Subscribe Us

நிவாரணக் கிராமங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்


எந்த நேரத்திலும் எங்கும் சென்றுவரலாம்
(கே. அசோக்குமார்)
வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப் பட்டு வந்த சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று அறிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று இந்த அறிவித்தலை விடுத்தார். இவ்வறித்தலின்படி நிவாரணக் கிராமத்திலுள்ள அனைவரும், நாட்டிலுள்ள எப்பகுதிக்கும் சென்றுவர முடியும். அதேநேரம், உறவினர்களையும் அவர்கள் பார்க்கவும் முடியும்.
ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதுடன் மீளக் குடியேறும் மக்களுக்கு இதுவரை வழங்கிய 25,000 ரூபா கொடுப்பனவு டிசம் பர் 15 ஆம் திகதி முதல் 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.
வவுனியா நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தங்க வைக்கப்பட்டி ருந்த மக்கள் முகாமைவிட்டு வெளியேற முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருந்தன. உறவினர்கள் வந்து பார்ப்பதோ அல்லது முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்வதோ தடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இவை அனைத்தும் நீக்கப்படுவதுடன் அவர்கள் சுதந்திரமாக செல்ல முடியும். இப்பகுதியி லிருந்து மக்கள் சென்றுவர பஸ் போக்கு வரத்து வசதிகளும் செய்யப்பட வுள்ளன.
மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகளின் எண் ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். மேலும் 6 மாதங்களுக்கு உலர் உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
‘இடம்பெயர்ந்துள்ளவர்களுள் தற்போது சுமார் 50 வீதத்துக்கும் குறைவானவர்களே இன்னமும் நிவாரணக் கிராமங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்.
இடம்பெயர்ந்தவர்கள் என நாட்டில் ஒருவரும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே எமது அரசு செயற்படுகிறது, என அங்கு உரையாற்றிய ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
வடக்கில் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல் களுக்கு அமைய பசில் ராஜபக்ஷ எம்.பி. அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பொன்றை விடுப்பார் என நேற்று முன்தினம் அமைச் சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
வவுனியா சென்ற பசில் ராஜபக்ஷ எம்.பி. வவுனியா நிவாரணக் கிராமங் களிலுள்ள மக்களை சந்தித்து உரையாடிய துடன் அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பையும் விடுத்தார்.
தற்போது வவுனியா நிவாரணக் கிராமங்களில் 1,27,495 பேரளவில் மட்டுமே உள்ளனர். இவர்களும் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக மீளக்குடியமர்த்தப்படுவதுடன் அடுத்த கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுவிடும் என ஆளுநர் ஜீ. சந்திரசிறி தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment