Subscribe Us

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label முஸ்லிம் உலகம். Show all posts
Showing posts with label முஸ்லிம் உலகம். Show all posts

தமிழ், முஸ்லிம் உறவில்

”இவ்வாறான நிகழ்வுகள்” தமிழ், முஸ்லிம் உறவில் மீண்டுமொருமுறை இடைவெளிகளை அதிகரிக்க வழிகோளுமா??


கலாச்சாரம், பண்பாடு, மதம் போன்றன ஒரு சமுதாயத்தின் மரபையும், புர்விகத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பனவாகவும் ஒரு சமூகம் கால மாற்றங்களால் தன் அடையாளங்களை மறந்திடும் போதெல்லாம் நினைவுட்டக்கூடியனவாகவும் அமைகின்றன. ஒரு சமூகம் முன்னேற வேண்டுமாயின் சிறந்த கலாசாரம், பண்பாடு போன்றன அவசியமாகின்றன என்பதையும் உலக வரலாறுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மதம் போன்ற அடையாளங்கள் இன்னோர் சமூகத்தால் மாசுபடுத்தப்பட்டமை அல்லது அழிக்கப்பட்டமைதான் மனித வரலாற்றில் பல்வேறு போராட்டங்களுக்கும், பிரச்சிணைகளுக்கும் பிரதான காரணியாய் அமைந்திருக்கின்றன. இந்த முன்னுரையோடு அண்மையில் மட்டக்களப்பு ஆரயம்பதிக் கல்வியல் கல்லுாரியில் இடம் பெற்ற ஒரு சம்பவத்தை நாம் நோக்க வேண்டியுள்ளது. கம்பஹா மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு முஸ்லிம் மாணவி மட்டக்களப்பு ஆரயம்பதியிலுள்ள கல்விக் கல்லுரிக்குள் நுழைந்த அந்த முதல் சந்தர்ப்பத்திலேயே மாணவியின் ஹிஜாப் ஆடை ஏனைய சிரேஷ்ட மாணவியரால் கல்லுரி ஒழுங்கென்ற பெயரில் களையப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதிர்ச்சிக்குள்ளான குறித்த அந்த மாணவி ஹிஜாப் ஆடையைக்களைய மறுத்துள்ளார். கல்லுாரி அதிபர் அல்லது தலைமை ஆசிரியரிடம் சென்று தனக்கு ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு நாகரீகமாக வேண்டியுமிருக்கிறார். எனினும் கல்லுாரி நிறுவாகம் அதற்கு அனுமதி தர மறுத்ததையொட்டி அம்மாணவி உடனே வீடு திரும்பியுள்ளார். இலங்கை நாட்டுச் சட்டவிதிகளின் படி அவரவர் பண்பாடு, கலாச்சாரம், மதம் போன்றவற்றைப் பின்பற்றும் உரிமை அனைவருக்குமுண்டு. அரச சட்டக்கோவை யில் ஹிஜாப் அணியக்கூடாதென்ற சட்டமோ, நிபந்தனையோ கிடையாதென்பதும் வெள்ளிடைமலை. ஆக கல்லுாரி ஒழுங்கென்ற பெயரில் ஒரு சமூகத்தின் மத,கலாசார,பண்பாட்டு விழுமியங்களை அவமதிக்கும் விதத்தி்ல் குறித்த கல்லுாரி நிருவாகம் நடந்து கொண்டமை சரிதானா? என்பதை நியாயமாக நாம் அலசவேண்டியுள்ளது. இலங்கையைப் பொருத்த மட்டில் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் கல்விக் கல்லுாரிகளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் செல்வாக்கு, ஆதிக்கம் போன்றவை காணப்படுவதும் உண்மைதான். அதனடிப்படையில் நமது பண்பாடு, கலாசாரம், மதம் போன்றவை நமது ஆதிக்கத்தின் கீழுள்ள கல்லுாரியில் நிலவ வேண்டும் என்றும் கூட பல கல்லுாரிகள் யோசிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். இருந்தாலும் இந்தக் கட்டுப்பிடிகளும், ஒழுங்குகளும் எந்தவொரு சமுதாயத்தையும் பாதிக்கும் விதத்தில் இருக்கக் கூடாது என்பதையும் குறிப்பிட்ட கல்லுாரிகள் தமது கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரயம்பதி கல்விக் கல்லுாரியானது தமிழ் பிரதேசத்தில் தமிழ் செல்வாக்குடன் காணப்படும் ஒரு கல்விக் கல்லுாரியாகும். அங்கு முஸ்லிம் மாணவிகள் அனுமதிக்கப்படுவது இதுவே முதற்தடவையல்ல. குறிப்பிடத்தக்களவிலான முஸ்லிம் மாணவ, மாணவிகள் அங்கு படிக்கின்றார்கள். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது அவர்களின் மதப்பண்பாட்டோடு தொடர்பான ஓர் அம்சம் என்பதை நன்குணர்ந்து ஆரயம்பதிக் கல்விக் கல்லுாரி தமது சட்டவிதிகளில் இவ்விடயத்துக்கு அனுமதி வழங்குவதே ஏற்புடையது. ஏனெனில் குறித்த முஸ்லிம் மாணவி சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சிளை மேற்கொண்டால் அரசியல் சட்டத்தில் புரண உரிமை அவர்களுக்கிருப்பதனால் கல்லுாரி நிர்வாகம் சட்டரீதியாகப் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம. பொதுவாக நடுநிலையாக சிந்திக்கும் எவரும் இந்த விடயத்தில் குறிப்பிட்ட முஸ்லிம் மாணவியின் கோரிக்கையில் பிழை காண மாட்டார்கள். சென்ற 28ஃ06ஃ2009 அன்று வெளியான வீரகேசரி வார வெளியீட்டில் “பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ்சார்கோஸி முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதைப் பொது இடங்களிலும் தடைசெய்ய வேண்டும் என்பது தொடர்பாக அந்நாட்டுப் பாராளுமன்றில் ஆற்றிய உரை பிரான்ஸில் மாத்திரமன்றி ஐரோப்பா வாழ் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் ஒரு அடக்குமுறை என்றும் ஒரு பெண் தனது உடல் அவயங்களைக் காட்டுவதற்கு சட்டபுர்வ அங்கீகாரம் இருக்குமென்றால் இன்னொரு பெண் தனது உடலை மறைத்திருப்பதற்கான சுதந்திரமும், உரிமையும், சட்டபுர்வ அங்கீகாரமும் அவளுக்கு வழங்கப்பட வேண்டும். மனித உரிமை பற்றிப் பேசும் ஐரோப்பிய சமூகம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்“ என்றும் ஒரு தமிழ் சகோதரர் எழுதிய அந்த ஆக்கத்தையும் இந்த சமயத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமெனக் கருதுகின்றேன். அமைதிக்கான வாயில்கள் இலங்கையில் திறந்து கொண்டிருக்கும் இத்தருவாயில் பிரதான இரு சிறுபான்மையினருக்குமிடையில் இது போன்ற விடயங்கள் முறுகல்களை விளைவிக்கவல்லது. அவ்வப்போது சில தீய சக்திகளின் பின்னணியில் தமிழ், முஸ்லிம் உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையினால் கடந்த காலங்களில் பல கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் தற்போதைய சூழலில் சுமுக நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மற்றுமொரு இனமுறுகல் ஏற்படுமானால் புரிந்துணர்வுடன் காணப்படும் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் தவறான முன்மாதிரியாக இது மாறிவிடுமே!

அயோத்தி தீர்ப்புக்கு தடையில்லை



அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயிக்கும் வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கலாம் என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கியது.

கடந்த அறுபது ஆண்டுகளாக அயோத்தியில் சர்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதன் பின்புலத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் லக்னோ கிளை வழங்கவிருந்தது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இந்த மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு அதற்கு முன்னர் வழங்கப்படாவிட்டால், வழக்கை மீண்டும் விசாரிக்கும் நிலை ஏற்படும்.

கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், இருதரப்பாரும் மீண்டும் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, தீர்ப்பை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரரில் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட பிறகு, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமை வழங்கும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் வரவேற்றுள்ளன.
மிகுந்த பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழைமை மாலை 3.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிக்கப்பட்ட சலாம்!

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் சலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.


ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236

முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
சிலர் சலாம் கூறும் போது புரியும் படியாகவோ அல்லது முழுமையாகவோ கூறுவதில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சகாபாக்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒரு சஹாபி வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் என்றார். நபி (ஸல்) அவர்கள் பத்து என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைலக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் இருபது என்றார்கள். மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் முப்பது என்று கூறினார்கள். சஹாபாக்கள் ஆர்வமிகுதியால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, முதலில் சலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள், இரண்டாவது சலாம் கூறியவருக்கு இருபது நன்மைகள், முன்றாவது சலாம் கூறியவருக்கு முப்பது நன்மைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

‘சலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: -
உங்களிடையே ஸலாத்தைக் கொண்டு பரப்புங்கள். சலாம் சொல்வதால் இரு உள்ளங்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுகிறது.

நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) , ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5175)

வீடுகளில் நுழையும் முன் சலாம் கூறுவதன் அவசியம்: -
நம்முடைய வீட்டிலோ அல்லது பிறருடைய வீட்டிலோ நுழையும்போது நம்மில் எத்தனை பேர் சலாம் சொல்லி நுழையக் கூடியவர்களாக இருக்கிறோம்? பிறருடைய வீட்டில் நுழையும் போது சமையல் வாசனை முக்கைத் துளைத்தவுடன் இன்று என்ன பிரியானி சமையலா? என்று கேட்வாறு உள்ளே நுழைகிறோம். ஆனால் இஸலாம் வலியுறுத்திக் கூறும் சலாம் சொல்வதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.

அத்தியாயம் 24, ஸூரத்துந் நூர் (பேரொளி), வசனம் 27 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறுதல்: -

கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறக் கூடாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே காணப்படுகிறது. இது தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலே நுழையுமுன் மனைவிகளுக்கும், சிறியவர்களுக்கும் முந்திக்கொண்டு சலாம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்: -

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.

அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்) வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.
மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -
இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.

ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

http://www.koothanalluronline.com/ta/?p=552

பிப்ரவரி 14 -கற்பு கொள்ளையர் (காதலர்) தினம்

*பிரப்வரி 14 :* காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது.

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது. கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.

உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.

காதலிப்போர் கவனத்திற்க்கு

காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.

பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,

ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள்,  வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.

சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.


காதலிப்பதால் ஏற்படும் இழப்புகள்
*இளம் பெண்களே!* பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.

காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்.


படிக்கும் இளைஞர்களே!
காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.


இளைஞர்களே!

உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.


காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்
காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம். காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” (நூல்: புகாரி 6243)

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!


டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்
எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

அமெரிக்கா வெளியிட்டது பின்லேடன் படம் அல்ல : ஸ்பெயின் எம்.பி.


சர்வதேச குற்றவாளியும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் தற்போது எப்படி இருப்பான் என்று யூகித்து அமெரிக்க வெளியுறவு துறை ஒரு படத்தை உருவாக்கியுள்ளது. அதை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.




அதில் கடந்த 1998-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பின்லேடனின் கடுமையான தாடியுடன் கூடிய படத்தையும், தற்போது புதிதாக உருவாக்கியுள்ள நரைத்ததாடியுடன் கூடிய ஒருபடத்தையும், தாடியில்லாத சற்று வயது முதிர்ந்த படமும் உள்ளது.



இந்த படம் பின்லேடனின் படம் அல்ல. அது எனது உருவபடம் என ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கஸ்பர் லா மஷர்ல் (52) என்ற எம்.பி. புகார் கூறியுள்ளார்.



பின்லேடனின் உருவம் சற்று என்னை போன்று உள்ளது. அதைபயன்படுத்தி உளவுத்துறையினர் கம்ப்யூட்டர் மூலம் வரைந்து வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.



இதற்காக அமெரிக்காவுக்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதை அமெரிக்க உளவுத்துறை மறுத்துள்ளது. பின்லேடனின் வயதை கருத்தில் கொண்டு அவனது உருவத்தை மாற்றி வரையப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்.

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.




சிறுவர் துஷ்பிரயோகம்:

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்கள் பல மட்டத்திலும் நடந்தேறி வருகின்றன. இது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும், இவ்விதம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் குடும்ப கௌரவத்திற்காக மூடி மறைக்க முற்படுவதனால், இந்தக் குற்றம் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது. 2006-ல் ஐ.நா வின் ஒரு ஆய்வின்படி, 18 வயதிற்குட்பட்ட 15 கோடி சிறுமிகளும் 7 கோடியே முப்பது இலட்சம் சிறுவர்களும் ஓர் ஆண்டிற்குள் பாலுறவில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டதாக அல்லது வேறு விதமான பாலியல் கொடுமைக்கு ஆளாகுவதாகக் கண்டுணரப்பட்டுள்ளது. அத்துடன் அதே அறிக்கை உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக இதை விட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றது. மேலும், சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களில் 36 சதவீதத்தினரும், ஆண்களில் 29 சதவீதத்தினரும் தாம் பிள்ளைப் பருவத்தில் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்ட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதில் இந்தக் கொடுமையை அவர்களுக்கு இழைத்தவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்ப உறவினர்களே என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.



இன்றைய ஆபாச சினிமாக்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் நிகழ்ச்சிகள் என்பன எரிகின்ற இந்தத் தீயில் எண்ணைய் வார்ப்பதாய் அமைந்துவிடுகின்றன.



ஆண்-பெண் இரு சாராரின் திருமண வயதெல்லை உயர்ந்து செல்வது, நெருக்கமான குடும்ப அமைப்புக்கள் என்பனவும் இதற்கான வாய்ப்பையும், சூழலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. பெருகிவரும் மதுப் பழக்கம் மற்றுமொரு அரக்கனாக மாறி இப்பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.



மது போதையில் ஒன்பது வயது மகளைக் கற்பழித்த தந்தை, சாராயக் கடன் அடைக்க மகளை அடகு வைத்த தந்தை போன்ற பத்திரிகைச் செய்திகள் இதையே உணர்த்துகின்றன.



ஆண்களின் வக்கிர பார்வைக்குச் சிறுவர்-சிறுமியர் உள்ளாவது போன்றே, மோசமான பெண்களின் வலையில் சிறுவர்கள் சிக்கும் விபரீதமும் நிகழ்ந்து வருகின்றது. 11, 12, 13, 14 வயதுகளையுடைய 4 மாணவர்களை மாலை வகுப்புக்கள் என்ற பெயரில் வீட்டுக்கழைத்து அவர்களைப் பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்திக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ஆசிரியைக்கு அண்மையில் 28 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



இது போன்ற சூழ்நிலைகளுக்குள்ளாகும் சிறுவர்-சிறுமியர் உளவியல் ரீதியில் பாரிய பிரச்சினைக்குள்ளாகின்றனர். 15 வயதுடைய இளம் சிறுமி ஒருவர் தனது சகோதரனால் தவறாக வழி நடத்தப்பட்டதால், ஹிஸ்டீரியாவுக்குள்ளான செய்தி, அச்சிறுமியை உளவியல் ஆய்வுக்குட்படுத்திய போது அறியப்பட்டுள்ளது.



அத்துடன், இவ்வாறு தவறாக வழி நடத்தப்படுகின்ற சிறுவர்-சிறுமியர் மிதமிஞ்சிய பாலியல் வேட்கை – இல்லை வெறி கொண்டவர்களாக மாறி தமது வாழ்வையும் சீர்குலைத்துக் கொள்ளும் ஆபத்துள்ளது. எனவே, இது குறித்து மிகுந்த அவதானம் தேவை!


அறிவு அவசியம்:

முதலில் இத்தகைய கொடுமை உலகில் அன்றாடம் நடந்து வருகின்றது என்ற அறிவு குறிப்பாக பெற்றோருக்கு இருப்பது அவசியமாகும். அறிவு இருந்தால் தான் அவதானமாக இருக்கலாம். பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது. பகிரங்கக் குற்றவாளிகளை விட நல்லவர்களாக நடப்பவர்கள் தான் குடும்பத்துக்குள்ளும், தம்மை அண்டி வாழ்பவர்களிடமும் இந்தக் குற்றத்தைப் புரியும் அபாயம் இருக்கின்றது. எனவே, அனைவர் விடயத்திலும் பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.


குறிப்பாக மாற்று சமூகங்களில் இது போன்ற குற்றங்கள் தந்தை, சிறிய தந்தை, மாமா போன்றோரால் நிகழ்த்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. முஸ்லிம் சமூகத்தில் இந்நிலை இல்லையென்றாலும் தூரத்து உறவினர், அண்டை அயலில் வசிப்போர், நண்பர்களுடாக நடக்கும் சாத்தியம் அதிகமுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற ஒரு நாவல் ஒரு கதாபாத்திரத்தைச் சித்திரிக்கின்றது. அதில் வரும் ஒரு மாமன் தனது மருமகளை அன்போடு அரவணைக்கின்றான். செல்லமாகத் தட்டிக் கொடுக்கின்றான். தாயோ தனது சகோதரன் தன் மகளுடன் பாசத்துடன் இருப்பதை எண்ணி பூரித்துப் போகின்றாள். ஆனால், அந்தப் பெண்ணோ மாமனின் சில்மிஷத்தை உணர்ந்து தடுக்கவும் முடியாமல், தட்டிக் கழிக்கவும் முடியாமல், அவனின் கபடத் தனத்தை உணராதது போல் செல்லமாக நடித்துக் கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் அதிகமான பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.


மற்றும் சில தாய்மார்கள், தமது அயலவர்களுடன் கொஞ்சம் ஓவராகவே நெருங்குவதாக உணர்ந்தாலும், ‘அவர் வஞ்சகம் இல்லாமல் பழகுபவர்; பிள்ளைகளுடன் சரியான இரக்கம்’ என்று தம் மனதுக்கு விரோதமாகப் பேசி சமாளித்துச் செல்கின்றனர்.


தனது பிள்ளைகளுடன் அன்பாகப் பழகாதவன் அடுத்த வீட்டுப் பிள்ளையுடன் செல்லமாக விளையாடுகின்றான். 8-9 வயதுப் பிள்ளைகளுக்கும் முத்தம் கொடுக்கின்றா னென்றால் சிந்திக்க வேண்டிய விடயம்தான். எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளுடன் யார், என்ன விதத்தில் பழகுகின்றனர் என கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.


- வீட்டில் தனியாக ஓர் ஆண் இருக்கும் போது பொருட்கள் வாங்கவோ அல்லது ஏதேனும் உதவிகள் செய்யவோ பெண் பிள்ளைகளை அனுப்பக் கூடாது!


- ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அடுத்தவர் வீட்டில் சிறுவர்-சிறுமியரை உறங்க அனுப்பக் கூடாது!


- அவரவர் வயதுக்கு மூத்தவர்களுடன் நேசத்துடனும், நெருக்கமாகவும் பழக விடக்கூடாது! சம வயதுடையவர்களுடன் நட்பாக இருக்கலாம்!


- தனிமைப்படும் சந்தர்ப்பத்தைக் குறைக்க வேண்டும். சிறுவர்-சிறுமியர் தனிமையில் இருக்கும் போதே துஷ்பிரயோகத்திற் குள்ளாகின்றனர்.


- ஒன்பது வயது தாண்டியவர்கள் ஒரே போர்வையைப் போர்த்தியவர்களாக உறங்கு வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இந்த வகையில் உறவுக்காரர்கள், அந்நியர்கள், நண்பர்கள், வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் போன்றவர்களுடன் ஒரே கட்டிலில் ஒன்றாக சிறுவர்-சிறுமியரை உறங்க விடலாகாது.


- வீட்டில் நடைபெறும் விஷேடங்களின் போது, பிள்ளைகளின் உறக்கம் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை. கண்டபடி அவர்கள் உறங்கிவிடுவர். அத்தகைய கலப்பு உறக்க சந்தர்ப்பங்களைக் காமுகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, இதில் விழிப்பு அவசியம்!


- சிறுவர்-சிறுமியர் அன்பளிப்புக்களுக்கு ஏமாறாதவர்களாக பழக்குதல் பெற்றோரின் கடமையாகும். சிறுவர்களை பலி கொள்ளும் பாதகர்கள் ‘டொஃபி (மிட்டாய்) தருகிறேன்; சொக்கலேட் தருகிறேன்; பலூன் தருகிறேன். வா!’ என அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே, யார் எதைத் தந்தாலும் எடுக்கக் கூடாது; ஏமாறக் கூடாது என்ற கட்டுப்பாடு அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும்.


- எமது பிள்ளைகள் அடுத்தவர்களிடத்தில் தேவையுடையோராக இருக்கக் கூடாது! தம்மை நாடி தேவையுடன் வருபவர்களிடம் காமுகர்கள் துணிச்சலுடன் கை நீட்டலாம். சிறுவர்களும் தமது தேவை நிறைவேற வேண்டும் என்ற ஏக்கத்தில் அதற்கு இசைந்து செல்லலாம்.

- ஏற்கனவே நன்றாகப் பழகிய ஒருவர் வீட்டிற்கு வந்ததும் நமது சிறுவர்கள் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க முனைந்தால், அல்லது அவர்களது சிறு விளையாட்டுக்குக் கூட அதிகம் ஆத்திரம் கொண்டால், அவர்கள் மூலம் இவர்கள் விரும்பத்தகாத ஏதோ ஒன்றைச் சந்தித்துள்ளனர் என்பது அர்த்தமாகும். எனவே, சிறுவர்களின் நடத்தைகளில் ஏற்படும் மாறுதல்களை அவதானித்துப் பெற்றோர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும்.


ஒரு மலையகப் பெண் கவிஞரின் கவிதை வரிகள் பின்வரும் கருத்தில் அமைந்துள்ளன.


தனது பாட்டனுக்குப் பணி செய்யுமாறு தாய் நச்சரிக்கிறாள்; மகள் மறுக்கிறாள். காரணம் பாட்டனார் சிறுமியிடம் சில்மிஷம் பண்ணுகிறார். இதைத் தாயிடம் சொல்லிக்கொள்ள முடியாத மகள் மனதுக்குள்ளே வெதும்புகிறாள்! தாயோ தன் மகள் பாட்டனுக்குச் செய்ய வேண்டிய கடமையில் அசட்டை செய்வதாகவே அதை எடுத்துக்கொள்கிறாள். இது போன்ற இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கும் சிறுவர்கள் உளவியல் ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.


- அத்துடன் பெற்றோர் பிள்ளைகளை சதாவும் தமது கண்காணிப்பில் வைத்திருப்பதன் மூலமும், அவர்களுடன் அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுவதன் மூலமும் பிள்ளைகள் துஷ்பிரயோகத் திற்குள்ளாகுவதைப் பெரும் அளவில தவிர்க்க முடியும்.

- அத்துடன் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், சிறுவர்-சிறுமியர் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்தும் சிக்கலான சந்தர்ப்பங்களில் தம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

- மார்க்கத்துக்கு முரணான எந்தச் செயலை யார் செய்யச் சொன்னாலும் செய்யக்கூடாது! தவறைச் செய்யுமாறு யார் கட்டளையிட்டாலும் கட்டுப்படக் கூடாது! என்ற உணர்வு அவர்களுக்கூட்டப்பட வேண்டும்.


- குழந்தைகள் தமது பிரச்சினைகளைப் பெற்றோர்களிடம் கூறக் கூடிய அவகாசத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதுடன் அதற்கான துணிவையும் அவர்களுக்கு அளிக்கவேண்டும்.

- அடுத்தவர்கள் நட்புக்காகவும், அன்புக்காகவும் தீண்டத்தக்க உறுப்புக்கள் எவை? தீண்டக் கூடாத உறுப்புக்கள் எவை என்ற தெளிவு அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

- தவறைத் துணிவுடனும், உரத்த தொனியிலும், உறுதியுடனும் மறுக்கும் துணிவு அவர்களுக்கு ஊட்டப்படுவதுடன், தேவைப்பட்டால் ஆபத்தின் போது எப்படித் தப்ப முடியும்? என்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.


- இவ்வாறு, பெற்றோர்கள் தமது குழந்தைகள் விடயத்தில் விழிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டால் எமது சிறுவர்களின் எதிர்கால வாழ்வை நாசப்படுத்தும் துஷ்பிரயோக நடவடிக்கைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். இது விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

பிரிட்டிஷ் ஹோட்டலில் மத நிந்தனை: இருவருக்கு சிறை

லண்டன், டிச. 08 (ஏ.எப்.பி.)
பிரிட்டிஷ் நட்சத்திர விடுதியில் ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்ணை இம்சைக்குள்ளாக்கிய இருவர் சிறையிலடைக்கப்பட்டனர்.
சிறையிலடைக்கப்பட்ட இரு வரும் ஹோட்டல் உரிமையாளர்களாவர்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர்கள் முஸ்லிம் பெண்ணிடம் சென்று மதநிந்தனை செய்தனர். உனது ஆடை (ஹிஜாப்) அடக்கு முறையின் வெளிப்பாடு.
முஹம்மது நபி யுத்தப்பிரியர் என அவர்கள் கூறினர். இது குறித்து முஸ்லிம் பெண்மணி கூறியதாவது,
எனக்கு அறுபதுவயது. என்னைப் பார்த்து நீ ஒரு பயங்கரவாதியா ஒரு கொலைகாரியா எனக் கேட்டவுடன் கடும் அதிர்ச்சியடைந்தேன் என்றார். இப் பெண் கடந்த மார்ச்சில் இஸ்லாத்தை தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

A couple have gone on trial in Britain on Tuesday accused of verbally abusing a Muslim woman for wearing the hijab while staying at their hotel.
Ericka Tazi says she was subjected to an hour-long tirade by Benjamin and Sharon Vogelenzang, who are Christians, after emerging from her room on the morning of March 20 wearing the Islamic head covering and gown.
Tazi, who converted to Islam 18 months ago, was allegedly asked by Benjamin Vogelenzang if she was a terrorist. His wife said her dress "represented oppression and bondage", Liverpool Magistrates Court was told,
"It was my outfit that had triggered him," Tazi told the court, saying the hotelier had resembled "a whirling dervish".
"He asked me if I was a murderer, if I was a terrorist. I'm a 60-year-old disabled woman, I couldn't understand where it was coming from, it was shocking to me."
Benjamin Vogelenzang, 53, also called the prophet Mohammed a "warlord" and compared him to Adolf Hitler, prosecutor Anya Horwood told the court.
Tazi denied she had had robust arguments about religion with other guests during her stay at the hotel under questioning by defence lawyer Hugh Tomlinson.
The Vogelenzangs, who run a hotel in Aintree, Liverpool, deny a charge of using religiously aggravated threatening, abusive or insulting language.
Their trial is expected to conclude on Wednesday.

இத்தாலிய பெண்களை முஸ்லிமாக மாற்றிய லிபியா அதிபர் கடாபி


ரோம் நகரில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட லிபியா அதிபர் கடாபி, 200 இத்தாலிய பெண்களை முஸ்லிம் மதத்துக்கு மாற செய்தார்.ரோம் நகரில் கடந்த வாரம் உணவு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லிபியா அதிபர் கடாபி வந்திருந்தார். லிபியா நிறுவனம் சார்பில் 200 அழகிய இளம் பெண்கள் வேலைக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தனர். லிபியா தூதரகம், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கடாபியை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் 200 பெண்களும் வந்திருந்தனர். கடாபி உறுதி மொழி படிக்க அந்த பெண்களும் அந்த உறுதி மொழியை சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குரான் புத்தகம் அளிக்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் கடாபி இந்த கூட்டத்தில் பேசினார். இதுபற்றிய விரிவான கையேடு ஒன்று 200 பெண்களுக்கும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில பெண்கள் குறிப் பிடுகையில், " இந்தகூட்டத்தில் கலந்து கொண்டால் சில ஆயிரம் ரூபாய் பணமும், லிபியா நாட்டு பரிசு பொருட்களும் கிடைக்கும், என கூறினார்கள். ஆனால், குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை' என்றனர்.கடாபி கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கருத்துக்களும் கூறப்பட்டனவாம். அதாவது, "ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை. அவர் இருந்த இடத்தில் யாரோ ஒரு நபர் இதேபோல இருந்துள்ளார்'என, இந்த கூட்டத்தில் பேசிய சிலர் தெரிவித் தார்கள், என மதமாறிய பெண்கள் தெரிவித்தனர்.

ஆப்கான் அமெரிக்காவுக்கு ~பொறி' ஆகிவிட்டது

வளர்ந்த கடா மார்பில் பாய்கின்றது.

