Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

கணணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய

அனைத்து கணணியிலும் எது இருக்கோ இல்லையோ கணணி விளையாட்டுகள் மட்டும் தவறாமல் இருக்கும்.


கீழே தரப்பட்டுள்ள நான்கு தளங்களிலும் நீங்கள் எதிலும் உறுப்பினர் ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



1. Free Game Pick: இந்த தளத்தில் 100% அனைத்து விளையாட்டுக்களையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர், மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை.



இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த தளத்தில் ஓன்லைனில் விளையாடும் வசதியும் உள்ளது. பல நூறு விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் தரவிறக்கம் செய்வது சுலபமாக உள்ளது.



இணையதள முகவரி



2. Game Top: இந்த தளத்திலும் விளையாட்டுக்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் ஸ்பைவேர், மால்வேர் போன்ற பிரச்சினைகள் முற்றிலும் இல்லை. மனதிற்கு விருப்பமான நிறைய விளையாட்டுக்கள் இந்த தளத்தில் நிரந்து காணப்படுகின்றன.



இந்த தளத்திலும் ஓன்லைனில் விளையாடும் வசதி காணப்படுகிறது. இந்த தளத்திலும் விளையாட்டின் முழு பதிப்பையும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளமும் உங்கள் விருப்பமான தளமாக இருக்கும்.



இணையதள முகவரி



3. My Play City: மேற்கூறிய இரண்டு தளங்களிலும் உள்ள சிறப்பம்சங்கள் இதற்கும் பொருந்தும். ஓன்லைனில் விளையாடும் வசதி இதற்கும் உண்டு. தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை தரவிறக்கம் செய்து விளையாடலாம்.



இணையதள முகவரி



4. Free ride games: தேவைப்படுபவர்கள் விரும்பிய விளையாட்டை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவி விளையாடலாம். இந்த தளத்திலும் உங்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களை தரவிறக்கம் செய்து மகிழலாம்.



இணையதள முகவரி

பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க

நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.



பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும்.

My Computer மீது Right Click செய்யவும்.

இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும்.

இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும்.

இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும்.

இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும்.

இப்போது Change என்பதை தெரிவு செய்யவும்.




இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும்.

இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும்.

இப்போது இதனை save செய்யவும்.

கம்ப்யூட்டரை Restart செய்யவும்.



சூடு பிடிக்கும் ஹாட் மெயில்

கிமைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஹாட்மெயில் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தர வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது. ஹாட்மெயில் - ஒரு காலத்தில் இலவச இமெயில் என்றாலே, அது ஹாட்மெயில் என்று இருந்தது.
இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா உருவாக்கி, இணைய உலகில் சக்கை போடு போட்டது. பின் இந்த தளத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் அதனை அப்படியே இயக்கத் தொடங்கியது.

யாஹ¥ மெயில் முந்திக் கொள்ள, ஹாட் மெயில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இடையே வந்த கூகுளின் ஜிமெயில், புயல் வேகத்தில் வசதிகளைத் தரத் தொடங்கியவுடன், அதன் இடத்தை யாரும் நெருங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புதிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை, வேறு சிந்தனையின்றித் தன் பக்கமே இறுத்திக் கொண்டது ஜிமெயில். இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது.

மைக்ரோசாப்ட் இப்போது, தன் முழுக் கவனத்தினை ஹாட் மெயில் பக்கம் திருப்பியுள்ளது. அதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து, புதிய பொலிவான, பயனுள்ள இயக்கத்தினைத் தர முயற்சிக்கிறது. இந்த புதிய தளம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.

இருப்பினும் தற்போது உருவாகி வரும் புதிய வசதிகள் குறித்துக் கிடைத்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றைப் படித்த பின்னர், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய உறவை நிச்சயம் புதுப்பிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

மெயில் கட்டமைப்பு புதியதாகத் தரப்படும் பல வசதிகள், வெப்மெயில் தளங்களில் இதுவரை இல்லாத புத்தம் புதிய வசதிகளாகவே உள்ளன என்பது இவற்றின் சிறப்பாகும். ஜிமெயிலில் கூட இவற்றிற்கான இணை வசதிகள் இல்லை என்று கூடச் சொல்லலாம். ஜிமெயில் அடுத்தடுத்து வரும் இமெயில் மெசேஜ்களை ஒரு உரையாடல் போலத் தொகுதித்துத் தருகிறது.

இது ஜிமெயிலைப் பொறுத்தவரை மாறாததாக உள்ளது. இப்படித்தான் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜிமெயில் எதிர்பார்க்கிறது. ஆனால் ஹாட் மெயில் இதில் நம் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறது. பழையபடி வரிசையாக வைத்துக் கொள்ளலாம். அல்லது ஜிமெயில் போல உரையாடலாகவும் மேற்கொள்ளலாம்.

