இஸ்லாத்தை ஒப்புக்கொண்டு இவர்களுக்குத் துணைவியராகும் வாய்ப்பைப் பெற்றனர்.
’ இப்படியாக தமிழ்ப் பெண்களை அராபியர் மணந்ததனாலேயே அவர்களின் தாய்மொழி தமிழாக இருக்கிறது. முதற் குடியேற்றம் சிங்கள மக்கள் சூழவுள்ள பேருவளையில் நிகழ்ந்திருந்தால் முஸ்லிம்களின் தாய்மொழி சிங்களமாக இருந்திருக்க வேண்டும்.
அத்துடன் சிங்களவரின் பண்பாட்டு அம்சங்களும் நிறைந்திருக்க வேண்டும். மாறாக, முஸ்லிம்களின் பண்பாட்டு அம்சங்களில் தமிழர் பண்பாட்டின் செல்வாக்கு விரவியிருத்தலை நன்கு அவதானிக்க முடியும்.
போர்த்துக்கேயரும் பின்வந்த ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தில் இருந்த பள்ளிவாசல்கள், கட்டிடங்கள் யாவற்றையுமே சிதைத்து அந்தக் கற்களைக்கொண்டே பறங்கியத் தெருப் பகுதியில் கட்டிடங்களை நிர்மாணித்தபடியால் எந்தவிதமா வரலாற்றுச் சான்றுகளும் பெறமுடியாது போய்விட்டன.” என அப்துர் ரஹீம் எழுதுகிறார். இக்கூற்று ஆய்வுக்குரியதாகும்.
யாழ்ப்பாணம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்றும் நுகரைப்பற்று எனும் பகுதியில் முழுக்க முழுக்க முஸ்லிம்களே (துலுக்கர்) வாழ்ந்தார்கள் என்றும் சான்றுகள் கூறுகின்றன. 13ம் நூற்றாண்டில் துலோத்துங்க என்பான் யா¡ப்பாகுவையை அழித்த வேளை யாவுகர்களை (முஸ்லிம்களை) சிறைபிடித்தான். சாவகச்சேரியில் அவர்களைக் குடியேற்றினான்.
யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்ததுடன் நெயினார் தீவு, மண்டைதீவு, மண்கும்பான், காரைதீவு எனும் தீவுகளிலும் பரந்து வாழ்ந்துள்ளனர்.
இன்றும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகள் சோனகன் வடவி, சோனக வெளி, சோனக வாடி, சோனக அடி, சோனகரடைப்பு என்னும் முஸ்லிம்களின் தனிப் பெயரையும் கொண்டு விளங்குகின்றன. இவை போன்ற பலவற்றையும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகளது தாய் உறுதிகளிலிருந்து பெறலாம்”
மிருசுவிலில் உள்ள உசன், சாவகச் சேகரிக்கும் சங்கத்தானுக்குமிடையிலுள்ள சோனகன் புலவு போன்ற இடப்பெயர்கள், அப்பிரதேசங்கள் முஸ்லிம்களது குடியிருப்புக்களாக இருந்தமைக்கான சான்றுகளாகும். நல்லூர் கந்தசாமிக் கோயிலை அடுத்துள்ள பகுதியில் சோனகன் தோப்பு என்ற பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்துவந்தார்கள். அங்கு தற்போதும் ஒரு ஸியாரம் காணப்படுகிறது.
இவ்வாறு முஸ்லிம்கள் யாழ் குடாநாட்டிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் தமிழ் சமூகத்துடன் சகவாழ்வைப் பேணி வாழ்ந்தனர். 1990ம் ஆண்டு முஸ்லிம்கள் வட பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது எனலாம்.
