Subscribe Us

நியூஸிலாந்தை இடம் நகர்த்திய மாபெரும் பூகம்பம்

கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் அதன் தென் தீவே 30 செ.மீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை நியூசிலாந்தை மிகக் கடுமையான பூகம்பம் தாக்கியது. இதில் அதன் தென் தீவு தான் அதிகமான பாதிப்புக்குள்ளானது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பம் தான் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பதிவான மிகப் பெரிய நிலநடுக்கமாகும். நியூசிலாந்து 80 ஆண்டுகளி்ல் சந்தித்திராத மாபெரும் நிலநடுக்கம் இது. வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட அந்த நாடு ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 .கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதன் தென் தீவு 30 செ.மீ. மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியா பக்கமாக நகர்ந்துள்ளது நியூசிலாந்து. இந்த நிலநடுக்கத்தால் மிகச் சிறிய சுனாமி அலையே ஏற்பட்டதும், பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படாததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் இரு கண்டத் திட்டுகளுக்கு மத்தியில் உள்ள மெதுவான பகுதியில் ஏற்பட்டதால் பாதி்ப்பு பெரிதாக இல்லை என்று நியூசிலாந்து வி்ஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அதிக அதிர்வு கொண்ட அலைகள் ஏற்படாமல் குறைவான அதிர்வுகளே ஏற்பட்டதாகவும் இதனால் கட்டடங்களுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெறிவித்துல்ளானர்.
வீரகேசரி இணையம்

0 Comments:

Post a Comment