இரண்டிற்கும் ஆப்ஷன் தரப்படுகிறது. இது நிச்சயம் ஒரு வரவேற்கத்தக்கதாக இருக்கும். மற்ற வசதிகள் அனைத்தும் இரண்டு வகைகளில் உள்ளன. குழப்பமான இன்பாக்ஸைச் சரி செய்பவை. அடுத்து மெசேஜ்களுடன் வரும் போட்டோ, டாகுமெண்ட் மற்றும் பிற இணைப்புகளின் அடிப்படையில், இமெயில்களைக் கையாண்டு காட்டும் வசதிகளாகும்.

பிடிக்காத இமெயில் ரத்து : ஒருவர் அனுப்பிய மெசேஜ்கள் உங்களுக்கு அறவே பிடிக்கவில்லை! என்ன செய்வீர்கள்? வந்து விழுந்த இமெயில் மெசேஜ்களை மொத்தமாக செலக்ட் செய்து அழித்துவிடுவீர்கள். அடுத்து மீண்டும் அவர் அனுப்பினால்? ஹாட் மெயிலில் இனி அந்த இமெயில் முகவரியிலிருந்து மெசேஜ் வந்தால், ஹாட் மெயில் தானாகவே அழித்துவிடும்.

இதன் மூலம் குப்பை மெயில்கள் உங்கள் இன் பாக்ஸை நிரப்புவது தடுக்கப்படும். புதிய வியூ மெனு : புதியதாகத் தரப்படும் இந்த வியூ மெனு மூலம், நீங்கள் படிக்காத மெசேஜ்களைத் தனியே பட்டியலிடுதல், குறிப்பிட்ட முகவரியிலிருந்து கிடைக்கும் மெயில்களை மட்டும் காணுதல், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களிலிருந்து வந்த மெயில்களை மட்டும் பார்த்தல் ஆகிய வகைகளில் பார்க்கலாம்.

மேலும் இடது பக்கம் தரப்படும் “Quick views” மெனுவின் மூலம், நீங்கள் குறித்து வைத்த மெயில்கள், போட்டோக்கள் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், டாகுமெண்ட் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், கூரியர் நிறுவனங்களிலிருந்து வந்துள்ள மெயில்கள் மட்டும் எனத் தனித் தனிப் பட்டியல்களாக மெயில்களைக் காணலாம்.
போட்டோக்கள் அட்டாச் செய்யப்பட்டு அல்லது போட்டோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டு மெயில்கள் வந்தால், அவை தனியே ஒதுக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள், உங்கள் இன்பாக்ஸ் மீது பிரசன்டேஷன் தொகுப்பாகக் காட்டப்படும். ஆனால் இந்த வசதி பிகாஸாவில் உள்ள போட்டோக்களுடன் செயல்படவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

இதேபோல மெயில் செய்திகளில் யு-ட்யூப் போன்ற வீடியோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், இன் பாக்ஸிலிருந்து வெளியேறாமலேயே அந்த வீடியோக்களைக் காணும் வசதி தரப்படுகிறது. போட்டோ ஷேரிங். இந்த ஹாட்மெயில் தளத்திலேயே, போட்டோ ஷேரிங் வசதியும் தரப்படுகிறது.

மைக்ரோசாப்டின் ஸ்கை டிரைவில் போட்டோக்களை சேவ் செய்கையில், அவற்றைக் காண நீங்கள் அனுமதிக்கும் நண்பர்களின் இமெயில் முகவரிகளைத் தந்துவிட்டால் இந்த தளமே அவர்களுக்கு அந்த செய்தியை மிக அழகான மெயில்கள் மூலம் அனுப்பும். இந்த இமெயில்கள் அவர்களுக்குச் சென்றவுடன், அவர்கள் இந்த போட்டோக்களை, ஒரு ஸ்லைட் ஷோ காட்சியாகக் காணலாம்.

அவர்களுக்கு விண்டோஸ் லைவ் முகவரி ஐ. டி. இருப்பின், அவர்கள் இந்த போட்டோக்கள் குறித்த தங்கள் குறிப்பினைப் பதியலாம்.

‘பிங் மூலம் தேடல்’ இமெயில் விண்டோவில் “பிroசீ கிing” என்ற வசதி தரப்படுகிறது. இதன் மூலம் இமேஜஸ், கிளிப் ஆர்ட். வீடியோஸ், மேப்ஸ் மற்றும் இணையத்தளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது. கிடைத்த தகவல்களை அப்படியே ஒரு கிளிக் முலம் உங்கள் மெசேஜ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். வெப் அப்ளிகேஷன் இணைப்பு: ஹாட் மெயில் இமெயில் இன்பாக்ஸ¤டன், வெப் அப்ளிகேஷன்கள் இணைக்கப்படுகின்றன. மெயில் மெசேஜ் ஒன்றுடன் வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பார்மட்டில் ஏதேனும் ஒரு பைல் அட்டாச் செய்யப்பட்டிருந்தால், ஹாட் மெயில் உங்களின் அனுமதி கேட்டு, அதனை மைக்ரோசாப்ட் அண்மையில் தந்து வரும் வெப் அப்ளிகேஷன் மூலம் திறக்கும். இந்த பைல்களை எடிட் செய்திடவும் அனுமதிக்கும்.