முல்லைத்தீவுப் பகுதி
வட மாகாணத்தின் மற்றொரு மாவட்டமான முல்லைத்தீவை எடுத்துக் கொண்டால், மொத்த மாவட்ட சனத்தொகையில் 5% ஐக் கொண்ட முஸ்லிம்கள், பெரும்பான்மைத் தமிழர்களோடும், சிறுபான்மைச் சிங்களவர்களோடும் கலந்து வாழ்ந்து வந்தார்கள். 1921ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி மரிடைம் பற்று உதவி அரச அதிபர் பிரிவில் முஸ்லிம்கள் 6.5% ஆகவும், முல்லைத்தீவு நகரில் 7.5% ஆகவும் வாழ்ந்தார்கள்.
முல்லைத்தீவுப் பகுதியில் முஸ்லிம்கள் 1800ம் ஆண்டு முதல் வாழுகிறார்கள் என்பதற்கான வரலாற்றாதாரங்கள் உள்ளன என கலாநிதி ஹஸ்புல்லாஹ் கூறுகிறார்.
அதற்கு முன்னரும் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வாய்மொழி ஆதாரங்களே உள்ளன. அந்தவகையில், யாழ்ப்பாண முஸ்லிம்கள் போர்த்துக்கேயரால் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் இங்கு வந்து குடியேறியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
முல்லைத்தீவு முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்த மூன்று கிராமங்களான தண்ணீரூற்று,
நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் என்பவற்றின் வரை படத்தைப் பார்த்தால் முஸ்லிம் பள்ளிவாசல், இந்துக் கோயில், கிறிஸ்தவ தேவாலயம் ஆகிய வணக்கஸ்தலங்கள் இப்பிரதேசத்தில் அருகருகே அமைந்திருப்பது இப்பிரதேசத்தின் நீண்டகால இன ஐக்கியத்திற்குச் சான்றாகும்.
கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாணத்திலும் கூட முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர்களது சகவாழ்வு மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். உதாரணமாக, மட்டக்களப்புப் பகுதியில் கி. பி. 5ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் கிழக்குக் கடலில் பயணம் செய்த அரபிகளில் ஒரு சாரார் பூநொச்சிமுனையில் குடியேறி வாழ்ந்ததாகவும், பின்னர் அவர்கள் காத்தான்குடிப் பகுதிக்கும் வந்ததாகவும் இவர்களிடமிருந்தே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் தோற்றம் பெற்றதாகவும் பி. ஆர். சிற்றம்பலம் கூறுகிறார்.
அதேவேளை, யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட ‘முக்குவர்’ எனும் ஒரு சாரார் அங்கிருந்து மட்டக்களப்புப் பகுதிக்கு வந்த போது அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த திமிலர்கள் அவர்களது வருகையை விரும்பாததால் அவர்களைத் துரத்தியடிப்பதற்கு நாடினர். அப்போது, முக்குவர்கள் அரேபியரது உதவியை வேண்டி நின்றனர்.
அவ்வாறு அந்த அரபிகள் அந்த திமிலர்களை துரத்தியடித்தனால் அந்த அரபிகள் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பு, நெருக்கம் அதிகரித்து அவர்களுக்கு மிகுந்த கெளரவம் கொடுத்தனர். தற்காலத்தில் குருமண்வெளி இந்துக் கோவிலில் தொப்பி அணிந்த ஒரு சிலை காணப்படுகிறது.
மேலும், ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூலில் உள்ள குலவிருது பற்றிய பாடலில், முஸ்லிம்கள் அணியும் தொப்பி பற்றிக் கூறப்படுகிறது. முக்குவர்கள் சவக்குலி ஏலம் விடும் போது ‘முக்குவர்களைக் காத்த பட்டாணியர் போற்றி’ என்று அதனை முடிக்கிறார்கள். இவற்றை அவதானிக்கையில் முக்குவர் - முஸ்லிம்கள் உறவு பற்றிக் தீர்மானிக்க முடியும் என மஹ்ரூப் கரீம் என்பார் தெரிவிக்கிறார்.
மட்டக்களப்பிற்கு துலுக்கர்களும் பட்டாணிகளும் (முஸ்லிம்களும்) வந்து போன விபரங்களை தமிழர்களின் பூர்வீக சரித்திரத்தைக் கூறும் ‘மட்டக்களப்பு மான்மியம்’ எனும் நூல் தெளிவாக்குகிறது. ‘காட்டான், பட்டாணி, சுல்தான், சிக்கந்தர், வேடரோடு வர்த்தகம் செய்வதற்காகச் சில துலுக்கக் குடும்பங்களுடன் மண்முனைக் கடுக்கப்பாளையம் போட்டு வர்த்தகம் செய்தனர். என அந்நூலில் குறிப்பிடப்படுகிறது.
முக்குவர்கள் தமக்கு உதவி செய்த முஸ்லிம்களிடம் கைமாறாக நிலம், பொன், பெண் ஆகிய மூன்றில் ஒன்றை ஏற்றுமாறு கேட்டபோது, முஸ்லிம்கள் முக்குவர்களின் பெண்களை அடைந்து, இரத்த உறவைப் பலப்படுத்தினர். முஸ்லிம்கள் முக்குவர்களுடன் இணைந்து போரிட்டதனால் அவர்கள் முன்னர் குடியேறத் தடுக்கப்பட்டிருந்த ஏறாவூரில் குடியேறி வாழ அனுமதிக்கப்பட்டனர். வாழைச்சேனையில் குடியேறிய முஸ்லிம்களும் பெரும்பாலும் கத்தான்குடியிலிருந்தே வந்தனர்.
தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் ஊர்களைப் பொறுத்தவரையில், அங்கும் கூட அரபிகளும் இந்திய வியாபாரிகளும் தமது வியாபார நோக்கங்களுக்காக வந்து சென்றுள்ளனர். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் இந்நாட்டின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதிலும் உள்நாட்டுக்கு அவசியமான பொருட்களை இங்கு கொண்டுவந்து சேர்ப்பதிலும் அதிகமாகப் பங்கெடுத்தனர். வேடுவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே வர்த்தக நீதியான உறவுகள் இருந்து வந்தன. வியாபாரத்துக்காக இலங்கை வந்த பல முஸ்லிம்கள் இங்கு நிரந்தரமாகவே தங்கினார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை ‘மட்டக்களப்பு முஸ்லிம்கள்’ என்றே அண்மைக்காலம் வரை ஏனைய பிரதேசத்தவர்கள் அழைத்து வந்திருப்பதால் இவ்விரு பிரதேசங்களும் வரலாற்று ரீதியாக ‘மட்டக்களப்பு’ என்றே நோக்கப்படுகிறது. கண்டிப் பகுதியுடன் வர்த்தக தொடர்பைப் பேணி வந்த முஸ்லிம்கள், கண்டி மலைப் பிரதேசத்தையும் கிழக்கிலிருந்த துறைமுக பிரதேசத்தையும் இணைத்துக் கொடுத்தார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு அருகருகே தமிழ், சிங்கள கிராமங்கள் தொன்றுதொட்டு இருந்து வருகின்றன. 1971ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின் படி பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் (48.3%) இருக்க, சிங்களவர் (28.2%), தமிழர் (23.2%) ஆகியோர் அதற்கடுத்த நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
1981ம் ஆண்டின் கணிப்பீட்டின் படி அக்கரைப்பற்றில் 12439 தமிழர்களும், 22941 முஸ்லிம்களும், கல்முனை பட்டின சபை எல்லைக்குள் இந்துக்கள் 4779 பேரும், முஸ்லிம்கள் 15940 பேரும் வாழ்ந்தார்கள். இவ்விரு இனங்களும் ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாத அளவுக்கு வியாபாரத்திலும் உறவுகளிலும் ஒன்றில் மற்றையது தங்கியிருக்கின்றன.
எனவே, ஆய்வாளர் ரமீஸ் அப்துல்லாஹ் பின்வருமாறு எழுதுகிறார். ‘(முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான) இவ்வுறவு வரலாற்று ரீதியாக ஆழமாக வேரூன்றியிருந்தது. கிழக்கு மாகாண வரலாற்றிலிருந்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.
