Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

64 Bit Processor என்றால் என்ன?

கணினியின் மூளையாகச் செயற்படுவது Central Processing Unit எனும் ப்ரோஸெஸரே இந்த ப்ரோஸெஸ்ஸர் கணினிக்கு உள்ளிடு செய்யும் டேட்டாவை ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தி தகவலாக மாற்றுகிறது. இந்த செயற்பாட்டில் நினைவகமும் ப்ரோஸெஸருக்குத் துணை நிற்கிறது.

ப்ரோஸெஸ்ஸர் (Processor) பற்றி பேசும் போது 32 பிட், 64 பிட் போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். இவை எதனைக் குறித்து நிற்கின்றன?

பிட் (bit) என்பது binary Digit என்பதன் சுருக்கம். அடிப்படையில் இந்த பிட் ஆனது கணினி எவ்வாறு டேட்டாவை தேக்கி வைக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு பிட் என்பது 0 அல்லது 1 எனும் பெருமானங்களை எடுக்கலாம். 1 மற்றும் 1 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானத்தை (100100100111) பைனரி கோட் எனப்படுகிறது.

இந்த பிட்ஸ் கொண்டே ப்ரோஸெஸ்ஸரும் கணித்தல் செயற்பாடுகளை செய்கிறது. 32 பிட்டுகளைப் பயன்படுத்தும் ப்ரோஸெஸ்ஸர் 0லிருந்து 4,294,967,295 வரையிலான வெவ்வேறு பிட் சேர்மானங்களை உருவாக்கலாம். அவ்வாறே 64 பிட் பயன்படுத்தும் போது 0 லிருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும். ஆகவே 64 பிட் கணினி மூலம் அதிக எண்ணிக்கையிலான டேட்டாவைக் கையாள முடியும் என்பது வெளிப்படை.
அத்தோடு கணினியில் நீங்கள் என்றுமே கண்டு கொள்ளாத கவலைப் படாத பல ‘விடயங்கள்’ உள்ளன. அவற்றுள் டேட்டா பஸ் எனப்படும் ஒரு விடயமும் உள்ளது. இந்த டேட்டா பஸ்ஸானது எந்த நகரங்களுக்கிடையிலும் ஓடுவதில்லை. எனினும் இது டேட்டாவை கணினியின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அடிப்படையில் இந்த டேட்டா பஸ்ஸானது, நினைவகத்தை கணினியின் முளையாகச் செயற்படும் ப்ரோஸெஸ்ஸர் உட்பட வெவ்வேறு பாகங்களுடன் இணைக்கிறது, பழைய தொழில் நுட்பமான ஒரு 32 பிட் கணினியில் டேட்டா பஸ்ஸின் அளவானது 32 பிட் அளவு கொண்டதாயிருக்கும். ஆனால் இந்த புதிய தொழில் நுட்பமான 64 பிட் கணினியில் இதன் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதனால் ஒரே நேரத்தில் அதிக டேட்டாவை ப்ரோஸெஸ் செய்யும் போது கணினி அதிக வேகம் கொண்டதாயிருக்கும். எனினும் இது குறிப்பிட்ட சில அப்லிகேசன்களுக்கே பொருந்தும்.

பெரிய அளவிலான கணிதற் செயற்பாடுகள் நடைபெறக் கூடிய தரவுத் தளங்களை அணுகக் கூடிய, மற்றும் சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய, பெரிய வணிக நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்களில் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் மிகுந்த பயனளிக்கும்.

மேற்சொன்ன தேவைகள் இல்லாத ஒபிஸ் எப்லிகேசன் மற்றும் இணைய பயன்பாட்டோடு திருப்தியுறும் சாதாரண கணினிப் பயனர்களுக்கு இந்த 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் பெரியளவிலான பயனைத் தரப் போவதில்லை எனினும் கிரபிக் மற்றும் மல்டி மீடியா பயன்பாட்டில் பயன்தரலாம்.