நீங்கள் அந்த மெசே ஜுக்கு பதில் அனுப்பினால், ஹாட் மெயில் வெப்பில் உள்ள, நீங்கள் எடிட் செய்த பைலுக்கான லிங்க் கொடுத்து, நீங்கள் மேற்கொண்ட எடிட்களைக் காட்டும். இது ஏறத்தாழ கூகுள் டாக்ஸ் எனப்படும் வெப் அப்ளிகேஷனை ஒத்தது. என்றாலும், கூகுள் தரும் அனைத்து வசதிகளும் இதில் தரப்படவில்லை. குறிப்பாக கூகுள் வழங்கும் பி. டி. எவ். வசதி இல்லை. மொபைல் வழி இமெயில்: மொபைல் போன்களுக்கான, மொபைல் பிரவுசர் பதிப்பு ஒன்றை ஹாட்மெயில் கொண்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் மொபைல் போனில் இருந்து மெயில்களைப் படிக்கலாம்.

இருப்பினும் வேறு மொபைல் பிரவுசர் மூலமும் உங்களுக்கு வந்துள்ள மெயில்களைப் படிக்க ஹாட் மெயில் அனுமதிக்கிறது. ஹாட்மெயில் இது போன்ற பல புது ரி:திகளுடன், தன் அடுத்த இன்னிங்ஸை இமெயில் போட்டியில் விளையாட வருகிறது. இந்த முறை தன் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி நிறைய வசதிகளைத் தரும் என்று எதிர்பார்ப்போம்.

-தினகரன்

ஐசாக் நியூட்டன்

ஐசாக் நியூட்டன் (டிசம்பர் 25, 1642 - மார்ச் 20, 1727)[1], ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.


1687ல் ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, Philosophiae Naturalis Principia Mathematica என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய இயக்க விதிகள் மூலம், (classical mechanics) என்னும் துறைக்கு வித்திட்டார். வகையீட்டு நுண்கணிதத் துறையின் உருவாக்கத்தில் கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் என்பவருடன் சேர்ந்து, நியூட்டனுக்கும் பங்கு உண்டு.

பிற பங்களிப்புகள்

புவிசார் மற்றும் விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவரேயாவார். இவர் அறிவியல் புரட்சியுடனும், சூரியமையக் கோட்பாட்டின் வளர்ச்சியுடனும் தொடர்புபட்டிருந்தார். கோள்களின் இயக்கத்துக்கான கெப்ளரின் விதிகள் தொடர்பில் கணிதரீதியான நிறுவல்களை வழங்கியதில் நியூட்டனுக்கும் பங்கு உண்டு. வால்வெள்ளி போன்ற விண்பொருட்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக மட்டுமின்றி, பரவளைவாகவும், அதிபரவளைவாகவும்கூட இருக்கலாம் எனவும் வாதித்து, மேற்படி விதிகளை விரிவாக்கினார்.

வெண்ணிற ஒளி, பல நிற ஒளிகளின் சேர்க்கையென முதலில் விளக்கியவரும் இவரேgeshopan. ஒளி, துணிக்கைகளால் ஆனது என்ற வாதங்களுக்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். பார்க்க: அலை-துணிக்கை இருமைத்தன்

வரலாறு

நியூட்டன், லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் வாழச் சென்றுவிட்டார்.

படிப்பு

நியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். 1661 ல், கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவேயிருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலீலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களைக் கற்கவிரும்பினார். 1665 ல், பைனோமியல் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதத் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார்.

 

ஈர்ப்பு விதி கண்டுபிடிப்பு

Isaac-newton 1.jpg

நியூட்டன் ஆப்பிள்(அப்பிள்) மரமொன்றின் கீழ் இருந்தபோது, அப்பிள் பழமொன்று அவர் தலையில் விழுந்ததாகவும், இது அவர் சிந்தனையைக் கிளறி, புவிசார்ந்த, விண்வெளி சார்ந்த ஈர்ப்புபற்றிய எண்ணக்கரு உதித்ததாகவும் கதை நிலவுகிறது. இது அவரது சொந்தக் கதையான, வூல்ஸ்தோர்ப் மனோரின்யின் யன்னலோரம் இருந்து அப்பிள் மரத்திலிருந்து விழுந்ததைக் கவனித்த கதையை மிகைப் படுத்திக் கூறியதாகும் எனக் கருதப்படுகிறது. நியூட்டனின் கதையும், பிற்காலத்தில் அவரால் கட்டப்பட்டது என்பது பலருடைய கருத்து.

1667 ல், தனது கண்டுபிடிப்புக்களை, முடிவிலித் தொடர்கள் மூலமான பகுப்பாய்வு பற்றி (De Analysi per Aequationes Numeri Terminorum Infinitas) என்னும் வெளியீடு மூலமும், பின்னர் தொடர்களினதும், பிளக்ஸியன்களினதும் வழிமுறைகள் பற்றி (De methodis serierum et fluxionum ) மூலமும் வெளிக்கொணர்ந்தார்.

