Subscribe Us

67 இலட்சம் பெறுமதியான யூரோக்களுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது


உடம்பில் யூரோ நாணயத்தாள்களை கட்டிக்கொண்டு கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல முயற்சித்த இந்திய பிரஜையொருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து வந்த இவர் கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல ஆயத்தமாகியிருந்தார் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த சுமார் 67 இலட்சம் பெறுமதியான யூரோக்களை மீட்டனர். சந்தேக நபரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரிகள் அவரிடமிருந்து மீட்கப்பட்ட யூரோக்களை அரசு உடமையாக்கியுள்ளனர்.

வீரகேசரி

0 Comments:

Post a Comment