ஆப்கானிஸ்தானில் வைத்த காலை எடுக்க முடியாமல் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் திண்டாடுகின்றன.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகக் கூடுதலான படையினரைக் கொண்டுள்ள நாடு பிரித்தானியா. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்ட 9000 பிரித்தானியப் படையினரில் 234 பேர் இதுவரையில் சண்டையில் இறந்துள்ளனர்.
இது பிரித்தானியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள படைவீரருக்கு அவசியமாகத் தேவைப்படும் ஹெலிகொப்ரர்கள், கவச வாகனங்கள் போன்றவற்றைப் போதுமான எண்ணிக்கையில் அனுப்பாததாலேயே படைவீரர்கள் இறக்க நேர்ந்தது என்ற குற்றச்சாட்டு பிரித்தானிய அரசாங்கத்துக்கு எதிராக மக்களால் முன்வைக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலிருந்து படை வீரரைத் திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அங்கு வலுத்து வருகின்றது.
பிரித்தானியாவில் அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலுள்ள படைவீரர் விவகாரம் தேர்தலில் தொழிற் கட்சிக்குப் பாதகமாக அமையலாம் எனக் கருதிய பிரதமர் கோர்டன் பிறவுண் ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச மகாநாடொன்றை லண்டனில் நடத்துவதற்கு முன்வந்திருக்கின்றார்.
அடுத்த வருட முற்பகுதியில் இந்த மகாநாட்டை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் படைவீரருக்குப் போதியளவு பயிற்சி அளித்துவிட்டு நேட்டோ படைகள் வெளியேறுவதற்கான கால அட்டவணையைத் தீர்மானிப்பது இம் மகாநாட்டின் பிரதான நோக்கம்.
பிரித்தானியா மாத்திரமன்றி, மற்றைய நேட்டோ நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதையே விரும்புகின்றன.
சர்வதேச மகாநாடொன்றைக் கூட்டி ஆப்கான் நிலைமை பற்றி விவாதிக்க வேண்டும் என்ற ஆலோசனையைப் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண், ஜேர்மன் அதிபர் அஞ்செலா மேர்கெல், பிரான்ஸ் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி ஆகியோர் செப்ரெம்பர் மாதத்தில் கூட்டாக முன்வைத்தனர். இந்த ஆலோசனையின் தொடர்ச்சியாகவே லண்டனில் மகாநாடு நடத்துவதற்கு கோர்டன் பிறவுண் ஏற்பாடு செய்கின்றார்.
இந்த நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புகின்ற போதிலும் தனியாக வெளியேறுவதற்குச் சாதகமாகச் சமகால சர்வதேச ஒழுங்கு இல்லை. எனவேதான் மகாநாடு கூட்டித் தீர்மானிக்க முனைகின்றன.
இதே நேரம், இரண்டு வருட காலத்துக்குள் கூடுதலான படையினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. அந்தளவுக்குத் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்திருக்கின்றது. 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் 26607 அமெரிக்கப் படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர்.
அடுத்த ஆறு மாதங்களில் இந்த எண்ணிக்கை 48250 ஆக உயர்ந்தது. 2009 ஜனவரியில் 3000 படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். பெப்ரவரியில் மேலும் 17000 பேர் அனுப்பப்பட்டனர். மேலும் துருப்புகளை அனுப்புவதற்கு ஒபாமா முடிவு செய்திருக்கின்றார்.
நேச நாடுகள் தங்கள் படையினரைத் திருப்பி அழைப்பது பற்றி ஆலோசிக்கும் போது அமெரிக்கா மேலும் மேலும் துருப்புகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புகின்றது.

அமெரிக்காவுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலை அமெரிக்காவினாலேயே உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் சோவியத் சார்பு ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்கா வளர்த்தெடுத்தவர்களே தலிபான்கள். பாகிஸ்தானில் தளங்களை அமைத்துப் பெருமளவு பணச் செலவுடன் தலிபான்களை அமெரிக்கா வளர்த்தது.
தேவையான ஆயுதங்களும் பாகிஸ்தானுக்கூடாக வழங்கப்பட்டன. தலிபான்களுக்குப் பாகிஸ்தானில் பயிற்சி அளித்ததால் இன்று அவர்கள் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு செயற்படுவதற்கு வாய்ப்பாகிவிட்டது. அமெரிக்கா வளர்த்த கடா இன்று அதன் மார்பிலேயே பாய்கின்றது.
ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதலான படையினரை அனுப்புவதோடு பாகிஸ்தானுக்கும் சகல விதமான உதவிகளைச் செய்ய வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தலிபான்கள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இயங்குவதால் அவர்கள் அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பதற்குப் பாகிஸ்தான் இராணுவத்தின் உதவி தேவை.
மேலும், பாகிஸ்தானுக்குள் இருக்கும் தலிபான்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் இராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
இதனால் பாகிஸ்தானுக்குத் தேவைப்படும் நிதி, ஆயுத, இராஜதந்திர உதவிகளைச் செய்வதை அமெரிக்கா தவிர்க்க முடியாது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அடிக்கடி நிதியுதவி வழங்கி வருகின்றது. 750 கோடி நிதியுதவி வழங்கும் ஆவணத்தில் ஒக்ரோபர் 15ம் திகதி ஒபாமா கையொப்பம் இட்டார். இது அமெரிக்காவின் பிந்திய நிதியுதவி.
இராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சி பலனளிக்காதது போலவே அரசியல் ரீதியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியும் திருப்திகரமான பலனைத் தரவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஹமிட் கர்ஸாய் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அப்துல்லாவிலும் பார்க்கக் கூடுதலான வாக்குகள் பெற்று வெற்றியீட்டினார். கர்ஸாய் பெற்ற வாக்குகள் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 54 வீதம் என அறிவிக்கப்பட்டது. கர்ஸாயின் வெற்றியை ஏற்க முடியாது என்ற சமிக்ஞையை அமெரிக்கா வெளிப்படுத்தியது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்குமான அமெரிக்கத் தூதுவர் றிச்சாட் ஹோல்புறூக் கர்ஸாயின் ஆதரவாளர்கள் பெருமளவு வாக்குத் திணிப்புச் செய்ததால் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பகிரங்கமாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுபெற்ற தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழு கர்ஸாயின் வாக்கு வீதத்தை 54 வீதத்திலிருந்து 48.6 வீதமாகக் குறைத்தது. தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவொன்று வெற்றிபெற்ற வாக்காளரின் வாக்கு வீதத்தைக் குறைத்துப் பிரகடனப்படுத்திய நிகழ்வு இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் இடம்பெறவில்லை. இந்த ஆணைக் குழு அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட்டதென்பது தெரிந்த விடயம்.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்பதை முழு உலகமும் அறியும். பெருமளவில் வாக்குத் திணிப்பு இடம்பெற்றது.
வாக்காளர்களாக 12 வயது நிரம்பாதவர்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர். அப்துல்லாவும் தேர்தல் முறைகேடுகள் பற்றி முறைப்பாடு செய்திருந்தார். எனினும் தேர்தல் முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரகடனம் அதிரடியானது.
ஆப்கானிஸ்தானின் தேர்தல் சட்டத்தின்படி, அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 50 வீதத்துக்குக் கூடுதலாக எந்தவொரு வேட்பாளரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று வாக்களிப்பு இடம்பெற வேண்டும். நவம்பர் 7ந் திகதி இரண்டாவது சுற்று வாக்களிப்பு இடம்பெறுமென அறிவிக்கப் பட்டது.
தேர்தல் ஆணையாளர் பக்கச்சார்பானவர் என்பதால் வாக்களிப்புக்கு முன் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்காததால் அப்துல்லா நவம்பர் 1ந் திகதி போட்டியிலிருந்து விலகினார். கர்ஸாய் தெரிவானதாகத் தேர்தல் ஆணைக்குழு பிரகடனப்படுத்தியது.
கர்ஸாய் அமெரிக்காவின் ஆள். அமெரிக்காவினால் ஜனாதிபதிப் பதவியில் இருத்தப்பட்டவர். அவர் தோற்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமல்ல.
அண்மைக் காலத்தில் கர்ஸாய் அமெரிக்கா கீறிய கோட்டுக்கு அப்பால் சென்று செயற்பட முற்பட்டதால், அவரை வழிக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனேயே அவரது தேர்தல் முடிவுகளைப் பற்றி அமெரிக்கா பிரச்சினைகளைக் கிளப்பியது. குறிப்பாக தேர்தல் பிரசார காலத்தில் அமெரிக்காவுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் விதத்தில் கர்ஸாய் நடந்துகொண்டார்.
அஹமட் ரiட் டொஸ்ரம் அமெரிக்காவினால் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதால் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறித் துருக்கியில் வாழ்ந்தவர். கர்ஸாய் அவரை அழைத்துத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தினார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் குவாஸிம் பாஹிம் போதைவஸ்துக் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்காவினால் உட்படுத்தப்பட்டிருப்பவர்.
இவரைத் தனது உப ஜனாதிபதியாக கர்ஸாய் பிரகடனப்படுத்தினார். இச் செயற்பாடுகளையிட்டுத் தனது அதிருப்தியைக் கர்ஸாய்க்குத் தெரியப்படுத்தும் நோக்கத்துடனேயே தேர்தல் முடிவு பற்றி அமெரிக்கா பிரச்சினை கிளப்பியது.
ஆப்கானிஸ்தானில் இன அடிப்படையிலேயே மக்கள் வாக்களிப்பார்கள் என்பதும் கர்ஸாய் பெரும்பான்மையான பஸ்தூன் இனத்தைச் சேர்ந்தவரென்பதால் இரண்டாவது சுற்று வாக்களிப்பிலும் தாஜிக் இனத்தைச் சேர்ந்த அப்துல்லாவிலும் பார்க்க அவர் கூடுதலான வாக்குகளைப் பெறுவார் என்பதும் அமெரிக்காவுக்குத் தெரியாதவையல்ல.
அமெரிக்காவின் சமிக்ஞை கர்ஸாயிடம் மாற்றம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. கர்ஸாய் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது அவருக்கு இரு புறத்திலும் டொஸ்ரமும் பாஹிம்மும் நின்றார்கள்.
இது அமெரிக்காவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் செயல். ஆனால் உடனடியாக அமெரிக்காவினால் எதுவும் செய்ய முடியாது. அதிரடி நடவடிக்கை பாதகமான விளைவுகளுக்கு வழிகோலலாம்.
ஆப்கானிஸ்தானை அமைதியற்ற பிரதேசமாக அமெரிக்கா ஆக்கியிருக்கும் பின்னணியிலேயே ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது.
ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பின் எட்டாவது ஆண்டு நிறைவுக்கு அடுத்த நாளிலேயே இப்பரிசு பற்றிய அறிவித்தல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
சங்கர சேயோன்

கிளோ குடியிருப்பு விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துமாறு கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது

நஸரத் - ஆக்கிரமிக்கப்பட்ட தென் ஜெரூசல நகரில் பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட

பலஸ்தீனர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளோ குடியிருப்பு


நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கிளோ (Gilo) குடியிருப்பை விரிவாக்கும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிய அமெரிக்காவின் வேண்டுகோளை இஸ்ரேலிய அரசு முற்றாக நிராகரித்துவிட்டது. டெல் அவிவாக இருந்தாலும் புனித நகரான ஜெரூசலமாக இருந்தாலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதைப் பொறுத்தவரையில் தான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்று அது குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவின் வேண்டுகோளுக்குப் பதிலளித்துப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரியொருவர், ‘கிளோ குடியிருப்பானது ஐக்கிய ஜெரூசலத்தில் ஓர் இன்றியமையாத பகுதியாகும்’ என்றும், ‘அதன் விரிவாக்கப் பணி ஒரு வழமையான செயற்திட்டமாகவே அமையும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் என யெடிஒத் அஹ்ரனொத் (Yedioth Ahronoth) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் கிளோ குடியிருப்பின் கட்டுமானப் பணிகளுக்கான வரைவுத் திட்டத்தை அங்கீகரிக்கும்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல்
முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவது குறித்து அமெரிக்க நிர்வாகத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல் (George Mitchell) இஸ்ரேலியப் பிரதமரின் ஆலோசகர் யிட்சாக் மொல்ச்சோ(Yitzhak Molcho)வுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்ததாக அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருந்தது.
மேற்படி குடியிருப்பு விரிவாக்கச் செயற்பாடானது பலஸ்தீன் அதிகார சபையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பின்னடையச் செய்யும் அபாயம் உள்ளது என மிச்சேல் தெரிவித்துள்ளார்.
நன்றி: PIC

போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும்.- முன்னாள் US அட்டர்னி ஜெனரல்


ராம்சே கிளார்க்? அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்.இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க்.சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்ஸ.?சர்வதேச சமூகம்? என சமகால அரசியலில் பரவலாக பயன் படுத்தப்படுகின்ற சொற்றொடர், அமெரிக்காவின் ?புதிய உலக நியதி?யை பரப்பவும், அதன் நலனை மேம்படுத்தவும் பயன் படுத்தப்படும் மாற்றுப் பெயர் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா?பரவலான உலகமயமாக்கலையும், பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டு, செயல்படக் கூடியவர்கள், உலகம் உளரீதியாக ஒருங்கிணைந்த சமூகமாக உணர்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களது செயல் திட்டத்தை எளிதாக்கி விடுகிறது.படு வேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கலும் அதனோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ள அமெரிக்க ரீதியிலான முதலாளித்துவம், உலகம் நெடுக புதிய ஏற்றத்தாழ்வுகளைப் பல்கிப் பெருக வைத்துள்ளன. இந்தச் சூழல் குறித்து தங்கள் கருத்துஸ?இதனை உலக நாகரீகத்திற்கும், மனிதத்துவத்திற்கும் எதிரான மிகப் பயங்கரமான அபாயமாக நான் கருதுகிறேன். இந்த அபாயம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியானதும் கூட என்பது வெளிப்படை. இவற்றையெல்லாம் விட அடிப்படையாக சாதாரண மட்டத்தில் சொல்லப்போனால், ஒரே விதமான தொழில்நுட்பம், ஒரே விதமான பொழுது போக்கு தனித்துவம் கொண்ட ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பேராபத்தாகும்.தனது பொருளாதார சக்தியின் மூலம் உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்கா சித்தாந்த ஊடுருவல் செய்கிறது. ?வியாபாரமயமாக்கல்? மற்றும் ?பொருள் முதல் வாதம்? முதலியவை மிகப் பெரும் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுவது சாதாரண மக்களது வாழ்வின் அம்சங்களான வலி, துயரம், அவர்களது வரலாறு மற்றும் அவர்களது கூட்டு கற்பனையின் வடிவமாகத் திகழும் ?கலாச்சாரம்? ஆகியவைதான்.ஆனால் வளர்ச்சியின் பெயரால் உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அமெரிக்க திட்டத்துக்கு எதிராக மாற்று வளர்ச்சித் திட்டங்கள் உலகின் பல பாகங்களில் உருக்கொள்கின்றனவேஸ..?உலகமயமாக்கலின்? தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன், உலகமயமாக்கலின் வீச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கலின் உண்மையான முகம் குறித்த அறிவு, அதனால் தனிப்பட்ட சமூகங்களுக்கு விளையக் கூடிய தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு ஆகியவை இத்தகைய மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதுகிறேன்.புதிய காலனித்துவத்தின் மற்றொரு வடிவாக உலகமயமாக்கல் பலராலும் கருதப்படுகிறது. இதனை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா?பழைய ஏகாத்தியபத்தியத்திற்கும் நவீன உலகமயமாக்கலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தியச் சூழலில் தெளிவாக காண முடியும். இந்த தேசம் அன்னிய ஆதிக்கத்தின் கொடூரங்களையும், சுரண்டல்களையும், அதனால் விளைந்த வறுமையையும் கண்டிருக்கிறது, ஆனால் படுவேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஊடுருவி வரும் புதிய மேலாதிக்கமாக உருக் கொண்டுள்ளது.உதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் திரைப்படங்களின் தோற்றத்தில் இந்தியத் தன்மை எடுப்பாகத் தெரிவதைப் பார்க்க முடியும். இப்பொழுதோ நகைச்சுவை, குணச்சித்திரம், இசை என எல்லாமே உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாறி வருகின்றன. இந்தப் போக்கு வியாபாரமயமாக்கலையும், பொருள் முதல் வாதத்தையும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை விட பயங்கரமானதாக ஆக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.பழைய காலனித்துவத்தில், குறைந்தபட்சம் நமது எதிரி யார் என்பது குறித்த தெளிவு இருந்தது. முதுகுக்குப் பின்னால் பதிக்கப்பட்டிருந்த கத்தி நம்மை உறுத்திக் கொண்டே இருந்தது. நமது வாழ்வை சீராக்கி என்ன செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருந்தது. புதிய வியாபாரமயமான உலகில் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்த உணர்வு நமக்கு முற்றுமாக இல்லை. அடிமைப்படுத்தப்பட்டிருப்பவனுக்கு, தன்னைப் பிணைத்திருக்கும் விலங்கு குறித்த உணர்வே இல்லையென்றால் விடியலுக்கான நம்பிக்கை எது? உலகமயமாக்கலின் தற்கால போக்கைப் பார்த்தால் மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் உலகமயமாக்கலுக்கு அடிமையாகி உள்ளன, இது மிகப் பெரும் அபாயமாகும்.இராக் மீதான அமெரிக்காவின் ?அத்து மீறிய ஆக்கிரமிப்பை? நீங்கள் பல அரங்குகளில் வலுவாக எதிர்த்துவருகிறீர்கள?கடந்த சிலமாதங்களில் இராக் குறித்த அமெரிக்காவின் அணுகு முறையில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா?இராக் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பில், அமெரிக்கா எண்ணிப் பார்த்திராத அளவிற்கு உயிரிழப்பையும், பொருளிழப்பையும் சந்தித்துள்ளது. மிக வலுவான ஆயுதமேந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா அன்றாடம் நேரிட வேண்டியுள்ளது. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா பெரும் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியாகி விட்டதுஸஎப்பொழுது பார்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் புரிந்து வருவதாக அமெரிக்கா சொல்கிறதே! அந்த ?பயங்கரவாதம்? அமெரிக்காவின் சுய உருவாக்கமா?பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும்,பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் இஸ்லாத்தின் தாக்கத்தைக் கண்டிராத அளவிற்கு இஸ்லாத்தைமுற்றுமாக துடைத்தெறிந்து விடுவதே அவர்களது உண்மையான நோக்கமாகும்.இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்?அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள்.பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்;இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம என்று சொல்கிறீர்களா?இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில்மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ?மார்க் குவைன்? என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ?தேவையில்லாத தேவைகள்? பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக்கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ?அணு ஆயுதம்? உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்? எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கையும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

இஸ்லாத்தை ஏற்ற கிரீஸ் நாட்டு யுவதி

நான் கிரீஸிலுள்ள ஏதன்ஸ் நக ரில் பிறந்தேன். எனது பெற்றோர் கிரேக்கப் பூர்வீகத்தைக் கொண்டவர் கள். எனது தந்தையின் குடும்பம் துருக் கியில் வசித்தது. எனது தந்தை பிறந்த தும் வளர்ந்ததும் அங்கே தான். அவரின் குடும்பத்தினர் செல்வந்தர் களாகவும் கல்வி கற்ற வர்களாகவும் பாரம்பரிய கிறிஸ்தவ மதத்தைப் பின் பற்றுபவர்களாகவும் வாழ்ந்தார்கள்.
துருக்கிய அரசாங்கம் திடீரென்று அங்கு வாழ்ந்த கிரேக்கப் பூர்வீகக் குடி மக்களை வெளியேற்றியதுடன் அவர் களது சொத்துக்கள் வியாபாரம் போன் றவற்றையும் அபகரித்துக் கொண்டது. எனவே, எனது தந்தையின் குடும்பத் தினர் வெறுங்கையுடன் கிறீஸுக்குத் திரும்பினார்கள். அதனால் அவர்கள் இஸ்லாத்தை வெறுத்தனர்.
எனது தாயின் குடும்பம் கிரீஸுக் கும் துருக்கிக்கும் இடையிலான எல்லையில் அமைந் திருந்த தீவொன் றில் வாழ்ந்து வந்தது. இத்தீவையும் துருக்கியர்கள் ஆக்கிரமித்ததோடு அங்கு வாழ்ந்த மக்களின் வீடுகளையும் எரித்தனர். இதனால் அம்மக்கள் கிரீஸுக்குத் திரும்பினார்கள். அவர் களும் முஸ்லிம்களையும் இஸ்லாத் தையும் வெறுத்தார்கள். கிரீஸை சுமார் 400 வருடங்கள் துருக்கியர்கள் தமது பிடியில் வைத்திருந்தனர். அவர்க ளுக்கு எதிரான துருக்கியர்களின் நடவடிக்கைகளினால் இஸ்லாம் பற் றிய தவறான விளக்கங்கள் எமக்கு கற் பிக்கப்பட்டன.
உண்மையில் இது கிரீஸ் பாரம் பரிய தேவாலயத்தின் விரிந்த திட்ட மாக இருந்தது. அதன்மூலம் முஸ்லிம் களை வெறுக்கக் கூடியவர்களாகவும், தமது மார்க்கத்திலிருந்து மக்கள் இஸ் லாத்திற்கு மாறுவதை தடுக்கவும் முயற்சித் தார்கள். எனவே, பல நூற் றாண்டுகளாக எமது வரலாறு பாடத் திலும் சமய பாடத்திலும் இஸ்லாத்தை வெறுக்கவும் கேலி செய்யவுமே கற்பிக்கப் பட்டோம்.
எங்களுடைய புத்தகங்களில் இஸ் லாம் என்பது உண்மையில் ஒரு மார்க் கம் அல்ல. முஹம்மத் (ஸல்) அவர் கள் ஒரு தூதர் அல்ல. அவர் விவேக மான ஒரு தலைவராகவும் கிறிஸ்தவ யூத மதங்களிலிருந்து சட்டங்களை ஒன்றுசேர்த்த அரசியல்வாதியாகவும் அவரது சில சொந்த சிந்தனைகளாலும் இந்த உலகத்தை அடிமைப்படுத்தினார் என்றே எழுதப்பட்டிருந்தது.
பாடசாலையிலும் நாங்கள் அவரை வைத்தும் அவரது மனைவி மார்கள் நண்பர்களை வைத்தும் கேலி செய்பவர்களாக இருந்தோம். இன்று ஊடகங் களில் வெளியிடப்படுகின்ற கேலிச் சித்திரங்கள் கார்டூன்கள் என்பவையே எமது பாட அத்தியாயங் களாகவும் பரீட்சைகளாகவும் இருந் தன.
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் இஸ்லாத்தை வெறுப்பதிலிருந்தும் எனது உள்ளத்தைப் பாதுகாத்தான். முஸ்லிம்கள் அல்லாஹ் தூதர்களை அனுப்பு வதன் மூலம் அவர்களுக்கு நேர்வழிக் காட்டினான் என்பதை நம்பினார்கள். ஆதம், நூஹ், இப்றா ஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மூஸா அலைஹி முஸ்ஸலாம் போன்ற நபி மார்கள் அனுப்பப்பட்டார்கள். அவர் களில் இறுதியாக முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி னான்.
எனது பெற்றோர் இருவரும் மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்காமை எனக்கு உதவியாக அமைந்தது. அவர்கள் மிக அரிதாகவே மத வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதேபோன்று திருமணங்கள் அல்லது மரணம் போன்றவற் றிற்கு மட்டுமே தேவாலயத்திற்கு என்னை அழைத்துச் செல்வார்கள்.
எனது தந்தை கிறிஸ்தவ பாதிரிமார் கள் செய்த குற்றங்களை அறிந்தார். அவர்கள் தேவாலயத்தின் பணத்தை திருடினார்கள் அதன்மூலம் அவர்க ளுக்கென பெரிய மாளிகைகளையும் நவீன கார்களையும் வாங்கினார்கள். அத்தோடு ஓரின பாலுணர்வையும் பரப்பினார்கள். இவர்கள் எவ்வாறு ஒரு மார்க்கத்தின் சட்டங்களை மதிக் கின்ற பிரதிநிதிகளாக, எங்களுக்கு வழிகாட் டுபவர்களாக இருக்க முடியும் என்று எனது தந்தை சிந்தித்தார். அதன் விளை வாக அவர் மனமுடைந்து ஒரு நாஸ்திகராக மாறினார். கிறிஸ்தவத் தில் பாதிரியாக வருவதென்பது மிகச் சிறந்த இலாபகரமான தொழிலாகும். இதனால் அதிகமான இள வயதினர் இந்த மார்க்கத்தைவிட்டும் வெளி யேறி வேறேதேனும் மார்க்கத்தைத் தேடுகின்றார்கள்.
நான் இளவயதை சேர்ந்தவள் என்றவகையில் அதிகமாக வாசிப் பதற்கு விரும்பினேன். ஆனால், கிறிஸ் தவ சமயப் புத்தகங்களில் எனக்கு நம்பிக் கையும் திருப்தியும் ஏற்பட வில்லை. நான் இறைவன் இருக்கின் றான் என்பதை ஏற்றுக் கொண்டேன். அவனுக்கு பயந்தேன். அவன் மீது அன்பு கொண்டேன். என்றாலும் எனக்கு எல்லாம் குழப்பமாகவே இருந்தது. நான் எல்லாப்பக்கமும் தேடலானேன். ஆனால், நான் இஸ் லாத்தைப் பற்றி தேடவில்லை. எனது ஆரம்பக் காலத்திலிருந்தே அதற்கெ திராக எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தமை அதற்கு காரணமாக இருக்கலாம்.
என்றாலும் அல்ஹம்துலில்லாஹ், அருளாளனான அவன் எனது பிரச்சி னையை தீர்ப்பதற்கு வழிகாட்டி னான். இருளிலிருந்து ஒளியை நோக் கிச் செல்வதற்கும் நரகத்திலிருந்து சுவனத்திற்குச் செல்வதற்கும் அவன் வழிகாட்டினான்.
அவன் எனக்கொரு பிறப்பிலே முஸ்லிமான ஒரு கணவனை தந்தான். எங்கள் இதயங்களிலே அன்பின் விதை களை விதைத்தான். நாங்கள் எமது மத வேறுபாடுகளை கவனத்திற்கொள்ளா மலே திருமணம் செய்தோம். எனது கணவர் எனது எல்லாக் கேள்விகளுக் கும் அக்கறையுடன் பதிலளித்தார். அவர் எவ்வித தாழ்வுமனப்பான் மையும் கொள்ளவில்லை. அத்துடன் என்மீது எவ்வித அழுத்தத்தையும் பிர யோகிக்காததுடன் என்னை மதம் மாறுமாறும் கேட்கவில்லை.
நாங்கள் திருமணம் முடித்து மூன்று வருடங்களுக்குப் பின்னால் இஸ்லாத் தைப் பற்றி அதிகமாக அறிவ தற்கும் அல்குர்ஆனை வாசிப்பதற்கும் சந்தர்ப் பம் கிடைத்தது. அத்தோடு ஏனைய மத புத்தகங்களையும் வாசிப் பதற்கு சந் தர்ப்பம் கிடைத்தது.
முஸ்லிம்கள் அல்லாஹ் ஒரே இறைவன் என்பதையும் அவன் வணக்கத் திற்கு தகுதியானவன் என்பதையும் அவனுக்கு பிள்ளைகளோ அவனுக்கு இணையானவர்களோ இல்லை என்றும் நம்புகின்றனர். வணங்குவ தற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும் நம்பு கின்ற னர். அவனது தெய்வீகத் தன்மை களை அவர் கள் எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. அல்லாஹ் அல்குர் ஆனில் அவனைப்பற்றி அவனே பின்வ ருமாறு கூறுகின்றான்: (112: 01-4)
நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். ஆனால், அதனை எனது குடும் பத்தி னரோ நண்பர்களோ அறியாது பல வருடங்கள் பாதுகாத்துக் கொண்டேன். நான் எனது கணவருடன் இஸ் லாத்தை செயற்படுத்துவதற்கு முயற்சித் தேன். ஆனால், அது மிகவும் கஸ் டமானதாகவும் சாத்தியமற்றதாகவும் இருந் தது. எனது பிறந்த நகரில் எவ் வித மஸ்ஜித்களோ அல்லது இஸ்லா மிய கற்கைகளுக்கான வாய்ப்போ அல் லது தொழுகின்ற மனிதர்களோ அல் லது நோன்பு நோற்கின்ற மனிதர் களோ அல்லது ஹிஜாப் அணிந்த பெண்களோ இல்லை.
மாற்றமாக சில வியாபாரத்திற்காக வந்த முஸ்லிம்கள் இருந்தனர். அவர் கள் மேற்கத்தேய வாழ்க்கை முறை யிலே வாழ்ந்தனர். அவர்களும் மோசடிகளில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அவர்களையோ அல்லது அவர்களது மார்க்கத் தையோ பின்பற் றுபவர்கள் எவரும் இருக்கவில்லை.
நானும் எனது கணவரும் கலண்ட ரைப் பார்த்துதொழுதோம். நோன்பு நோற் றோம். எங்களுடைய செவிக ளால் அதான் ஓசையைக் கேட்க வில்லை. இஸ்லாமிய சமூகம் எங்க ளுக்கு உதவவில்லை. அதனால், நாம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் எமது பழைய வாழ்க்கை நோக்கித் திரும்பிக் கொண் டிருந்தோம்.
எங்களுக்கு மகள் கிடைத்தபோது நாம் ஒரு தீர்மானத்தை எடுத்தோம். எங்களுடைய பிரச்சினைகளையும் எமது மகளின் பிரச்சினையையும் கவ னத்திற் கொண்டு நாங்கள் ஓர் இஸ்லா மிய நாட்டிற்கு இடம்பெயர்வதற்கு முடிவெடுத்தோம். அல்ஹம்துலில்லாஹ். அவன் எங்களுக்கு ஓர் இஸ் லாமிய நாட்டிற்கு இடம்பெயர்வதற் கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந் தான். அங்குதான் நாம் இனிமையான அதானின் வாசகங்களை செவிமடுத் தோம். எமது அறிவை அதிகரித்துக் கொண்டோம். அல்லாஹ்வையும் எமது அன்பிற்குரிய தூதரையும் நேசிக் கக் கற்றுக் கொண்டோம்.
islamonline.net
தமிழில்: பௌஹானா நுஸைர்