கிழக்கு மாகாணத்தின் வடக்குப் பிரதேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழ, தெற்குப் பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழுகிறார்கள். பொதுவாக ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள், அதற்கடுத்த கிராமத்தில் தமிழர்கள் என கிழக்கு மாகாணம் முழுவதிலும் முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்தே வாழ்ந்து வருகிறார்கள்.
முஸ்லிம் ஆண்கள்’முக்குவர்’ சாதிப் பெண்களை மணந்ததால், தமிழர் முஸ்லிம்களிடையே இரத்த உறவுகளும் உள்ளன. இதனால், தமிழர்களின் சாதி முறை மரபுகளும் முஸ்லிம்களும் உரித்தாளிகளாகின்றனர்.
இங்குள்ள முஸ்லிம் சமூகத்தில் சாதி முறை முக்கியத்தும் பெற்றுள்ளதோடு அது மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது முஸ்லிம் சமய ரீதியானதல்ல. மேலும், இங்கு தாய்வழி ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. இதற்கெல்லாம் தமிழ் பாரம்பரியமே காரணமாகும்.
மணமகனின் காலைக் கழுவி, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, தாலிகட்டி, ஆராத்தி எடுத்து, பால் பழம் கொடுக்கும் சடங்குகள் முஸ்லிம் திருமணங்களிலும் நிறைவேற்றப்படுகின்றன.
கிழக்கில் ஒரு சமூகம் மற்றைய சமூகத்தின் சமயம், சடங்குகள் என்பவற்றை மதித்து கெளரவப்படுத்துகின்றது. கல்முனை ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ்வின் பள்ளி விழா, பாண்டிருப்பு திரெளபதை அம்மன் கோயில் தீ மிதிப்பு விழா போன்றவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி இரு சமூகத்தவர்களும் கலந்துகொள்கின்றனர். காரைதீவில் பகீர் சேனைத் தைக்கா, அட்டப்பள்ளயத்தில் அவுலியா தர்ஹா போன்ற முஸ்லிம் சமயத் தலங்கள் உள்ளன.
திருவாளர் பாலசுந்தரம் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :-
‘இங்கு (மட்டக்களப்பில்) வாழும் தமிழ் இனத்தவருடன் சகோதரத்துவ மனப்பான்மை பூண்டு, நட்புறவுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளும் பழக்கவழக்கங்களும் சம்பிரதாயங்களும் தமிழ் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையோரான இந்துக்களும் இஸ்லாமியரும் மத அடிப்படையில் வேறுபட்டிருப்பினும் வாழ்க்கை முறைகள், பண்பாட்டு அம்சங்களில் ஒன்றுமைகள் உள்ளன.’ முஸ்லிம்கள் நான்கு திருமணம் செய்ய அனுமதி இருந்தும் செய்யாதிருப்பதற்குக் காரணம் தமிழ் மக்களுடன் அவர்கள் முன்னைய காலங்களில் ஏதோ வழிகளில் ஒன்றுபட்டிருந்திருக்கிறார்கள் என்று கூறுவதில் தவறில்லை.’ என ஆய்வாளர் சித்தீக் கூறுகிறார்.
மேற்படி கூற்றுக்களிலிருந்து முஸ்லிம் சமூகம் தனது நம்பிக்கைக் கோட்பாடு, வழிபாடுகள், வாழ்வு முறை போன்ற அம்சங்களில் இந்துக்களது சமூகத்துடன் சிலபோது ஒன்றித்து விட்டமையைக் கூடக் காண முடிகிறது. அது இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற்ற சகவாழ்வாக அமையமாட்டாது. தனித்துவம் காத்த நிலையில் சகவாழ்வைப் பேணுவதனையே இஸ்லாம் அங்கீகரிக்கும் என்பதனையும் இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்காயினும் ஏனைய பிரதேசங்களாயினும் பொதுவாக முஸ்லிம் - தமிழ் உறவு பற்றி எழுதும் சித்தீக், ‘தமிழ் மொழியை இருசாராரும் பேசுவதால், ஒன்றுபட முடியும். தமிழை முஸ்லிம்கள் தாய் மொழியாகக் கொண்டிருப்பது இரு சமூகங்களுக்கிடையே இறுக்கமான வராற்றுறவு இருந்திருப்பதைக் காட்டும்.