32 பிட் ப்ரோஸெஸ்ஸரின் கட்டமைப்பை விட பல வகையில் மேம்பட்டதாக 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் உருவாக்கப்படுகின்றன. 32 பிட் ப்ரோஸெஸ்ஸரை விட 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக செயற்திறன் வாய்ந்ததால், வேகமாக டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடும். எனினும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆதரிக்கக் கூடிய மென்பொருள்களை கணினியில் நிறுவிக் கொள்ள வேண்டும். இயங்கு தளங்களும் எப்லிகேசன் மென்பொருள்களும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கேற்றவாறு உருவாக்கப்படாத விடத்து சிறிதளவான பயனே கிடைக்கிறது. உதாரணமாக 64 பிட் விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் 32 பிட் மென்பொருள்களை ஆதரிப்பதில்லை.

ஒரு 64 பிட் இயங்குதளமானது (Operating System) என்பது 64 பிட் ப்ரோஸெஸ்ஸருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இயங்கு தளமாகும். விண்டோஸ் எக்ஸ்பீ விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பதிப்புக்கள் 32 பிட் 64 பிட் இயங்கு தளங்களுக்கென வேறு வேறாக உருவாக்கப்படுள்ளன.

64 பிட் மென் பொருட்களை 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்க முடியாது. எனினும் 32 பிட் மென்பொருள்களை 64 பிட் கொண்ட ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்கலாம். திணிளி நிறுவனத்தின் 64 பிட் ப்ரொஸெஸ்ஸர்கள் 32 மற்றும் 64 பிட் இயங்கு தளங்களை ஆதரிக்கின்றன.

அத்தோடு ப்ரிண்டர், ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா என கணினியில் பொருத்தும் அனைத்து வன்பொருள் சாதனங்களுக்கும் 64 பிட் கொண்ட ட்ரைவர் மென்பொருள்களையே நிறுவ வேண்டியிருக்கும். இது 64 பிட் ப்ரோஸெஸ்ஸ பயன்படுத்துவதிலுள்ள பாதக நிலையாகும். எனினும் AMD நிலைமை தற்காலிகமானதே. எதிர்காலத்தில் ட்ரைவர் மென்பொருள்களும் 64 பிட்டிலேயே கிடைக்கக் கூடியதாயிருக்கும்.

அதேவேளை 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக நினைவகத்தையும் ஆதரிக்க கூடியது என்பதால் நினைவகத்தின் அளவையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கணினியின் செயற்திறன் மேலும் அதிகரிக்கும் 64 பிட்டின் உச்ச பயனைப் பெற 4 ஜீபி அளவிலான நினைவகமும் அவசியமாகும்.

உங்கள் கணினி 32 பிட் ப்ரோஸெஸ்ஸரா அல்லது 64 பிட் ப்ரோஸெஸ்ஸரா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
விண்டொஸ் எக்ஸ்பீயில் Start a all Programs -> Accessories -> System tools °¼¡¸ System Information தெரிவு செய்யுங்கள் அப்போது தோன்றும் சிறிய விண்டோவில் Processor எனுமிடத்தில் கீ86 என இருப்பின் அது 32 பிட் ப்ரோஸெஸர் என உறுதி செய்து கொள்ளலாம்.

ia64 or AMD64 என இருப்பின் அது 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆகும். அதேபோல் OS Name எனுமிடத்தில் Microsoft Windows XP Professional x64 Edition என இருப்பின் அது 64 பிட் ப்ரொஸெஸ்ஸரை ஆதரிக்கும் இயங்குதளம் என தெரிந்து கொள்ளுங்கள்.