ஹமீட் கர்ஸாய் தனிமைப்படுகிறார்


ஓகஸ்ட் 20ம் திகதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஹமீட் கர்ஸாய் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி நியாயமான முறையில் பெறப்பட்டதல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இத்தேர்தல் அமெரிக்கா வகுத்த சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே நடைபெற்றது. அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை அமெரிக்கா அனுமதிக்காததால் வேட்பாளர்கள் தனிநபர்களாகவே போட்டியிட்டனர். ஹமீட் கர்ஸாயும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாவும் பிரதான வேட்பாளர்களாக களத்தில் நின்றனர்.
கர்ஸாய் இத்தேர்தலில் பலமுறைகேடுகளை நடாத்தி வெற்றிபெற்றுள்ளதாக அப்துல்லா ஊடகங்களுக்கு கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிச்சார்ட் ஹோல்புறூக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். கர்ஸாய் ஆட்கள் செய்த பெருமளவிலான வாக்குத் திணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாதென்று ஹோல்புறூக் கூறியிருப்பது முறைகேடுகள் இடம்பெற்றன என்பதை உறுதிப்படுதுகின்றது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பதிலும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதென்ற தகவல் இப்போது வெளிவருகின்றது. வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களில் இருபது வீதத்துக்கு மேற்பட்டோர் உரிய வயதெல்லையை அடையவில்லை என்று தேர்தலுக்கு பிந்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பன்னிரெண்டு வயதிற்குட்பட்டவர்க ளும் வாக்காளர்க ளாக பதிவு செய் யப்பட்டிருக்கின்றார் களாம். ஆப்கானிஸ்தானின் மூன்றிலொரு பகுதி இப்போதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருந்தனர். தேர்தலில் வாக்களிப்பவர்களின் விரல்கள் வெட்டப்படும் என்று அச்சுறுத்தியுமிருந்தனர். இந்த நிலையில் பெருந்தொகையானோர் வாக்களித்திருப்பார்கள் எனக் கருத முடியாது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தேர்தல் ஆணையம் நாற்பது வீதத்துக்கும் ஐம்பது வீதத்துக்கும் இடைப்பட்டோர் வாக்களித்திருப்பதாக கூறுகின்ற போதிலும் சுதந்திரமான கணிப்பீடுகள் இருபது வீதமென தெரிவிக்கின்றன.
கர்ஸாய் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் அப்பதவிக்கான முழு அதிகாரத்தையும் பிரயோகிப்பவராக இருப்பார் எனக் கருதுவதற்கில்லை. தேர்தலில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாகவும் வேறு காரணங்களுக்காகவும் அமெரிக்கா கர்ஸாயை ஓரங்கட்டுமென எதிர்பார்க்கலாம். கர்ஸாய் அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே ஆப்கானிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டவர். அவரை அமெரிக்காவே ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்தியது. இப்போது அவரைக் கைவிடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
தேர்தல் முறைகேடுகளையிட்டு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருப்பது கர்ஸாயை கைவிடுவதற்கு தயாராகுவதையே புலப்படுத்துகின்றது. தேர்தல் காலத்தில் முன்னாள் யுத்தக் குழுக்களின் தலைவர்களின் ஆதரவை கர்ஸாய் பெற்றிருப்பது அமெரிக்காவுக்கு உடன்பாடானதாக இல்லை. அஹமட் ரiத் டொங்டம் அமெரிக்காவினால் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் துருக்கிக்குச் சென்று வாழ்ந்து வந்தவர். இவரை கர்ஸாய் தேர்தலில் தனக்கு ஆதரவு தேடுவதற்காக ஆப்கானிஸ்தானுக்கு அழைத்தமை அமெரிக்காவுக்கு உடன்பாடானதாக இல்லை.
டொங்டம் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு வந்து கர்ஸாய்க்காக தேர்தல் பரப்புரை செய்தார். கர்ஸாயின் உப ஜனாதிபதியாக Running mate முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் முஹம்மட் காஸிம் பாஹிம் கர்ஸாயினால் நிறுத்தப்பட்டார்.
போதைவஸ்து கடத்தல் தொடர்பாக அமெரிக்கா பாஹிமுக்கு எதிராக விசாரணை நடத்துவது தெரிந்திருந்தும் கர்ஸாய் அவரை உப ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி யதையிட்டு அமெரிக்கா சீற்றமடைந்திருக்கின்றது. சுருக்கமாகக் கூறுவதானால் கர்ஸாயை தூரத்தில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துவிட்டது எனலாம். அதேநேரம் ஆப்கானிஸ்தானில் தனது பிடியை நெகிழ விடவும் அமெரிக்கா தயாராக இல்லை.
பிரதான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்துடன் கூடிய பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவரை நியமிப்பது பற்றி அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. கர்ஸாயின் அதிகாரத்தை நறுக்குவதே இந்த நியமனத்தின் நோக்கம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

thinakaran

இஸ்ரேலின் போர்க்குற்ற அறிக்கை ஐ. நாவில் சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைப்பு

காஸா மீது இஸ்ரேல் புரிந்த போர் குற்றங்கள் பற்றிய அறிக் கையை ஐ. நாவில் சமர்ப்பிப்பதற்கு தாமதம் காட்டப்படுவது குறித்து காஸாவை ஆளும் ஹமாஸ் அமை ப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கடும் ஆட்சேபனை வெளியிட்டுள் ளார் இஸ்ரேலின் போர்க்குற்றங் களை விளக்கும் கோல்ஸ்டோன் அறிக்கை ஐ.நாவின் சமர்ப்பிக் கப்படாமல் தாமதப்படுத்தப்பட்ட மைக்கு மேற்குலகமும் அதன் கூட் டாளியான பலஸ்தீனமும் காரண மென இஸ்மாயில் ஹனியா சொன் னார்.
கோல்ஸ்டோன் என்ற போர்க் குற்ற அறிக்கையை ஐ.நா. வின் மனித உரிமைகள் அமைப்பு தயாரித் தது. இதில் இஸ்ரேல் பிரதான குற் றவாளியாகக் கூறப்பட்டுள்ளதுடன் ஹமாசும் போர்க்குற்றங்களில் ஈடுப ட்டதாக இந்த அறிக்கை கூறுகின் றது.
இதை அரபு நாடுகளும் ஒப்ப மிட்டு அங்கிகரித்தன. ஆனால் ஐ.நா வில் இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட ஏற்பாடானபோது திடீரென இது ஒத்திவைக்கப்பட்டது மேற்குலகின் சதி முயற்சியே இதற்குத் காரண மென ஹமாஸின் தலைவர் இஸ் மாயில் ஹனியா குற்றம் சாட்டியு ள்ளதுடன் பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ¤ம் இதற்குப் பின்னாலுள்ள தாகக் கூறினார்.
பலஸ் தீனத்திலுள்ள 16 மனித உரிமைகள் அமைப்புகளும் இந்த அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிக் கப்படாமல் தாமதமானதைக் கண்டித்தன.
காஸா மக்களுக்கு இஸ்ரேலால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி வழங்கும் நடவடிக்கையை மேற் குலகம் தடுக்க முனைகின்றது. அப் பாவி மக்களின் வாழ்வியல் உரிமை களில் அவர்கள் விளையாடுகின்றனர். என மனித உரிமை அமைப்பின் அதி காரிகள் கூறினர்.
பலஸ்தீன பொரு ளாதார அமைச்சர் மேற்குலகின் இச்சதி நடவடிக்கையைக் கண்டித்து தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

காஸா ஒக்டோபர் ஏ. எப். பி

நான் ஏன் புஷ் ஷின் மீது செருப்பை வீசினேன் ?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.Muntazer al-Zaidi embraces his sister upon arrival at the Al-Baghdadya television station following his release from prison Photo: REUTERS

முன்தாஜர் அல் ஜெய்திநான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன..எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன் நன்றி . .போராட்டம் வலைப்பதிவு

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது/எடுத்துரைத்து யார்?



உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ்என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.


حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038


ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)
அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.


وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34


(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
(அல்குர்ஆன் 34 : 6)


-கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி
நன்றி : தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இணையத்தளம்

அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரிட தலீபான்களுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது

அமெரிக்க தலைமைத் தளபதி
வாஷிங்டன், செப். 23-
அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரிடுவதற்கு தலீ பான்களுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உதவி செய்து வருகிறது என்று அமெரிக்க இராணுவத் தலைமை தளபதி ஸ்டான்லி மெக்கிறிஸ்டைல் குற்றஞ் சாட்டினார்.
ஆய்வு அறிக்கை
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதியில் போர் நிலைமை குறித்து ஆய்வு நடத்தி தளபதி ஸ்டான்லி மெக்கிறிஸ் டைல் வெள்ளை மாளிகைக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது.
தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவன மான ஐ.எஸ்.ஐ. வெளிப்படையாகவும் தெள்ளத் தெளிவா கவும் உதவி அளித்து வருகிறது. குவாட்ஸ்போர்சஸ் என்ற ஈரானிய உளவு நிறுவனமும் தலீபான்களுக்கு உதவி அளி த்து வருகிறது.
போர்க்களத்தில் அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து போரி ட்டு வருபவர்கள் ஆப்கானிஸ்தானியர் தான். அவர்களை பாகி ஸ்தானில் உள்ள மூத்த ஆப்கானிஸ்தான் தலைவர்களால் வழிநடத்துகிறார்கள். பாகிஸ்தானில் இருந்தபடி அவர்கள் தலீபான் அமைப்பில் சேர்க்கப்படும் புதியவர்களுக்கு ஆயுதங்களை அனுப்பி வைப்பதிலும் பாகிஸ்தானில் உள்ள மூத்த தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் உள்ள தலீபான் மூத்த தலைவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் உதவி செய்து வருகிறார்கள். ஈரான் உளவுத்துறை அதிகாரிகளும் உதவி செய்து வருகிறார்கள்.