நியூட்டனும், லீப்னிசும் நுண்கணிதக் கோட்பாடுகளைத் தனித்தனியே உருவாக்கியதுடன், வெவ்வேறு குறியீடுகளையும் பயன்படுத்தினார்கள். நியூட்டன் அவருடைய வழிமுறைகளை லீப்னிசுக்கு முன்னரே உருவாக்கியிருந்தும், பின்னவருடைய குறியீடுகளும்,வகையீட்டு வழிமுறை"யும், மேம்பட்டதாகக் கருதப்பட்டுப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நியூட்டன், அவர் காலத்தைச் சேர்ந்த மிகத் திறமையான அறிவியலாளருள் ஒருவராக இருந்தும், அவருடைய கடைசி 25 வருடங்கள், லீப்னிசுடனான பிரச்சினைகளால் பாழாக்கப்பட்டது. லீப்னிஸ் தன்னுடைய கண்டுபிடிப்புக்களைத் திருடியதாக அவர் குற்றஞ்சாட்டி வந்தார்.

1669 ல், கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருடைய இந்தப்பதவி இவர், கல்லூரியின் ஆய்வாளாராக(Fellow) நீடிப்பதற்குத் தேவாலயத்துக்குச் செல்லவேண்டுமென்ற விதியிலிருந்து விலக்குப் பெற்றதுடன், அவருடைய எதிர்-திரி(கிறி?)த்துவவாதக் கருத்துக்கள் காரணமாக மரபுவாதத் தேவாலயத்துடன் ஏற்படவிருந்த முரண்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டார்.

அயோத்தி தீர்ப்புக்கு தடையில்லை



அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயிக்கும் வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த அறுபது ஆண்டுகளாக அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதன் பின்புலத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளை வழங்கவிருந்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அதற்கு முன்னர் வழங்கப்படாவிட்டால், வழக்கை மீண்டும் விசாரிக்கும் நிலை ஏற்படும்.

கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், இருதரப்பாரும் மீண்டும் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, தீர்ப்பை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரரில் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட பிறகு, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமை வழங்கும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் வரவேற்றுள்ளன.
மிகுந்த பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழைமை மாலை 3.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

26/11 - மும்பை தாக்குதல் நினைவுகள்!

ஹேமந்த் கார்கரையைக் கொலை செய்தது யார்?

26.11.2008 இல் நடைபெற்ற மும்பை தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள்தாம் என்பதை நிரூபிக்க எத்தனையோ முனைகளில் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

நாளுக்கொரு புதிய முகம், மும்பைத் தாக்குதல்களோடு அறிமுகப் படுத்தப்படுகின்றன.

உண்மையைக் கூறுபவர்களை அமுக்க அல்லது அழிக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் மராட்டிய காவல்துறை உயர் அதிகாரி முஷ்ரிஃப் ஐ.பி.எஸ். அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். இவர்தான் முன்னாளில் 3000 கோடி ரூபாய் முத்திரைத்தாள் மோசடியைக் கண்டுபிடித்தவர். பல அதிகாரிகளைத் தண்டித்தவர்.

பயங்கர பரபரப்புடன் வெளிவந்த அந்த நூல் வேகமாக விற்பனையாகியும் வருகிறது.

இந்தப் புத்தகத்தில் எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், தரப்பட்டுள்ள விளக்கங்கள் மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்திட வேண்டும் என்பதற்காக இந்நூலை எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சி சானல்களுக்கும் அனுப்பினார்கள்.

தொலைக்காட்சி சானல்கள் சில இந்த நூலைப் படித்திருக்கின்றன. அவை உடனேயே இந்த நூலை எழுதிய முஷ்ரிஃபி ஐ.பி.எஸ். அவர்களைப் பேட்டி கண்டன.

முஷ்ரிஃப் அவர்களும் காலையிலிருந்து மாலைவரை பேட்டிகளை வழங்கினார்கள். ஒரே நாளில் பத்துத் தொலைக்காட்சி சானல்கள் அவரைப் பேட்டி கண்டன,

பல பிரபல்யமான பத்திரிக்கையாளர்களும் அவரைப் பேட்டி கண்டார்கள். அனைவரும் அடுத்தநாள், அல்லது அதற்கடுத்த நாள் பேட்டி வெளிவந்திடும் என வாக்களித்தார்கள். பல நாட்கள் கழித்தும் பேட்டி வெளிவந்திடவில்லை.

இதில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தவர்கள் ஒரு சக்தி (அவர்கள் வெளிப்படையாகவே பிராமண சக்தி எனக் குறிப்பிடுகின்றார்) பலமாகப் பின்னணியில் வேலை செய்திருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

மொத்தத்தில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடைந்திடாமல் தடுத்து விட்டன ஊடகங்கள்.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மக்களைச் சென்றடைந்திட ஆவன செய்து வருகின்றோம் (இன்ஷா அல்லாஹ்).

இப்போது மிகவும் சுருக்கமான சில தகவல்கலை இங்கே இடம்பெறச் செய்கின்றோம்.

முஷ்ரிஃப் கூறுகின்றார்:

1. பாகிஸ்தானிலிருந்து வந்ததாகக் கூறப்படுவது பத்து பேர் அல்ல; எட்டுபேர் தான்.

(பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா? அல்லது குஜராத்திலிருந்து வந்தார்களா என்பது அப்போதே விவாதமான ஒன்று. "அம்ரேஷ் மிஸ்ரா" என்பவரின் கூற்றுப்படி இவர்கள் யூதர்களின் மும்பைத் தலைமையகமாகிய நரிமன் ஹவுஸ்-இன் தொண்டர்கள் ஆவர்).

2. வந்த எட்டுபேரில், ஆறுபேர் (பாய் பண்டார்கார் மாச்சி, மார்கேலோபி - Bhai Bhandarkar Machi, Mar Coloby) (near Bakhwar Park) என்ற பஹ்வார் பூங்காவிற்குப் பக்கத்தில் இறங்கி விட்டார்கள். இரண்டு பேர் இப்போது சர்ச்சையாக்கப்படும் ஹோட்டல் ஒபேராய்க்குப் பக்கத்தில் - இந்தியா கேட்டுக்குப் பக்கத்தில் - வந்து இறங்கினார்கள்.

3. பஹ்வார் பூங்காவில் இறங்கிய ஆறு பேரும் ஹோட்டல் தாஜ் மஹாலில் லியோ ஃபோல்டு ஹோட்டல், நரிமன் ஹவுஸ் ஆகியவற்றில் கபளீகரங்களைச் செய்தார்கள். ஒபேராய் ஹோட்டலுக்குச் சென்றவர்கள் அங்கேயும் ஹோட்டல் திரிடெண்ட் என்ற ஹோட்டலிலும் கபளீகரங்களைச் செய்தார்கள்.

4. (CST. CAMA Hospital) காமா மருத்துவமனையிலும் ரங்கா பவன் தெருவிலும்(Lane) ஈவிரக்கமற்ற கொலைகளைச் செய்தவர்கள் பாகிஸ்தானிலிருந்து (படகில் வந்த) தீவிரவாதிகளல்லர். அவர்கள் உள்நாட்டு இந்துத்துவ தீவிரவாதிகள்.

5. காமா(CAMA) மருத்துவமனையிலும் ரங்காபவன் தெருவிலும் நடந்த கொலைகளைத் திட்டமிட்டவர்கள் நுணுக்கமாகச் செயல்படுத்தியவர்கள் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்த பிராமிணர்களும் இந்தியாவின் உளவுத்துறையில்(I.B. Intelligence Bureau) உள்ள அவர்களின் ஆட்களும்தான். இதன் ஒரே நோக்கம், ஹேமந்த் கார்கரே அவர்களைக் கொலை செய்வதுதான். காரணம் ஹேமந்த் கார்கரே, இவர்கள் செய்த பல குண்டுவெடிப்புகளைக் கண்டுபிடித்தார். இந்து தீவிரவாதத்தின் முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

மும்பையின் மொத்தத் தாக்குதலையும் இவர்கள் திட்டமிட்டதிலிருந்து செயல்படுத்தியதுவரை நடந்தவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

ஹேமந்த கார்கரே இந்துத்துவ தீவிரவாதத்தின் நாடியைப் பிடித்து விட்டார். இந்துத்துவ (பிராமிண) தீவிரவாதத்தின் முக்கியப் புள்ளிகளைக் கைது செய்வதற்குச் சில மணித்துளிகளே மீதமிருந்தது. அதில் நாட்டின் மிக முக்கியமான பிராமிணத் தலைவர்கள் கைது செய்யப்படவிருந்தார்கள். இவர்கள் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் இன்னும் இதுபோன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள். இவர்களையெல்லாம் சதா சர்வகாலமும் காப்பாற்றிக் கொண்டிருப்பது நமது உளவுத்துறை(I.B).

இந்த உளவுத்துறை இவர்களைக் காப்பாற்றிடப் பல்வேறு உத்திகளை ஆலோசித்து வந்தது.

இந்நிலையில்தான் இவர்களுக்கு அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவின் வெளிநாட்டு உளவு ஸ்தாபனமான 'ரா'(Raw) என்ற அமைப்பிலிருந்தும் மும்பையை நோக்கி பாகிஸ்தானிலிருந்து சில தீவிரவாதிகள் வருவதாகத் தகவல்கள் வந்தன. இதனை இவர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிடப் பயன்படுத்தினார்கள்.

தகவல் கிடைத்தவுடன் உளவுத்துறையிலுள்ள இவர்கள் மும்பை காவல்துறையையும் மேற்கு கடற்கரை கப்பல் படையையும் 'உஷார்' படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் மராட்டிய மாநிலத்திலுள்ள தங்கள் எஜமானர்களையே உஷார்படுத்தினார்கள். மும்பையைத் தீவிரவாதிகள் தாக்கிடும்போதே, கார்கரேயைக் கொலை செய்யும் நோக்கத்தையும் நிறைவேற்றிடத் தயாராக இருக்கும்படிக் கூறினார்கள்.

மராட்டிய மாநிலத்திலுள்ள பிராமணர்கள் ஆறு முதல் எட்டு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த இளைஞர்கள் இந்துத்துவவாதிகளின் நாக்பூர், பூனா ஆகிய இடங்களிலுள்ள இராணுவக் கல்லூரியில் தீவிரவாதப் பயிற்சி பெற்றவர்கள்.

