Subscribe Us

இஸ்ரேலின் போர்க்குற்ற அறிக்கை ஐ. நாவில் சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைப்பு

காஸா மீது இஸ்ரேல் புரிந்த போர் குற்றங்கள் பற்றிய அறிக் கையை ஐ. நாவில் சமர்ப்பிப்பதற்கு தாமதம் காட்டப்படுவது குறித்து காஸாவை ஆளும் ஹமாஸ் அமை ப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கடும் ஆட்சேபனை வெளியிட்டுள் ளார் இஸ்ரேலின் போர்க்குற்றங் களை விளக்கும் கோல்ஸ்டோன் அறிக்கை ஐ.நாவின் சமர்ப்பிக் கப்படாமல் தாமதப்படுத்தப்பட்ட மைக்கு மேற்குலகமும் அதன் கூட் டாளியான பலஸ்தீனமும் காரண மென இஸ்மாயில் ஹனியா சொன் னார்.
கோல்ஸ்டோன் என்ற போர்க் குற்ற அறிக்கையை ஐ.நா. வின் மனித உரிமைகள் அமைப்பு தயாரித் தது. இதில் இஸ்ரேல் பிரதான குற் றவாளியாகக் கூறப்பட்டுள்ளதுடன் ஹமாசும் போர்க்குற்றங்களில் ஈடுப ட்டதாக இந்த அறிக்கை கூறுகின் றது.
இதை அரபு நாடுகளும் ஒப்ப மிட்டு அங்கிகரித்தன. ஆனால் ஐ.நா வில் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட ஏற்பாடானபோது திடீரென இது ஒத்திவைக்கப்பட்டது மேற்குலகின் சதி முயற்சியே இதற்குத் காரண மென ஹமாஸின் தலைவர் இஸ் மாயில் ஹனியா குற்றம் சாட்டியு ள்ளதுடன் பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ¤ம் இதற்குப் பின்னாலுள்ள தாகக் கூறினார்.
பலஸ் தீனத்திலுள்ள 16 மனித உரிமைகள் அமைப்புகளும் இந்த அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிக் கப்படாமல் தாமதமானதைக் கண்டித்தன.
காஸா மக்களுக்கு இஸ்ரேலால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்கும் நடவடிக்கையை மேற் குலகம் தடுக்க முனைகின்றது. அப் பாவி மக்களின் வாழ்வியல் உரிமை களில் அவர்கள் விளையாடுகின்றனர். என மனித உரிமை அமைப்பின் அதி காரிகள் கூறினர்.
பலஸ்தீன பொரு ளாதார அமைச்சர் மேற்குலகின் இச்சதி நடவடிக்கையைக் கண்டித்து தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

காஸா ஒக்டோபர் ஏ. எப். பி

0 Comments:

Post a Comment