பெண்கள் கவனத்திற்கு…

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை:
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும்:
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.
கட்டுரை ஆக்கம்: சகோதரர் – சுலைமான் அவர்கள்

பிராந்தியத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாக ஆபிரிக்க மாநாட்டில் கடாபி சீற்றம்


ஆபிரிக்க நாடுகளிலிருந்து இஸ்ரேல் தூதரகங்களை வெளியேற்றுமாறு லிபிய ஜனாதிபதி கோரிக்கை
பிராந்தியத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதாக ஆபிரிக்க மாநாட்டில் கடாபி சீற்றம்
கெய்ரோ, செப்டம்பர் ஏ.எப்.பி
ஆபிரிக்க நாடுகளிடையே நிலவும் முரண் பாடுகள் இஸ்ரேல் யூத அரசாங்கத்தால் ஏற் படுத்தப்பட்டதாகத் தெரிவித்த லிபிய ஜனாதி பதி முஹம்மத் கடாபி இஸ்ரேல் தூதரகத்தை ஆபிரிக்க நாடுகளிலிருந்து வெளியேற்ற வேண் டுமென அழைப்பு விடுத்துள்ளார். லிபியத் தலை நகர் திரிபோலியில் ஆபிரிக்க நாடுகளின் மாநாடு ஆரம்பமானது.
இரண்டு நாள் மாநா ட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய லிபிய ஜனாதிபதி முஹம்மத் கடாபி ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத் தினார். பொதுவான நாணயம் பொதுவான வங்கி முறை பொதுவான இராணுவம் உள்ளி ட்ட அமைப்புகள் ஆபிரிக்க நாடுகளுக்கு அவசி யம். இந்நாடுகளுக்கு எல்லைகள் தேவையில்லை. எல்லைகளை நிர்ணயித்து எம்மை வேறாக்கியது சர்வதேசம் இந்த சதி வலையில் தொடர்ந்தும் நாம் சிக்க முடியாதென்றும் லிபிய ஜனாதிபதி உரையாற்றினார்.
சூடான் சாட் ஆகிய நாடுகளின் எல்லை முரண்பாடுகள் சூடானின் டர்புர் பிரச்சினை என்பவற்றைத் தீர்ப்பதற்கு ஆபிரிக்க யூனியன் பங்காற்ற வேண்டும். ஐ.நா.வின் தேவையில் லாத தலையிட்டை ஆபிரிக்க நாடுகளிலிருந்து நீக்குதல் உட்பட வெளிநாடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஆபிரிக்க நாடுகளை விடுதலை யளிப்பது பற்றியும் இம்மாநாட்டில் ஆலோசிக் கப்பட்டது.
சுமார் 53 நாடுகள் ஆபிரிக்க யூனி யனில் அங்கம் வகிக்கின்ற போது இம்மாநா ட்டில் முப்பது நாடுகளின் தலைவர்களே கலந்து கொண்டனர். சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷிரும் இம்மாநாட்டில் பங்கேற்றார். இவர் மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் எழுந்த நெருக்கடியான சூழலை ஆபி ரிக்க நாடுகள் ஒற்றுமையுடன் எதிர்நோக்கின. டர்புர் பிரச்சினைக்கான தீர்வு சூடான் அர சாங்கத்தின் கைகளில் உள்ளது என்பதை மாநாடு அழுத்திக் கூறியது.
லிபியாவின் நாற்பதாவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இடம் பெறும் வேளையில் இந்த மாநாடு ஆரம்பமா கியுள்ளது. திங்கட்கிழமை ஆரம்பமான ஆபிரி க்க நாடுகள் மாநாடு நேற்று செவ்வாய்க் கிழமை முடிவடைந்தது. லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் குற்றவாளியான லிபியப் பிரஜை விடுதலையானமையால் மேற்குலக நாடு களுடனான உறவை விஸ்தரிக்க லிபியா எண் ணியுள்ளது. இஸ்ரேலை நேரடியாகத் தாக்கிப் பேசியமையால் மேற்குலக நாடுகள் சில அதிருப்தி தெரிவித்துள்ளன.

ஆபாசத்திற்கு எதிரான அரசின் நடவடிக்ைககைள வரேவற்ேபாம்

மலிவான பாலியல் உணர்வுகைளயும் ஆபாசத்ைதயும் தூண்டும் வண்ணம்இலங்ைகயின் கலாசார சூழல் மிக ேமாசமாக மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.ெபௗதீக சூழல் மாசைடதல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்ைககள் அளவுக்குக்கூட, இக்கலாசார சூழல் மாசைடதைலக் கட்டுப்படுத்தும் நடவடிக்ைககள்ேபாதியளவு எடுக்கப்படாமேலேய இருந்து வந்தது.இலங்ைகயின் உயர் கலாசாரப் ெபறுமானங்கைள ேபணுவதில் அக்கைறெகாண்டிருந்த சக்திகள் இது குறித்து அடிக்கடி ேபசியும் எழுதியும்வந்திருக்கின்றன. எனினும், அைவ குறித்து நாட்டின் தைலைமேயா, அரசியல்தைலவர்கேளா, உ􀂾ய அதிகா􀂾கேளா ேபாதியளவு நடவடிக்ைகஎடுக்கவில்ைல. பல சந்தர்ப்பங்களில் இவற்ைறக் கண்டும் காணாதவைகயிேலேய இவர்கள் நடந்துெகாண்டனர்.இலங்ைக சமூகம் மிக ேவகமாக பண்பாடுகைளயும் உயர் ெபறுமானங்கைளயும் இழந்து, வழ்ீ ச்சிப் பாைதயில் ேவகமாக நைட ேபாட்டுக்ெகாண்டிருந்தது. இது குறித்து சமூக, சமயத் தைலவர்கள் மட்டுேம அக்கைறெகாண்டிருந்தனர்.ெபற்ேறார்கள் கூட என்ன ெசய்வது எனத் ெத􀂾யாது தடுமாறிக்ெகாண்டிருந்தனர். குறிப்பாக வள􀂾ளம் பருவ மாணவ, மாணவிய􀂾டம்ஆபாசமும் மலிவான பாலியல் உணர்வுகளும் மிக ேவகமாகத் ெதாற்றிக்ெகாண்டிருந்த ஒரு சூழலிலிருந்து, அவர்கைள எவ்வாறு மீட்பது எனத்ெத􀂾யாது குழம்பியிருந்த ெபற்ேறாருக்கு அரசாங்கம் அண்ைமக் காலமாகஎடுத்து வரும் நடவடிக்ைககள் மிகப் ெபரும் ஆறுதலாக அைமந்து வருகிறது.ஊடகங்களில் பாடசாைல மாணவ மாணவியர் குறித்த ஒரு சில விடயங்கள்மட்டுேம பகிரங்கமாகப் ேபசப்பட்டது. ஆனால், அந்தரங்கமாக இலங்ைகசமூகத்தின் எல்லா மூைல முடுக்குகளிலும் ஊடுருவியுள்ள இவ்வாறானநச்சு சூழைல எவ்வாறு தூய்ைமப்படுத்து வது என்பது குறித்து நன்கு அலசிஆராய ேவண்டும்.அரசு இப்ேபாது எடுத்து வரும் நடவடிக்ைககள் மிகவும் வரேவற்கத் தக்கைவ.ெவறும் ெபாருளாதார ஆதாயங்களுக்காகவும், ேவறுபல இழிந்தேநாக்கங்களுக்காகவும் இைளஞர் யுவதிய􀂾ன் கவனங்கைள ேவறு திைசேநாக்கித் திருப்பும் வைகயில் பல்ேவறு சக்திகள் இந்த ெவட்கக்ேகடானெசயல்களில் ஈடுபட்டு வந்தன. அவர்கைள ேகட்பார், பார்ப்பார் யாருமில்ைலஎன்ற ைத􀂾யத்தில் மனம் ேபான ேபாக்கில் அவர்கள் ெசயற்பட்டு வந்தனர்.இப்ேபாது அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்ைககள் இவ்வாறான தவறானெசயல்கைளக் கட்டுப்பாட்டின் கீழ் ெகாண்டுவர உதவும். அேதேவைள,இவ்வாறான ெகடுபிடிகள் அதிக􀂾த்தால் இந்த சக்திகள் ேவறு மாற்று வழிகள்மூலம் தமது ெவட்கக்ேகடான ெசயல்கைள முன்ெனடுக்க முயலும். எனேவ,அவற்ைறயும் அறிந்து தைடெசய்வது அவசியமாகும்.சட்டங்களால் மட்டும் இவ்வாறான அசிங்கங்கைளத் தடுத்து நிறுத்தமுடியாது. இதைன ஒழிப்பதற்கான மன விருப்பேம எல்ேலா􀂾லும்வளர்க்கப்பட ேவண்டும். ஆதலால், இலங்ைக சமூகத்தில் உயர்ெபறுமானங்கைள ஊட்டி வளர்ப்பதற்கான ஆன்மீகக் கல்விக்கு ெபரும்முக்கியத்துவம் ெகாடுக்கப்பட ேவண்டும்.இன்று சர்வேதச அளவில் உயர் மனிதப் ெபறுமானங்கைள சிைதப்பதற்கானசதித் திட்டங்கள் அரங்ேகற்றப்பட்டு வருகின்றன. எவ்வாறான புதிய புதியவழிகள் மூலம் தமது ெகட்ட ேநாக்கங்கைள அைடந்துெகாள்ள முடியுேமாஅவற்ைறெயல்லாம் முடிந்தவைர பயன்படுத்துவதற்கான நிறுவனம் சார்ந்தமுயற்சிகள் அரங்ேகறுகின்றன.இைணய வைலயைமப்பு உலகளாவிய தகவல் மற்றும் அறிவு வளர்ச்சிக்குப்ெபரும் பங்காற்றுவது ேபாலேவ, ஆபாச உணர்வுகைளத் தூண்டும் மலினமானேநாக்கங்களுக்கும் தீனி ேபாடுகிறது. ஆகேவ, சாதனங்கள், புதிய வழிமுைறகள்ஊடாக அைடயப் ெபறும் நன்ைமயான பக்கத்ைதேய நமது மக்களுக்கு நாம்வழங்க ேவண்டும். அழிவின் தூைத அவர்களிடம் ெகாண்டு ெசன்றுேசர்ப்பதால், வளரும் தைல முைற ஒன்ைற அதன் முைளயிேலேய கிள்ளிஎறியும் துேராகத்ைத ெசய்ததாகேவ மாறிவிடும்.உலகமயமாதலின் எதி􀂾ைடயான பக்கங்கைளப் பற்றிய ேபாதிய அறிவுஎமக்கு ேவண்டியுள்ளது. நவனீ சாதனங்கள் பற்றிய அறிவு ெபரும்பாலானெபற்ேறார்களிடம் இல்லாமல் இருப்பைத தவறான முைறயில் தமக்குவாய்ப்பாகப் பயன்படுத்தும் பிள்ைளகைள நாம் பரவலாகக் காண்கிேறாம்.ஆகேவ, மாற்றம் உள்ளங்களில் ஏற்படுத்தப்படுவது அடிப்பைடத்ேதைவயாகும்.அேதேபால புறச்சூழலும் இதற்கு சாதகமாக சிறந்த முைறயில்ஒழுங்கைமக்கப்பட ேவண்டும். இந்த வைகயில் அரசாங்கம் அண்ைமக்காலமாக ஆபாசத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்ைககள் மிகவும்வரேவற்கத்தக்கைவ. அதற்காக நாம் ஜனாதிபதிக்கு நன்றி கூறக்கடைமப்பட்டுள்ேளாம்.
மீல்பர்வி