இந்த இளைஞர்கள், இரண்டிரண்டு பேர்களான குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் என்னென்ன, செய்திட வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தந்தார்கள். இவர்களுக்கு விளக்கிச் சொன்னக் குழுவில் இவர்களின் பிராமணர்கள், ஓய்வுபெற்ற (I.B) இந்திய உளவுத்துறை அதிகாரிகள், இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றார்கள்.

செயல்படும் தளங்களை ஓர் வரைப்படத்தைக் கொண்டே விளக்கிச் சொன்னார்கள். (வைகறை வெளிச்சம் இதழில் வரைப்படம் தரப்பட்டுள்ளது).

இவர்களுக்கு விளக்கப்பட்ட திட்டங்களின்படி இவர்கள் மும்பைத் தாக்குதலுக்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே (இவர்கள்) தயாராக இருந்திட வேண்டும்.

படகில் வந்தவர்கள் மும்பைத் தாக்குதல்கள் தொடங்கியவுடன், இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றிட வேண்டும். தாக்குதல்களை நடத்திட தயாராக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு (இந்துத்துவ தீவிரவாதிகளுக்குக்) காமா மருத்துவமனை எஸ்.பி. அலுவலகம் என இலக்குகள் அமைத்துத் தரப்பட்டிருந்தன.

அவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட செல்ஃபோன்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். இந்த செல்ஃபோன்கள் தங்களுக்கு வரும் உத்தரவுகளைக் கேட்டிடத்தானே தவிர பேசிட அல்ல. இந்த செல்ஃபோன்களைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுக்கு உள்ளாலே கூடப் பேசிடக் கூடாது.

இந்த செல்ஃபோன்களின் சிம்கார்டு(Sim card)கள் (மராட்டிய மாநிலம்) சந்தரா 'Santra' வில், வாங்கப்பட்டவை.

இந்த இந்துத்துவ தீவிரவாதிகள் முதலில் மும்பை ரெயில் நிலையத்தையும் பின்னர் காமா மருத்துவமனையையும் தாக்கிட வேண்டும். இந்த இரண்டு தாக்குதல்களையும் அவர்கள் பத்து அல்லது பதினைந்து நிமிட இடைவெளிக்குள் நடத்திட வேண்டும்.

ரெயில் நிலையத்தைத் தாக்கிடும் குழு, தாக்குதல் முடிந்தவுடன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கட்டடம் வழி ரங்பவன் வீதிக்கு வந்து அங்கு நடக்கும் தாக்குதலில் உதவி செய்திட வேண்டும். ரங்காபவன் வீதியில் தாக்குதல் நடத்திட ஏற்கெனவே அனுப்பப்பட்டவர்கள், தங்கள் இலக்குகளை (கொலை) செய்திட இயலவில்லை என்றால் இவர்கள் (ரெயில் நிலையத்தைத் தாக்கி விட்டுச் செல்பவர்கள்) அதனைப் பக்குவமாகச் செய்து முடித்திட வேண்டும்.

எஸ்.பி. அலுவலகம், ரங்பவன் வீதி ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்ட (இந்துத்துவ) தீவிரவாதிகள், தாங்கள் கொலை செய்திட வேண்டிய அதிகாரிகள் (ஹேமந்த் கார்கரே உட்பட அதிகாரிகள்) வந்தவுடன் தாக்குதலைத் தொடங்கிட வேண்டும். கார்கரே தங்களுக்குப் பக்கத்தில் மிகவும் நெருங்கி வந்தபின்தான் இவர்கள் அவரைக் கொலை செய்திட வேண்டும்.

தாக்குதல், அதாவது ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்திடும் பணி வெற்றிகரமாக முடிந்தவுடன் அவர்கள் சமிஞ்சைகளை அனுப்பிட வேண்டும். உடனேயே எவ்வளவு விரைவாக முடியுமோ அத்துணை விரைவாக அவர்கள் தங்களுடைய தளங்களுக்குத் திரும்பிட வேண்டும்.

உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பணி:

(I.B) உளவுத்துறை தங்களது கையிலிருக்கும் தீவிரவாதிகளில் இரண்டு பேரை கொலைகள் நடந்த இடத்திற்குக் கொண்டு சென்றிட வேண்டும். அவர்களில் ஒருவரை எதிர்த் தாக்குதலில் கொலை செய்திட வேண்டும். மற்றொருவரை உயிருடன் பிடித்ததாகக் கூறுவதற்கும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவர்களின் திட்டங்களெல்லாம் நிறைவேறின. ஆனால், கடைசியில் சில குழப்பங்கள். இஃதொன்றும் பெரிய விவகாரமல்ல. காரணம் உலகில் தீட்டப்படும் போர் திட்டங்களெல்லாம் செயல்களத்தில் சில எதிர்பாராத சூழ்நிலைகளைச் சந்தித்திடுவதுண்டு. அதுபோலவே இங்கேயும் அது நடந்தது. செயல் களத்தில் ஆயுதத்தோடு நின்ற இந்துத்துவ தீவிரவாதிகள் பல தவறுகளைச் செய்தார்கள்.