தமிழ் – முஸ்லிம் மக்கள் மொழியில் மட்டுமல்லாது கலாசாரம், பண்பாடு, மரபு, ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு பாரம்பரியம், திருமணச் சடங்குகள் போன்ற சிலவற்றில் சில அம்சங்களிலும், சிலவற்றில் முழுவதுமாக ஒருமைப்பட்டுக் காணப்படுகின்றனர்.
இவ்வம்சங்களிலான ஒருமைப்பாடுகள் பல தனிச் சிங்களப் பிரதேசங்களில் வாழுகின்ற முஸ்லிம்கிடையேயும் காணப்படுவதானது, முஸ்லிம்கள் ஆரம்ப காலங்களில் சிங்கள மக்களுடன் அல்லாது தமிழ் மக்களுடனேயே கூடுதலான உறவுகளை வைத்துள்ளனர் என்று நம்பச் செய்கிறது’ என்கிறார். ‘முஸ்லிம்களது சில பெயர்கள் தமிழர்களின் சில பெயர்களது திரிபுகளாகவும் ஒத்தவையாகவும் உள்ளன.
உதுமாநாச்சி, மெளலாமக்காம் நாச்சியா, சின்னராசா, சந்திரா போன்ற பெயர்களைப் பார்க்கும் போது, முன்னைய காலங்களில் முஸ்லிம்கள் தமிழ் மக்களை அந்நியர்களாகக் கருதிக்கொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது.’ என்றும் அவர் கூறுகிறார்.
சிங்களப் பகுதி முஸ்லிம்கள் கூட தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருப்பதற்கும், தமிழ் மக்களின் சில பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதற்கும் காரணம் கூறும் ஐ. எல். எம். அப்துல் அkஸ் அவர்கள், அராபியர்கள் இலங்கைக்கு வந்து முதன் முதலில் குடியேறிய போது, அவர்களைத் தமிழர்களே வரவேற்றனர் என்றும், அடைக்கலம் கொடுத்து ஆதரித்தனர் என்றும் தொடர்ந்து தமிழ் மக்களிடையே தமது குடும்ப உறவுகளையும், வர்த்தக உறவுகளையும், திருமண உறவுகளையும் பெருமளவில் வைத்துக் கொண்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இதில் பெரியதோர் உண்மை மறைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
வடபகுதியில் மட்டுமன்றி, தென்பகுதி முஸ்லிம்களும் கூட தமிழைத் தாய்மொழியாகக் கொள்வதற்கு பின்வரும் காரணமும் கூறப்படுகிறது. 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்து சமுத்திர வணிகத்தில் விஜய ஆட்சியாளர்களின் எழுச்சி ஏற்பட்டது. இக்காலப் பிரிவில் சோள மண்டலக் கரையை (விoroசீலீntal விost) ஒட்டி நடைபெற்ற வணிகத்தில் தமிழ் மொழி முக்கிய இடம்பெற்றது.
அதேவேளை, தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் சோள மண்டலக் கரையிலுள்ள ‘மஃபர்’ பிரதேச முஸ்லிம்களுக்கும் இடையில் காணப்பட்ட வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் ஆகியனவே மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள், பொதுவாகக் கூறின் சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகவும் கலாசாரப் பண்பாட்டு மொழியாகவும் கொள்ளும் வரலாற்றுச் சூழ்நிலையை உருவாக்கியது என ஆய்வாளர் கலாநிதி சுக்ரீ அபிப்பிராயப்படுகிறார்.
எனவே, ஐ. எல். எம். அப்துல் அkஸ் கூறும் காரணத்திலிருந்து கலாநிதி சுக்ரீ கூறும் நியாயம் வித்தியாசப்பட்ட போதிலும், தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவுக்கு மேற்படி இரு காரணங்களைத் தவிர வேறு காரணங்களும் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.
