Subscribe Us

300 அடி பள்ளத்தில் குதித்து இளம் காதல் ஜோடி தற்கொலை

பதினெட்டு வயதுடைய இளைஞனும் பதினான்கு வயது டைய யுவதியும் கண்டி தவுலகல எனும் பிரதேசத்திலுள்ள சுமார் முந்நூறு அடி உயரமுடைய மலை உச்சியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர் களின் சடலங்கள் நேற்று முன்தினம் பொலிஸாரால் கண் டெடுக்கப்பட்டுள்ளன.
வாலிபர் ஹந்தஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த தினுஷ்க பண்டார (18) என்றும் யுவதி கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த சசிக்கலா சப்ரமாது (14) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
இறந்து போன இளைஞரின் சகோதரியும் இறந்து போன யுவதியின் சகோதரனும் திருமணம் முடித்திருப்பதன் மூலமாக தற்கொலை செய்து கொண்ட இருவரும் குடு ம்ப அறிமுகத்தில் காதலராகினர்.
கந்தளாய் பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் அந்த யுவதி விடுமுறைக்காக தமது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
மரண பரிசோதனைக்காக கண்டி பெரியாஸ்பத்திரிக்கு சடலங்கள் கொண்டு வரப்பட்டன.
உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்ததால் கடும் காயங்கள் ஏற்பட்டதனால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தினகரன்

0 Comments:

Post a Comment