மும்பை ரெயில் நிலையத்தைத் தாக்கிட வந்த இந்துத்துவ தீவிரவாதிகள் தங்கள் மன அரிப்பை முஸ்லிம் வெறுப்பைக் கட்டுப்படுத்திட இயலாதவர்களாக இருந்தார்கள். இதனால் அவர்கள் அங்கு தாடி வைத்திருந்தவர்களையும் புர்கா அணிந்திருந்த பெண்களையும் அவர்களின் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளையும் கொலை செய்து விட்டார்கள்.

ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் திட்டமிட்டபடி டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகப் பாதையைக் கடந்து காமா மருத்துவமனைக்குச் சென்றிட இயலவில்லை. அங்கே நின்ற காவல்துறையினரே காரணம். இதனால் அவர்கள் மஸ்ஜித்பந்தர் வழியாக வெளியே சென்றிட வேண்டியவர்களானார்கள்.

எதிர்பாராத விதமாக (I.B) உளவுத்துறை கடத்திச் சென்ற இரண்டுபேரையும் Girgam Chawpatty கர்காம் சவ்பாத்தியில் எதிர்பட்டக் காவல்துறையினர் கொலை செய்து விட்டார்கள். இதனால் (I.B) என்ற உளவுத்துறை தங்களிடமிருந்த மூன்றாவது ஒருவரைக் கொண்டு வந்து உயிருடன் பிடித்ததாகக் காட்டிட வேண்டியதாயிற்று.

இப்படிப் பல தவறுகள் நடந்திருந்தாலும் சதிகாரர்கள் திட்டமிட்டபடி ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்து விட்டார்கள்.

இத்தனையையும் சொல்லி விட்டு, முஷ்ரிஃப் அவர்கள் நமது உளவுத்துறை வெளிநாட்டுத் தீவிரவாதிகளக் காப்பாற்றிக் கிடைத்த தகவல்களை உரியவர்களுக்குச் சொல்லாததின் மூலம் அதனைத் தங்களது எஜமானர்களைக் காப்பாற்றும் முகத்துடன் கார்கரேயைக் கொலை செய்யப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்பைப் பாழ்படுத்தி விட்டார்கள் எனக் கூறுகின்றார்கள்.

இந்த நூலை ஆய்வு செய்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செய்யித் ஷஹால்தீன் அவர்களும் இதையே கூறுகின்றார்கள்.

- Source : MI November 2009.

முஷ்ரிஃப் அவர்களின் ஜிஹாத்:

அநியாயத்தையும் அநீதியையும் அவற்றைச் செய்பவன் முன்னே பொட்டில் அறைந்தாற்போல் சொல்லி விடுவதே மிகப் பெரிய ஜிஹாத் எனக் கூறியுள்ளார்கள் இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள்.

அதை முஷ்ரிஃப் அவர்கள் ஆணித்தரமாகச் செய்திருக்கின்றார்கள்.

முஷ்ரிஃப் அவர்கள் (I.B) Intelligence Bureau என்ற உளவுத்துறையை பகிரங்கமாகவே குற்றம் சாட்டி இருக்கின்றார்கள்.

சாதாரண கடைநிலை காவல்துறையையே "விலகி நில்" என்று சொல்லிட முடியாத ஒரு நாட்டில் இப்படியொரு குற்றச்சாட்டை அவர் அச்சடித்து வெளியிட்டிருப்பது அவரது அஞ்சா நெஞ்சை மட்டுமல்ல, அவர் திரட்டி உள்ள தகவல்கள் அனைத்தும் அழுத்தமான உண்மைகள்; ஆதாரப்பூர்வமானவை என்ற அவரது நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகின்றன.

நூலை மொத்தமாக ஆய்வு செய்பவர்கள், மொத்த மும்பைத் தாக்குதலும் ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்தவர்களின் ஏற்பாடாக ஏன் இருக்கக் கூடாது என்றே எண்ணுவார்கள்.

பல கோணங்களிலிருந்தும் நமது உளவுத்துறையின் மீது குற்றச்சாட்டுகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பிலும் நாட்டு மக்களின் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர்கள் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திட இயலாது. உளவுத்துறையில் புகுந்திருக்கும் கறுப்பாடுகளைக் களை எடுக்க வேண்டும்.

இந்த நூலின் பின்னணியில் இன்னொரு உண்மையும் வெளிச்சத்திற்கு வருகின்றது. அது,

2008 செப்டம்பர் திங்களில் மராட்டிய மாநிலம் மாலிகோனில் குண்டு வைத்த இந்துத் தீவிரவாதிகளுக்கெதிராக 2009- ஜனவரியில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி புரோகித், சன்னியாசி பிரக்யா சிங் ஆகியோருக்கும் நாட்டில் நடந்த இதர குண்டுவெடிப்புகளுக்கும் சம்மந்தமில்லை என்றொரு வரி இணைக்கப்பட்டிருந்தது. (விபரம் வைகறை வெளிச்சம் ஜனவரி - பெப்ருவரி 2009)

இந்த வரி அவர்களை "மோக்கா" என்ற மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புச் சட்டத்திலிருந்து காப்பாற்றியது. காரணம், "மோக்கா"வில் குற்றவாளிகளை வைத்திட வேண்டும் என்றால் அவர்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்களில் வழக்கு இருந்திட வேண்டும். இங்கே அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டக் குற்றப்பத்திரிக்கையே. "அவர்களுக்கும் வேறு குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பில்லை" எனக் கூறியது.