மென்பொருள் தயாரிப்பு நிறுவங்கள் இன்னும் 32 பிட்டிலிருந்து 64 பிட்டுக்கு முழுமையாக மாறி விடாததால் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற இன்னும் சிறிது காலம் செல்லலாம். எனினும் எதிர்காலத்தில் 32 பிட் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக் கிடையேயான போட்டியில் சந்தேகத்திற்கிடமின்றி 64 பிட் ப்ரோஸெஸ்ஸரே வெற்றி பெறப் போவது உறுதி.
- Varamanchari

உலகக் கோப்பை யாருக்கு?

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை தென் ஆப்பிரிக்காவில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளை யார் வெல்வார்கள் என்கிற ஆரூடம் பலரால் வெளியிடப்பட்டு வருகிறது.
ஃபிஃபா தலைவர் செப் பிளெட்டருடன் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா

கால்பந்து விளையாட்டின் மிகச்சிறந்த வீரர் என்று வர்ணிக்கப்படும் பெலே இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியின் போது ஆப்பிரிக்க நாடு ஒன்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று தான் நம்புவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரேசில் மற்றும் ஸ்பெயின் மிகச்சிறந்த அணிகளை கொண்டிருந்தாலும் யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் எனக் கூறுவது கடினமாக இருக்கும் எனவும் பெலே கூறியுள்ளார்.
எனினும் தனது நாடான பிரேசில் இறுதிப் போட்டியில் ஒரு ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுவதை பார்த்தால் தனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும் எனவும் பெலே கருத்து வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று அதில் தேர்வான 32 நாட்டு அணிகள், இந்த இறுதிப் போட்டியில் பங்கு பெறுகின்றன.

இந்த 32 நாடுகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் போட்டி இந்திய இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதில் போட்டிகளை நடத்தும் நாடான தென் ஆப்பிரிக்க அணி மெக்ஸிகோ அணியை எதிர்த்து விளையாடுகிறது.

ஜோஹனஸ்பர்கில் உள்ள சாக்கர் சிட்டி விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.



ஆவலுடன் பார்க்கப்படும் போட்டி
வடகொரிய அணியின் பயிற்சியாளர்

இந்தப் போட்டியில் பிரேசில் நாட்டு அணி வடகொரிய அணியை எதிர்த்து ஆடும் போது கால்பந்து விளையாட்டில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறிய நிகழ்வும் ஏற்படவுள்ளது.

ஐந்து முறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வென்றுள்ள பிரேசில் அணி, 44 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள வடகொரிய அணையை எதிர்த்து ஆடவுள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறும் 32 நாடுகளின் தரப்பட்டியலில், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது வடகொரியா.

பிரேசில் நாடு தடையற்ற சுதந்திரம் கொண்ட, மகிழ்ச்சித் துடிப்புடன் விளங்கும் ஒரு நாடு. ஆனால் வடகொரியாவோ கடுமையான இரும்புத் திரைக்கு பின்னர் செயற்படும் நாடு.

பிபிசி ஆய்வு
இதனிடையே உலகக் கோப்பையை போட்டியை யார் வெல்லக் கூடும் என்பது குறித்து பிபிசி ஒரு ஆய்வை நடத்தியது.
உலகின் பல பகுதிகளில் உள்ள கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டுத்துறை செய்தியாளர்கள், மற்றும் இதர வல்லுநர்களிடம் கருத்து கேட்டு ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வு முடிவுகளின்படி உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என்கிற பட்டியலில் முதலிடத்தில் ஸ்பெயினும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன. அர்ஜெண்டினா அணி மூன்றாம் இடத்திலும் இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.
கருத்துக்கணிப்புகள், ஆரூடங்கள் எல்லாம் எந்த அளவுக்கு சரியாக அமைந்தன என்பது ஜூலை மாதம் 11 ஆம் தேதி தெரிந்துவிடும்.

bbc tamil



உண்மையை சொல்வது துரோகமல்ல

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த "உண்மைகளை கூறுவது தனது கடமை" என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்


அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, '' பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.'' என்று கூறியிருந்தார்.



தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.



தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.



இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.
..........BBC tam