மொத்தமாக நோக்கின், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குமிடையிலான உறவு மிகவும் பழமைவாய்ந்தது. தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் முஸ்லிம்கள் சகவாழ்வைப் பேணி காலாகாலமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். பழக்கவழக்கங்கள், சமூக உறவுகள், மரபுகள், வாழ்வு முறை என்பவற்றிலும் பல ஒற்றுமைகள் இருந்து வருகின்றன. சிங்கள சமூகத்தவரை விட தமிழர்களுடன் முஸ்லிம்கள் ஒன்றித்து வாழ்ந்தமை அதிகம் என்று கூறுவது கூட பிழையாக இருக்க முடியாது.
அண்மைக் காலத்தில் சில அரசியல், பொருளாதார காரணங்களுக்காக இவ்விரு சாராரும் சில கசப்புணர்வுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொண்ட போதிலும் கிட்டிய அண்மைக்காலம் வரை அந்த செளஜன்ய உறவு நீடித்தே வந்திருக்கிறது.
சகவாழ்வின் அவசியம்
இரு தரப்புக்குமிடையில் மனந்திறந்த கலந்துரையாடல்கள், சுமுகமான சூழலில் இடம்பெறுமாயின் மீண்டும் பழைய நிலையைக் கட்டியெழுப்புவது சிரமமான காரியமல்ல.
இவ்விடயத்தில் இரு தரப்பைச் சேர்ந்த புத்தி ஜீவிகளது பங்கு மிகவுமே அவசியப்படுகிறது. சுமுகமாக நிலவிவந்த உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அவை மென்மேலும் தொடராதிருப்பதற்கு திடசங்கற்பம் பூணுவது அவசியமாகும்.
மாறாக கடந்தகால தவறுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துவதோ, இடம்பெற்ற தவறுகளை நடக்கவில்லை என்று கூறுவதோ அல்லது அவற்றிற்கு நியாயம் கூறி தப்பிக்க விழைவதோ இதய சுத்தியுடனான சுமுகமான தீர்வுகளைக் காண தடையாக அமையும்.
முஸ்லிம்களோ தமிழர்களோ நூற்றாண்டு காலமாக வாழ்ந்துவரும் இடங்கள், அவர்கள் தமக்கென அமைத்துக்கொண்ட வணக்கஸ்தலங்கள், அடக்கஸ்தலங்கள், நிலபுலன்கள், குடியிருப்புக்கள் என்பன அவர்களுக்கே உரியவை. கசப்புணர்வு தொடர்ந்தால் அவற்றிலிருந்து அவர்கள் விலக நேரிடும்.
இது சாத்தியமில்லை. தமக்கென பழக்கப்பட்ட சூழலிலேயே அவர்கள் வாழுவது இலகுவாகவும் உசிதமாகவும் இருக்கும்.
‘தேங்காய்த் துருவலும் பிட்டும்போல்’ ஒருவருக்குள் ஒருவராக பக்கத்துப் பக்கத்து வீடுகளிலும், கிராமங்களிலும் தொழில் துறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிர்ப்பந்தமாக ஒட்டியுறவாடும் முஸ்லிம் - தமிழ் இனங்கள் இனியும் கசப்புணர்வுகளுடன் வாழ்வது மேலும் பேராபத்துக்களையே தரும். எவரும் எவரையும் துரத்துவது பல இன்னல்களுக்கே வழிவகுக்கும். எனவே, சுமுகமாக வாழ்வதற்கும் சக வாழ்வைக் கடைப்பிடிப்பதற்குமான வழிவகைகளைத் தேடுவது உடனடித் தேவையாகும்.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பbல் (நZமி)B. A. (Hons) M. A
நன்றி : இஸ்லாமிய சிந்தனை (2008 ஜனவரி - மார்ச்) இதழ்ஜாமிஆ நZமிய்யா வெளியீட்டுப் பணியகம்