ஹேமந்த் கார்கரேக்கு வழங்கப்பட்ட கவசம்:

(2008) 26/11 என்று அழைக்கப்படும் மும்பைத் தாக்குதல்களின் போதுதான் இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்த ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்டார்.

அவரைக் கொலை செய்வதற்கு அவரை அழைத்துச் சென்றபோது, அவருக்கொரு புல்லட் புரூஃப் கவசத்தைத் தந்தார்கள். இந்தக் கவசம் போலியானது என இவர்களின் ஊடகங்களே 26.11.2009ல் நடத்திய நினைவுநாள் நிகழ்ச்சிகளின்போது தெளிவுபடுத்தின.

இந்த உண்மை அவர் கொலை செய்யப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்தான் தெரியவந்துள்ளது.

இந்த உண்மை, முஷ்ரிஃப் அவர்களின் நூலின் மதிப்பையும் உண்மைத் தன்மையையும் அழுத்தமாக்கி இருக்கின்றது.

ஹேமந்த் கார்கரேயின் மனைவி கவிதா கார்கரேயின் பெரும்போர்:

ஹேமந்த் கார்கரேயின் மனைவி கவிதா கார்கரே ஒரு வீரமங்கை. அவர் ஒரு கல்லூரி பேராசிரியர்.

இவர் தன் கணவனின் கொலைக்கு நீதிகேட்டுப் போராடி வருகின்றார்.

26.11.2009 இல் தொலைக்காட்சிக்குப் பேட்டி தந்த அவர், தனக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனது போர் தொடரும் என உறுதியாகக் கூறினார்.

முன்னர் தன் கணவர் ஹேமந்த் கார்கரேக்கு விருதுகள் வழங்கிடும் விழாக்களுக்குச் சென்ற அவர், உங்கள் கணவரைக் கொலை செய்தது யார் எனக் கேட்டதற்கு, "நாடாளுமன்றத்தைத் தாக்கியது யார் என்பதையே நாம் இன்னும் தெரிந்திடவில்லையே" எனக் கூறியதை நாம் வைகறை வெளிச்சத்தில் வெளியிட்டிருந்தோம்.

ஊடகங்கள் - பத்திரிக்கைகளின் இருட்டடிப்பு

"ஹேமந்த் கார்கரேயைக் கொலை செய்தது யார்?" என்ற நூல் குறித்து எழுதிய முஷ்ரிஃப்-ஐ பேட்டி எடுத்தவர்கள் பயங்கர வினாக்களை எழுப்பி இருப்பார்கள்.

இந்த வினாக்கள் அந்த நூல் ஆதாரமற்றது என்பதை நிரூபிக்கும் கோணத்திலேயே அமைந்திருக்கும். அத்தோடு நம் நாட்டின் முக்கிய உளவுத்துறைகளாகிய ஐ.பி என்ற உள்நாட்டு உளவுத்துறை , ரா (Reasearch and Analysis Wing) ஆகியவற்றின் மீதும் பழிகளைச் சுமத்தியுள்ளார்.

இவற்றையெல்லாம் பற்றி கர்ண கொடூரமான கேள்விகளைக் கேட்டிருப்பார்கள், பத்திரிக்கையாளர்கள்.

இந்தக் கேள்விப் பதிலில் முஷ்ரிஃப் ஐ.பி.எஸ். தோற்றுப் போயிருந்தால், திணறியிருந்தால் அவருடைய பேட்டி அவசியம் வெளிவந்திருக்கும். முடிந்தால் அவரை அரசிடம் சிக்க வைத்திருப்பார்கள்.

நூலாசிரியர் முஷ்ரிஃப் அவர்களின் பேச்சு அழுத்தமானதாகவும் ஆதாரங்கள் நிறைந்ததாகவும் இருந்ததால்தான் பத்திரிகைகள் அவர் பேட்டியை வெளியிடவில்லை.

அவருடைய பேட்டி வெளியே வந்திருந்தால் நாட்டின் மிகப் பெரிய விவாதமாக அதுவே ஆகியிருக்கும். நூலும் பரபரப்பாக விற்பனையாகி இருக்கும்.

இப்படி ஊடகங்கள் முழு இருட்டடிப்பைச் செய்திருப்பதால் இந்த நூலைப் பரவலாக்கிடும் பொறுப்பை வைகறை வெளிச்சம் தமிழகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆகவே நூல் வேண்டுவோர் ரூபாய் 300-ஐ அனுப்பி தாருல் இஸ்லாம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். முகவரி:
Darul Islam Foundation Trust
235 Peters Road, Royapettah
Chennai 600014